
ரொம்ப நாளாக நீங்கள் யோசித்து, ஆலோசித்து கடைசியாக உங்கள் கனவான சொந்த வீட்டை வாங்கப் போகிறீர்களா? வீடு கட்டுவது மட்டுமல்ல, வீடு வாங்குவது கல்யாணப் பரபரப்புக்கு இணையானதுனால் எனச் சொல்லலாம்.
அந்தப் பரபரப்பில் வீட்டிற்குத் தேவையான அடிப்படையான சில விஷயங்களை மறந்துபோகக் கூடும். லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து வாங்கும் வீட்டில் சில விஷயங்களைக் கவனிக்கத் தவறி அது பெரும் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும்.
கொஞ்சம் நிதானமாகப் பொறுமையாக வீட்டைக் குறித்த உங்கள் எல்லாச் சந்தேகங்களையும் கேள்விகளை எழுப்பித் தெரிந்து, தெளிவுபெற வேண்டும். இதில் உங்களுக்குத் தயக்கமோ, கூச்சமோ வேண்டாம். பல லட்சம் ரூபாய் செலவு செய்து வீட்டை வாங்கும்போது நமக்குத் தெரிய வேண்டிய விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
அடுத்த விஷயம் வாங்கப் போகும் வீடு அமைந்திருக்கும் பகுதி. அது மிகவும் முக்கியம். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் இடமாகப் புது வீடு இருக்க வேண்டும். அலுவலகம், குழந்தைகளுக்கான பள்ளி ஓரளவு அருகில் இருக்க வேண்டும். பிறகு வீட்டுக்குத் தேவையான அன்றாட பொருட்களுக்கான கடைகளும் அருகில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் சுற்றுப்புறம் அமைதியாகவும், தூய்மையாகவும் இருப்பது அவசியம். முக்கியமாகப் பாதுகாப்பான பகுதியாகவும் இருக்க வேண்டும்.
பிறகு வீட்டை மேலோட்டமாகப் பார்த்து வாங்கத் தீர்மானிக்க வேண்டாம். வீட்டின் ஒவ்வொரு அறையையும் நன்கு பார்த்து உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்பதை யோசித்து முடிவுசெய்ய வேண்டும்.
வீடு வாங்குவது தொடர்பான ஆவணங்களைச் சரியாகப் பார்க்க வேண்டும். அதற்கான சட்டரீதியிலான பத்திரப் பதிவைச் செய்ய வேண்டும். அந்த வீடு தொடர்பான எல்லா ஆவணங்களும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாதா என்பதையும் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment