Tuesday, January 23, 2018

மரசெக்கு ஆயில் மில் துவங்கும் முன்

பகுதி: 1

மரசெக்கு ஆயில் மில் துவங்கும் முன் அறிந்துக்கொள்ள வேண்டியவை:

சிறுதொழில் -ன் நன்மைகள்:

#சிறிய அளவில் தொழில் செய்யும் போது அங்கு தரம்,சுத்தம்,ஞாயம், அக்கரை இருக்கும்.இருக்க வேண்டும், காரணம் ஒவ்வொரு முறையும் மக்கள் நேரடியாக வந்து பார்த்து வாங்கி செல்வர் மேலே குறிப்பிட்ட எவையேனும் குறையிருப்பின் உங்கள் பெயர் கெட்டுப்போகும்,உங்களை விட சிறப்பாக உள்ளவரிடம் போய்விடுவர்.
#சிறிய அளவில் செய்யும் போது பொருளும் உற்பத்தி செய்யும் ஆட்களும் , இடமும் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.
# மக்களுடன் நேரடியாக தொடர்பு வைத்திருப்பதால் அவர்களது குறைகளை கேட்டறிந்து அதற்கேற்றார் போல செய்து கொடுக்கலாம்...நமது பொருளின் தரத்தையும் தெரியபடுத்தலாம், இதனால் மக்களுக்கும் நமக்குமான தொடர்பு சிறப்பாக இருக்கும்.
# தொழிலில். வெளிப்படையாக இருக்க வேண்டும், மக்கள் சந்தேகங்கள் கேட்டால் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி தெளிவு படுத்தவேண்டும்.

தொழில் துவங்கும் முன்:

# நீங்கள் தொழில் துவங்க இருக்கும் இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வேறு யாரும் மரச்செக்கு வைத்துள்ளார்களா? என்று பார்கவும், அவர்களை பாதிக்காத வண்ணம் உங்களது உற்பத்தி அளவு அறிந்து அதற்கான மக்கள் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட எல்லையை தேர்வுசெய்க.

#EB line எவ்வளவு தொலைவில் உள்ளது என பார்துக்கொள்க. 3 phase line வேண்டும்.

# 3 HP மோட்டார் வேண்டும்.

# ஒரு செக்கிற்கு 10*12 அடி இடமாவது தேவை.

# காயவைக்க வெயில் படுமிடமாக 15*15 அடி இருந்தால் நலம்...

# எந்திரத்தின் விலை சுமார் 150000-200000 வரை ஆகும் gst சேர்தும், சேர்காமலும். மிசின் உற்பத்தியாளரை பொருத்து மாறுபடும்.

மரசெக்கு அமைக்க தேவையான தகுதி:

#நல்லெண்ணெய் க்கும்,கடலை எண்ணெய் க்கும் 1 லி எண்ணெய் எடுக்க சுமார் 2 3/4 கி முதல் 3 கி போட்டால் தான் கிடைக்கும்.( பொருளின் தரத்திற்கேற்ப இந்த அளவுகள் மாறுபடும்)

# ஒரு நாளைக்கு சுமார் 80 கி கடலை போட்டு ஆட்டினால் சுமார் 30 +/- கி எண்ணெய் மற்றும் 50 +/- கி புன்னாக்கு கிடைக்கும்.

# நாம் கலப்படமின்றி,தரமான மூல பொருளை போட்டு எண்ணெய் உற்பத்தி செய்யும் போது எண்ணெய்களின் விலை சந்தையில் விற்கும் எண்ணெய் களின் விலையை விட இருமடங்கும்,அதற்கு மேலும் இருக்கும்.

# எ.கா: 1 லி கடலை எண்ணெய் சந்தையில் 80 ரூ க்கு விற்கபடுகிறது நாம் 250 ரூ க்கு விற்க வேண்டி இருக்கும்.80 ரூ வாங்கிக்கொண்டிருக்கும் மக்களை 250/- ரூ க்கு வாங்க வைக்க வேண்டும்.

# எ.கா: உரலும் உலக்கையும் மரத்தால் ஆனதால் அதிகமாக  எண்ணெய் விதைகளில் இருந்து பிரிக்க முடியாது...100 க்கு 80% எண்ணெய்  ஐ தான் பிளிந்து எடுக்க முடியும் மீதமுள்ள 20% எண்ணெய் சத்துக்கள் புன்னாக்கில் தான் இருக்கும்...மனித நேயத்துடன் பார்த்தால் இதுதான் சரி...நமக்கு 80% மாட்டுக்கு20% சத்துக்கள்...இதை சாப்பிட்டால் மாடு ஆரோக்கிய மாக இருக்கும் அதனால் பால் ஆரோக்கியமாக இருக்கும் அதை பருகும் நாம் ஆரோக்கியமாக இருப்போம்...ரோட்டரி,எக்கசுபெல்லரில் ஆட்டும்போது அதிகமான பிரசர் மற்றும் அதிகமான வேகம் இவற்றால் எண்ணெய் ம் புன்னாக்கும் அதிகளவில் சூடேறி புன்னாக்கு சக்கையாகிவிடும் எண்ணெய் சத்துக்கள் முழுவதுமே பிழிந்துவிடபடும் எனவே சத்துக்கள் எதுவும் மாட்டிற்கு கிடைக்காது...ரோட்டரியிலோ,எக்சுபெல்லரிலோ  ஆட்டிய எள் புன்னாக்கு சந்தையில் ஒரு கிலோ 28 - 30 ரூ விற்கும், மரசெக்கில் ஆட்டிய புன்னாக்கு 23ரூ முதல் விற்கபடும்....நம் மக்களிடம் தரத்திற்கு மதிப்பு மிக மிக குறைவு, மரசெக்கு புன்னாக்கு மாட்டுக்கு வைக்க வேண்டுமானால் சுமார் 12 மணி நேரம் ஊரனும். இதுவே ரோட்டரி புன்னாக்காக இருந்தால் 1 மணி நேரத்திற்குள் ஊறிவிடும் இதனால் மக்கள் வாங்குவது குறைவு.

# இந்த விசயங்களை customer களுக்கு தெளியபடுத்தி விற்பனை செய்ய வேண்டும்...

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 லி எண்ணெய், 50 கி புன்னாக்கு எடுக்கலாம்...அன்றைக்கே இவற்றை விற்றுவிட வேண்டும்....இதுதான் சரி.

# இத்தொழில் 50% social service 50% business.செக்கு போடுவதற்கு முன் நீங்கள் தேர்வு செய்த ஏரியாவிற்குள் ஒரு நாளைக்கு ஒரு தெரு மக்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு மேலே கூறியவாறு மரசெக்கு எண்ணெய் குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்தவேண்டும்,மேலும் நமது ஏரியாவிற்கென தரமாக ,சரியான விலையில் கலப்படமின்றி விற்க போகிறேன் எவ்வளவு பேர் ஆதரவு அளிக்கிறீர்கள் என்று புள்ளிவிவரம் எடுத்துக்கொண்டு...(இதற்கு முன் நீங்கள் உங்கள் சுற்று வட்டாரத்திற்குள் அல்லது வெளியில் எள்,கடலை,தேங்காய் வாங்கி அருகில் உள்ள மரசெக்கோ அல்லது கல் செக்கிலோ அங்கேயே இருந்து ஆட்டி தயார் செய்து பாட்டில் போட்டு) இந்த எண்ணெய் ஐ பயன்படுத்தி பதில் கூறுங்கள் என்று ஒரு புள்ளி விவரம் சேகரியுங்கள்...ஒரு மாத்திற்கு நல்லெண்ணெய்,கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் மொத்தம் சுமார் 600 லி மேல் விற்றால் மட்டுமே நீங்கள் ஒரு செக்கு போடுவதற்கான தகுதியை அடைந்துள்ளீர்கள் என்று அர்த்தம்..இதற்கு ஒரு மாதமோ...ஆறுமாதமோ...ஒரு வருடமோ ஆகலாம்....அது நீங்கள் உண்மையை சொல்லி விழிப்புணர்வு எந்தளவிற்கு ஏற்படுத்தியுள்ளீர்கள் என்பதை பொருத்து...

# எப்பொழுது 600 லி தொடரீங்களோ அன்றைக்கே மெசின் ஆர்டர் கொடுத்துவிடலாம்...

# என்றைக்கு மெசின் வந்து இறங்குதோ அன்றிலிருந்து நீங்கள் எண்ணெய் ஆட்டுவதை தான் செய்ய வேண்டும்... இதற்குள்ளாக உங்களுக்கு எள்,கடலை,தேங்காய் வாங்குடம் இடம் தெரிந்துவிடும் பழக்கம் ஆகிவிடும்,ஆட்டிய எண்ணெய் விற்க ஆட்கள்( மக்கள் )ஏற்கனவே இருப்பர்,அதே போல புன்னாக்கு வாங்க ஆட்கள் இருப்பர்...அன்றன்றைக்கு ஆட்டும் எண்ணெய், புன்னாக்கு அளவு அன்றன்றைக்கே விற்றுவிடும்...

இதைத்தான் தகுதி என்றேன்.இந்த தகுதிவரும் வரும் மெசின் வாங்க வேண்டாம் இது கிராமம், டவுன் ல் உள்ளவர்க்கு, சிட்டி பொருத்தவரை புன்னாக்கு விற்பது கடிணம்...

Saturday, January 20, 2018

இயற்கை மரச்செக்கு எண்ணெய்

இயற்கை மரச்செக்கு எண்ணெய்

இன்று வரை என் தந்தை தன் முழுநேரப் பணியாக மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழிலில் உள்ளதாலும் என்னுடைய கடந்த பத்து ஆண்டு இயற்கை வாழ்வியல் தேடுதலின் அடுத்த கட்டமாயும் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றும் சமையல் பகுதியின் பிரதானமான எண்ணெய் வகையை நானே நேரடியாக அளிக்க அதன் முதல் படியாய் எங்களுடைய உற்பத்தி மரச்செக்கு எண்ணெய் வகைகளை ஒரே ஒரு லிட்டர் வாங்கி பயன்படுத்திப் பார்த்து முடிவை தங்கள் அனுபவத்தை கூறுங்கள்.

'வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு' என்ற பழமொழி முன்னாளில், வழக்கில் இருந்து வந்தது.

எதையும் ‘வரும் முன் காப்போம்’ என்பதே உண்மையான உடல்நலனின் அடிப்படை ஆகும்.

எந்த ஒரு நிலை வந்தாலும் தரத்தில் ஒருபோதும் குறை இன்றி வழங்கும் தீர்க்கமான முடிவால் கீழ்வரும் விவரங்களை உங்களுக்கு அளிக்கிறேன்.

எங்கள் மரசெக்கு கடலெண்ணய் ரூ. 240.00
மரசெக்கு நல்லெண்ணய் ரூ. 320.00
மரசெக்கு தேங்காய் எண்ணெய் ரூ. 260.00

உண்மையான விலை என்ன? எவ்வளவு? ஏன்?

கடலை எண்ணெய் தயாரிக்க ஆகும் செலவு
தரமான கடலை கிலோ ரூ.100/- (குறைந்தபட்சம் )
ஒரு லிட்டர் கடலை எண்ணெய் எடுக்க செக்கில் ஆட்டினால் 2 கிலோ 500 கிராம் கடலை தேவை.
ஆக 250.00ரூபாய்
ஆட்டுக்கூலி 40.00
மொத்தம் – 290.௦௦
புண்ணாக்கு கிலோ 60.00  ஆக கழித்தாலும் ஒரு கிலோ  230-250 ரூபாய்க்கு விற்க்க வேண்டும்
ஆனால் மிகக்குறைவாக அதாவது ரூ.130/- ரூ.160/- ரூ.190/- விலைகளில் விற்கப்படுகிறதே எப்படி?

நல்லெண்ணெய் ( எள்ளு எண்ணைய் ) தயாரிக்க ஆகும் செலவு

தரமான எள்ளு கிலோ ரூ.110/- (குறைந்தபட்சம் )
இதனுடன் பனங்கருப்பட்டி நூறு கிராம் சேர்க்க வேண்டும். பனங்கருப்பட்டி கிலோ ரூ 250/- ஒவ்வொரு கிலோ எள்ளுக்கும் நூறு கிராம் சேர்க்க ரூ 25/-
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் எடுக்க செக்கில் ஆட்டினால் 2 கிலோ 500 கிராம் எள்ளு தேவை.
ஆக 275+62.50=337.50 ரூபாய் + ஆட்டுக்கூலி+40.00  - புண்ணாக்கு 50 ஆக 320-330 ரூபாய்க்கு விற்க வேண்டும்
ஆனால் மிகக்குறைவாக அதாவது ரூ.130/- ரூ.160/- ரூ.190/- விலைகளில் விற்கப்படுகிறதே எப்படி?

தேங்காய் நான் சொல்லவே வேண்டாம்...தங்களுக்கே தெரியும்...

சிந்திப்போம்!
ஒரிஜினல் எண்ணெய் எது என்று மக்கள் தேடுவதில்லை, மாறாக விலை குறைவாக எங்கு கிடைக்கும் என்று தேடுவதால் வியாபாரிகள் கலப்பட எண்ணைய் விற்கிறார்கள். இதில் காலக்கொடுமை என்னவென்றால் தரமான எண்ணைய் என்ன கலரில், என்ன வாசனையில் இருக்கும் என்றே பலருக்கு தெரிவதில்லை. விலை குறைய குறைய அது நல்லெண்ணெய்யே இல்லை என்பதை உணர்வீர்களா..........!!!!!

மேலும் விளக்கமாக முழு விவரத்திற்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மொத்த மற்றும் சில்லறை விற்பனை உண்டு..
மேலும் விவரங்களுக்கு அணுகவும்:
A. Rajkumar
சென்னை – 600 119.
Mobile: 99529 46997 (Join our Whats up Group- Iyarkai Vaazhviyal) / 88254 49611.
மேலும் முழு விளக்கத்திற்கு E-mail: iyarkaiennai@gmail.com
FB: https://www.facebook.com/vidiyal.rajkumar
https://www.facebook.com/vidiyalwelfaretrust

Wednesday, January 17, 2018

சோன் பப்படி

டீலர்/டிஸ்டிரிபியூட்டர்ஸ் தேவை..!

சுவைமிகு 'சோன் பப்படி' விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் டீலர்கள் தேவை..!

முதலீடு ரூ. 10,000 முதல்...
ரூ.50,000 வரை..!

Diamond Trading
9380945727
9444781644

Tuesday, January 16, 2018

BILLING மற்றும் ACCOUNTING SOFTWARE

இலவசம்! இலவசம்! இலவசம்!

BILLING மற்றும் ACCOUNTING SOFTWARE முற்றிலும் இலவசம்

சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ஒரு நற்செய்தி

மிகவும் எளிதாக தமிழிலே நீங்கள் வாடிக்கையாளருக்கு BILL கொடுக்கலாம்

தமிழில் செய்முறை பயிற்சி தரப்படும்

சந்தையில் உள்ள முன்னணி SOFTWARE களில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் உள்ளது 

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும்

http://www.vinewtechnologies.com/pos_html.php?id=1

CONTACT
VINEW TECHNOLOGIES PVT LTD,
Viraganoor dam,Madurai-9
PH: 0452 2465033,+91 9159314333
contact@vinewtehcnologies.com
WWW.VINEWTECHNOLOGIES.COM

Sunday, January 14, 2018

விட்டமின்கள் மற்றும் மினரல்கள்

இவை உங்களது உடலில் கரையாமல் உள்ள கொழுப்புகள் மற்றும் புரோட்டினை கரைத்து, செரிமானத்தை எளிமையாக்குகிறது.


1. பப்பாளி

பப்பாளியில் அதிகளவு விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. இது உங்களது செரிமான பிரச்சனைகளுக்கு உதவியாக உள்ளது. இந்த பப்பாளியை நீங்கள் மிகச் சிறிதளவு எலுமிச்சை சாறை பிளிந்து சாப்பிடலாம். அல்லது ப்ரூட் சாலட்டுகளில் பப்பாளியை சேர்த்து சாப்பிடலாம்..!


2. யோகார்ட்

யோகார்ட் உங்களது செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நீங்கள் பால் பொருட்களை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்வதாலும் கூட உங்களது செரிமான மண்டலத்தை மேம்படுத்தலாம். யோகர்ட்டில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை உங்களது உடலில் கரையாமல் உள்ள கொழுப்புகள் மற்றும் புரோட்டினை கரைத்து, செரிமானத்தை எளிமையாக்குகிறது.


3. வெந்நீர்

சாப்பிட்டவுடன் குளிர்ச்சியான தண்ணீர் பருகுவதால், உணவில் கலந்துள்ள எண்ணெய் இறுகுகிறது. இதனால் செரிமானம் தாமதமாகிறது. எனவே நீங்கள் சாப்பிட்ட உடன் மிதமான சூடுள்ள நீரை பருகுங்கள் இதனால் உணவு சீக்கிரமாக உடைந்து, செரிப்பது எளிமையாகிறது.

கடினமான அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது வெந்நீர். இரவு உணவுக்குப் பின்னர், வெந்நீர் பருகுவதால், சிறு மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுகிறது. அதனால், மலம் இளகி, மலச்சிக்கல் நீங்கும். வயிற்று வலி, உப்புசத்தைத் தடுக்கும்.


4. க்ரீன் டீ

க்ரீன் டீ உடல் பருமனை குறைப்பதற்கு உதவுகிறது. கிரீன் டீயில் உள்ள பாலிபீனால் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பை ஆக்ஸிடைஸ் செய்கிறது. உடற்பயிற்சி செய்யும்போது, நம் உடலில் இதே செயல்தான் நடைபெறுகிறது.

தவிர இன்சுலின் சுரப்பை அதிகரித்து, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், 50 மி.லி கிரீன் டீ அருந்துவதால், செரிமானம் எளிதாகும். காலை மாலை என ஒரு நாளைக்கு 2 கப் க்ரீன் டீ என 100 மிலி அருந்தலாம்.


5. வெந்தயம்

வெந்தயம் நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. இதில் ஏ, சி, கே ஆகிய விட்டமின்கள் அடங்கியுள்ளன. மேலும், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது.

கெட்ட கொழுப்பை குறைக்கும். ஆன்டிஆக்ஸிடன்டுகளும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளதால், நாம் சாப்பிடும் அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. வெந்தையத்தை அப்படியே சாப்பிடுவதைவிட, இரவு தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.


6. சீரகம்

இரும்பு, கால்சியம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ள மூலிகைச் செடி சீரகம். மசாலா உணவுகள், பிரியாணி, அசைவ ரெசிபிக்களில் சுவை, மணம் கூட்டவும், செரிமானத்தை எளிதாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இரைப்பை அலர்ஜியை குணமாக்குகிறது; நுண்தொற்றுக்களிடம் இருந்து இரைப்பையின் உட்பகுதியைப் பாதுகாக்கிறது.

நாள்பட்ட செரிமானக் கோளாறால், மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.


7. ஓமம்

கிழக்கு இந்தியாவில் பயிரிடப்பட்ட ஓமச் செடி, அதன் அசிடிட்டி, செரிமானாக் கோளாறு ஆகியவற்றைப் போக்கும் தன்மையால், இந்தூர், ஆந்திரப் பிரதேசம் ஆகியப் பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ரஸ்க் உள்ளிட்ட, தின்பண்டங்களில் சேர்க்கப்படுகிறது.

ஓமத்தில் உள்ள தைமோல் (Thymol) பீனால், செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது. அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அது அரை டம்ளராக ஆகும் வரை சூடாக்கி, தினமும் காலை, மாலை பருகிவந்தால், வயிற்று மந்தம் குணமாகும்.


8. லவங்கம்

முதலில் சமையலில் சுவை, வாசனைக்காக உலகநாடுகளால் பயன்படுத்திவந்த லவங்கம், அதன் மருத்துவப் பலன்களால் புகழ்பெறத் தொடங்கியது. குறிப்பாக, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் செரிமானத்துக்கு உதவுகின்றன.

லவங்கம், செரிமான அமிலத்தால் வெளியாகும் வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் வாயுப்பிடிப்பு, வயிற்று உப்புசம், குமட்டல் உணர்வு (Nausea) நீங்கும். செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கும்.


9. புதினா

புதினா, வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் உள்ள ஸ்பிங்டர் சதையை (Sphincter muscle) ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் சாப்பிட்டவுடன் மலம்கழிக்கத் தூண்டும் 'இரிட்டபுள் பௌல் சிண்ட்ரோம்' தடுக்கப்படுகிறது.

மலக்குடலில் அமைந்திருப்பது 'TRPM8' என்னும் புரோட்டீன். இது, காரசாரமான மசாலா உணவுகளை உண்டு, அவை செரிமானமாகி, மலக்குடலில் பயணிக்கும்போது ஏற்படும். வலி மற்றும் எரிச்சலைப் போக்க உதவும். மசாலா உணவுக் கழிவுகள் மலக்குடலில் பயணிக்கும்போது இயல்பாகவே TRPM8, தனது வேலையைத் தொடங்கிவிடும்.

புதினாவை உணவில் சேர்ப்பதால், இது தூண்டப்படும். இதனால் வாயுபிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாகிவிடும்.​​​​​​​


10. இஞ்சி

நம் உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள், செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில், செரிமான அமிலம் (Hcl), கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல் (Bile). இந்த மூன்று திரவங்களின் சுரப்பையும் இஞ்சி ஊக்குவிக்கும்.

இஞ்சி, ஜிஞ்சரால் என்னும் மூலப் பொருளை உள்ளடக்கியது. இது, வயிற்றில் செரிமான அமிலமானது, உணவைக் கரைக்கும்போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல், உணவுக்குழாயில் தேங்கவிடாமல் ஏப்பம் மூலமாக வெளியேற்றுகிறது.

இஞ்சி கலந்த வெந்நீரை தினமும் காலை மாலை இருவேளையும் குடிக்கலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம். இதனால் செரிமானம் எளிதாகும்.


11. வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து அடங்கியுள்ளது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் இன்சுலின் இருக்கும். எனவே இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது உங்களது உணவுக்குழாயில் அதிகளவு அமிலங்கள் படிவதை தடுக்கிறது.

இந்த அமிலத்தன்மை அதிகரித்தால் அது வயிற்றில் எரிச்சலை உண்டாகும். நெஞ்செரிச்சலையும், செரிமான பிரச்சனைகளையும் உண்டாக்கும்.


12. முழுதானியங்கள்

நீங்கள் முழுதானியங்கள் உங்களது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்களது செரிமானத்தை அதிகரிக்கலாம். நீங்கள் முழுமையாக கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுங்கள். இதில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமானத்தை அதிகரிக்கும் பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை அதிகரிக்கும்.


13. கீரைகள்

பசுமையாக இருக்கும் உணவுகள் அனைத்துமே சத்தானவை தான். கீரைகளில் அதிகளவு விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் கே ஆகியவை உள்ளது. இவற்றில் உள்ள இனுலின் என்ற நார்ச்சத்து, ப்ரோபயோடிக் என்ற செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.


14. மஞ்சள்

மஞ்சள் பழங்காலமாகவே நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. அசைவத்தில் உள்ள கிருமிகளை அழிக்க மஞ்சள் சேர்க்கப்படுகிறது. நீங்கள் மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வருவதாலும், மஞ்சள் கலந்த பாலை குடிப்பதாலும் உங்களது செரிமானம் இயற்கையாகவே மேம்படுத்தப்படுகிறது.

சத்து மாவு தயாரிக்கும் முறை

சத்து மாவு தயாரிக்கும் முறை
சத்து மாவு தயாரிப்பு(Making sathu maavu in tamil)
சத்து மாவு உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
தேவையானவை அளவு
சோளம்      100 கிராம்
கம்பு                              25 கிராம்
தினை      25 கிராம்
கேழ்வரகு     100 கிராம்
கொள்ளு     50 கிராம்
பாசிப்பயறு      25 கிராம்
நெய்    100 மிலி
ஏலக்காய்த்தூள்    சிறிதளவு

சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.தண்ணீரை  நன்றாக  வடித்த பின்னர் அதை ஒரு வெள்ளை   துணியில் கட்டி 12 மணி நேரம் கட்டி தொங்க விட வேண்டும்.  மற்றும்  4 அல்லது 5 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது தண்ணீர்  தெளிக்க வேண்டும்.  பின்பு , தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைக்கலாம். அல்லது மிக்சியிலும் அரைக்கலாம், சுலபமான  சத்து மாவு தயார்.
சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.
     அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.
2)சத்து மாவு தயாரிக்கும் முறை
1.. பொட்டுக்கடலை, பார்லி, ஜவ்வரிசி, பாதாம் முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கும்,  சத்துமாவு தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை
ராகி                   2 கிலோ
சோளம்              2 கிலோ ,
கம்பு                   2 கிலோ ),
பாசிப்பயறு       அரை கிலோ ,
கொள்ளு          அரை கிலோ ,
மக்காசோளம்    2 கிலோ,
பொட்டுக்கடலை ஒரு கிலோ ,
சோயா                ஒரு கிலோ ,
தினை               அரை கிலோ ,
கருப்பு உளுந்து அரை கிலோ ,
சம்பா கோதுமை அரை கிலோ ,
பார்லி                 அரை கிலோ,
நிலக்கடலை       அரை கிலோ ,
அவல்                அரை கிலோ ,
ஜவ்வரிசி           அரை கிலோ ,
வெள்ளை எள்     100 கிராம் ,
கசகசா                 50 கிராம்,
ஏலம்                  50 கிராம் ,
முந்திரி              50 கிராம் ,
சாரப்பருப்பு         50 கிராம் ,
பாதாம்              50 கிராம் ,
ஓமம்                50 கிராம் ,
சுக்கு                   50 கிராம்,
பிஸ்தா            50 கிராம் ,
ஜாதிக்காய்          2 ,
மாசிக்காய்        2 ,

ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க  வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர்  சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும். அதை கால்கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.
        வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
பயன்கள்
இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
6 மாதம் கெடாது
சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.