பகுதி: 1
மரசெக்கு ஆயில் மில் துவங்கும் முன் அறிந்துக்கொள்ள வேண்டியவை:
சிறுதொழில் -ன் நன்மைகள்:
#சிறிய அளவில் தொழில் செய்யும் போது அங்கு தரம்,சுத்தம்,ஞாயம், அக்கரை இருக்கும்.இருக்க வேண்டும், காரணம் ஒவ்வொரு முறையும் மக்கள் நேரடியாக வந்து பார்த்து வாங்கி செல்வர் மேலே குறிப்பிட்ட எவையேனும் குறையிருப்பின் உங்கள் பெயர் கெட்டுப்போகும்,உங்களை விட சிறப்பாக உள்ளவரிடம் போய்விடுவர்.
#சிறிய அளவில் செய்யும் போது பொருளும் உற்பத்தி செய்யும் ஆட்களும் , இடமும் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.
# மக்களுடன் நேரடியாக தொடர்பு வைத்திருப்பதால் அவர்களது குறைகளை கேட்டறிந்து அதற்கேற்றார் போல செய்து கொடுக்கலாம்...நமது பொருளின் தரத்தையும் தெரியபடுத்தலாம், இதனால் மக்களுக்கும் நமக்குமான தொடர்பு சிறப்பாக இருக்கும்.
# தொழிலில். வெளிப்படையாக இருக்க வேண்டும், மக்கள் சந்தேகங்கள் கேட்டால் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி தெளிவு படுத்தவேண்டும்.
தொழில் துவங்கும் முன்:
# நீங்கள் தொழில் துவங்க இருக்கும் இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வேறு யாரும் மரச்செக்கு வைத்துள்ளார்களா? என்று பார்கவும், அவர்களை பாதிக்காத வண்ணம் உங்களது உற்பத்தி அளவு அறிந்து அதற்கான மக்கள் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட எல்லையை தேர்வுசெய்க.
#EB line எவ்வளவு தொலைவில் உள்ளது என பார்துக்கொள்க. 3 phase line வேண்டும்.
# 3 HP மோட்டார் வேண்டும்.
# ஒரு செக்கிற்கு 10*12 அடி இடமாவது தேவை.
# காயவைக்க வெயில் படுமிடமாக 15*15 அடி இருந்தால் நலம்...
# எந்திரத்தின் விலை சுமார் 150000-200000 வரை ஆகும் gst சேர்தும், சேர்காமலும். மிசின் உற்பத்தியாளரை பொருத்து மாறுபடும்.
மரசெக்கு அமைக்க தேவையான தகுதி:
#நல்லெண்ணெய் க்கும்,கடலை எண்ணெய் க்கும் 1 லி எண்ணெய் எடுக்க சுமார் 2 3/4 கி முதல் 3 கி போட்டால் தான் கிடைக்கும்.( பொருளின் தரத்திற்கேற்ப இந்த அளவுகள் மாறுபடும்)
# ஒரு நாளைக்கு சுமார் 80 கி கடலை போட்டு ஆட்டினால் சுமார் 30 +/- கி எண்ணெய் மற்றும் 50 +/- கி புன்னாக்கு கிடைக்கும்.
# நாம் கலப்படமின்றி,தரமான மூல பொருளை போட்டு எண்ணெய் உற்பத்தி செய்யும் போது எண்ணெய்களின் விலை சந்தையில் விற்கும் எண்ணெய் களின் விலையை விட இருமடங்கும்,அதற்கு மேலும் இருக்கும்.
# எ.கா: 1 லி கடலை எண்ணெய் சந்தையில் 80 ரூ க்கு விற்கபடுகிறது நாம் 250 ரூ க்கு விற்க வேண்டி இருக்கும்.80 ரூ வாங்கிக்கொண்டிருக்கும் மக்களை 250/- ரூ க்கு வாங்க வைக்க வேண்டும்.
# எ.கா: உரலும் உலக்கையும் மரத்தால் ஆனதால் அதிகமாக எண்ணெய் விதைகளில் இருந்து பிரிக்க முடியாது...100 க்கு 80% எண்ணெய் ஐ தான் பிளிந்து எடுக்க முடியும் மீதமுள்ள 20% எண்ணெய் சத்துக்கள் புன்னாக்கில் தான் இருக்கும்...மனித நேயத்துடன் பார்த்தால் இதுதான் சரி...நமக்கு 80% மாட்டுக்கு20% சத்துக்கள்...இதை சாப்பிட்டால் மாடு ஆரோக்கிய மாக இருக்கும் அதனால் பால் ஆரோக்கியமாக இருக்கும் அதை பருகும் நாம் ஆரோக்கியமாக இருப்போம்...ரோட்டரி,எக்கசுபெல்லரில் ஆட்டும்போது அதிகமான பிரசர் மற்றும் அதிகமான வேகம் இவற்றால் எண்ணெய் ம் புன்னாக்கும் அதிகளவில் சூடேறி புன்னாக்கு சக்கையாகிவிடும் எண்ணெய் சத்துக்கள் முழுவதுமே பிழிந்துவிடபடும் எனவே சத்துக்கள் எதுவும் மாட்டிற்கு கிடைக்காது...ரோட்டரியிலோ,எக்சுபெல்லரிலோ ஆட்டிய எள் புன்னாக்கு சந்தையில் ஒரு கிலோ 28 - 30 ரூ விற்கும், மரசெக்கில் ஆட்டிய புன்னாக்கு 23ரூ முதல் விற்கபடும்....நம் மக்களிடம் தரத்திற்கு மதிப்பு மிக மிக குறைவு, மரசெக்கு புன்னாக்கு மாட்டுக்கு வைக்க வேண்டுமானால் சுமார் 12 மணி நேரம் ஊரனும். இதுவே ரோட்டரி புன்னாக்காக இருந்தால் 1 மணி நேரத்திற்குள் ஊறிவிடும் இதனால் மக்கள் வாங்குவது குறைவு.
# இந்த விசயங்களை customer களுக்கு தெளியபடுத்தி விற்பனை செய்ய வேண்டும்...
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 லி எண்ணெய், 50 கி புன்னாக்கு எடுக்கலாம்...அன்றைக்கே இவற்றை விற்றுவிட வேண்டும்....இதுதான் சரி.
# இத்தொழில் 50% social service 50% business.செக்கு போடுவதற்கு முன் நீங்கள் தேர்வு செய்த ஏரியாவிற்குள் ஒரு நாளைக்கு ஒரு தெரு மக்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு மேலே கூறியவாறு மரசெக்கு எண்ணெய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்,மேலும் நமது ஏரியாவிற்கென தரமாக ,சரியான விலையில் கலப்படமின்றி விற்க போகிறேன் எவ்வளவு பேர் ஆதரவு அளிக்கிறீர்கள் என்று புள்ளிவிவரம் எடுத்துக்கொண்டு...(இதற்கு முன் நீங்கள் உங்கள் சுற்று வட்டாரத்திற்குள் அல்லது வெளியில் எள்,கடலை,தேங்காய் வாங்கி அருகில் உள்ள மரசெக்கோ அல்லது கல் செக்கிலோ அங்கேயே இருந்து ஆட்டி தயார் செய்து பாட்டில் போட்டு) இந்த எண்ணெய் ஐ பயன்படுத்தி பதில் கூறுங்கள் என்று ஒரு புள்ளி விவரம் சேகரியுங்கள்...ஒரு மாத்திற்கு நல்லெண்ணெய்,கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் மொத்தம் சுமார் 600 லி மேல் விற்றால் மட்டுமே நீங்கள் ஒரு செக்கு போடுவதற்கான தகுதியை அடைந்துள்ளீர்கள் என்று அர்த்தம்..இதற்கு ஒரு மாதமோ...ஆறுமாதமோ...ஒரு வருடமோ ஆகலாம்....அது நீங்கள் உண்மையை சொல்லி விழிப்புணர்வு எந்தளவிற்கு ஏற்படுத்தியுள்ளீர்கள் என்பதை பொருத்து...
# எப்பொழுது 600 லி தொடரீங்களோ அன்றைக்கே மெசின் ஆர்டர் கொடுத்துவிடலாம்...
# என்றைக்கு மெசின் வந்து இறங்குதோ அன்றிலிருந்து நீங்கள் எண்ணெய் ஆட்டுவதை தான் செய்ய வேண்டும்... இதற்குள்ளாக உங்களுக்கு எள்,கடலை,தேங்காய் வாங்குடம் இடம் தெரிந்துவிடும் பழக்கம் ஆகிவிடும்,ஆட்டிய எண்ணெய் விற்க ஆட்கள்( மக்கள் )ஏற்கனவே இருப்பர்,அதே போல புன்னாக்கு வாங்க ஆட்கள் இருப்பர்...அன்றன்றைக்கு ஆட்டும் எண்ணெய், புன்னாக்கு அளவு அன்றன்றைக்கே விற்றுவிடும்...
இதைத்தான் தகுதி என்றேன்.இந்த தகுதிவரும் வரும் மெசின் வாங்க வேண்டாம் இது கிராமம், டவுன் ல் உள்ளவர்க்கு, சிட்டி பொருத்தவரை புன்னாக்கு விற்பது கடிணம்...