Tuesday, March 27, 2018

பட்டா வாங்குவது

பட்டா வாங்குவது எப்படி ?
============================
நிலத்தை வாங்குவதில் பத்திரப்பதிவு செய்தால் மட்டும் போதுமானது இல்லை. அதை முறையாக வருவாய்த் துறையில் பதிவுசெய்து பட்டா பெற வேண்டும். ஆக பத்திரப்பதிவு போல பட்டாவும் அவசியமான ஒன்று. ஒரு சொத்தை வாங்கும்போதோ நமக்கு வாரிசு உரிமைப்படி எழுதி வைக்கப்படுவதாக இருந்தாலோ அந்த நிலத்தின் பட்டாவை நம்முடைய பெயரில் மாற்றம் செய்ய வேண்டும்.

பட்டா பெறுதல் எப்படி?
-----------------------------------
நாம் வாங்கிய சொத்து/நமக்குக் கிடைக்கப்பட்ட சொத்து எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்பந்தமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் >www.tn.gov.in/LA/forms என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. இந்த விண்ணப்பத்தை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பிறகு பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்.

ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நமக்கு செய்து கொடுக்கப்பட்வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தின் விவரங்கள்
---------------------------------------------
விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார்/கணவர் பெயர், இருப்பிட முகவரி, பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் (அதாவது மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண்/மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு மனை எண், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்), மனை அங்கீகரிக்கப்பட்டதா, அங்கீகாரம் இல்லாத மனையா, என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பிறகு சொத்து எந்த வகையில் விண்ணபதாரருக்குக் கிடைக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட சொத்தை விண்ணப்பதாரர் அனுபவித்து வருவதற்கான சான்றுகளையும் இணைக்க வேண்டும். அதாவது சொத்து வரி ரசீது, மின் கட்டண அட்டை, குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்ற சான்றுகளில் ஒன்றை இணைக்க வேண்டும்.

பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டும்.

தங்கள் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். குறித்த காலத்துக்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்.

நன்றி - தமிழ் தி ஹிந்து

Wednesday, March 7, 2018

ஃப்ரீலான்ஸராக வருவாய் ஈட்ட அதிக வாய்ப்புள்ள 10 துறைகள்!

தற்போது ஃப்ரீலான்ஸராக வருவாய் ஈட்ட அதிக வாய்ப்புள்ள 10 துறைகள்!
20ஆம் நூற்றாண்டுகளில் ஒருவர் தொழில் செய்ததைக் காட்டிலும், தற்போதைய காலத்தில் தொழில் புரிவோர் பல சவால்களை சந்திக்கவேண்டி உள்ளது. போட்டி பல அளவுகளில் உயர்ந்துள்ளது. இதனால் தொழில் உரிமையாளர்களின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை எதிர்த்து போராடவும், தங்களின் செலவினங்களை குறைத்துக்கொள்ளும் விதத்திலும் நிறுவனங்கள் செயல்பட தொடங்கிவிட்டன. அதற்கான முதல் அடி, முழுநேர ஊழியர்களை விட ஃப்ரீலான்சர்ஸ் அதாவது வேலையின் தேவைக்கேற்ப ஆட்களை அந்த பணிக்கு மட்டும் நியமித்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

இது நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்துவதாக நம்புகின்றனர் நிறுவனங்கள். அதே சமயம், ஃப்ரீலான்சர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. வீட்டிலிருந்தபடி சம்பாதிக்க எண்ணுவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நீங்கள் ஃப்ரீலான்சராக பணியாற்றி சம்பாதிக்க வழி காட்டும் 10 துறைகள் இதோ...

உள்ளடக்க எழுத்தாளர் (Content writing)

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் எழுதப்படும் எல்லா எழுத்துக்களும், கணினியின் முன் உட்கார்ந்து யாரோ எழுதிய ஒருவரின் படைப்பாக இருக்கும். ஆயிரக்கணக்கான தளங்கள், பல நாளிதழ்கள், ப்ளாகுகள் மற்றும் மாத இதழ்கள் உள்ளன, அதில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்பை பற்றி யோசியுங்கள். ஒரு கண்டெண்ட் எழுத்தாளராக ஆக, நீங்கள் மொழியின் ஆளுமையை பெற்று, இலக்கணத்தை நன்கு தெரிந்து கொண்டு, உங்கள் எழுத்து திறமையை கூர் ஏத்துங்கள். அப்போதுதான் உங்கள் எழுத்துக்களுக்கு வருமானம் ஈட்டமுடியும். இந்தியாவில் சுமாரான ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்கள் வருடத்திற்கு 1.8லட்சம் வரை சம்பாதிக்கின்றனர், இதுவே நல்ல எழுத்தாளர்களுக்கு 10-15 மடங்கு அதிகம் கிடைக்கிறது.

கிராபிக் டிசைனிங் (Graphic designing)

எழுத்தை போலவே, கிராபிக் டிசைன் செய்யத் தெரிந்தால் நீங்கள் தனிச்சையாக பணிகள் எடுத்து செய்யமுடியும். அவர்களுக்கு சந்தையில் தேவை அதிகமுள்ளது. பல டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், வலைதளங்கள், நாளிதழ்கள் மற்றும் மாத இதழ்கள், திறமையான கிராபிக் டிசைனர்களுக்கு பணிகள் கொடுக்க தேடி வருகின்றனர். ஆனால் நீங்கள் அழகிய டிசைன்களை குறைந்த நேரத்தில் முடித்துக்கொடுக்கும் வல்லவராக அதற்கு இருக்கவேண்டும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், போட்டோஷாப் மற்றும் அதை சார்ந்த சில சாப்ட்வேர்களை கற்று தேர்ந்திருக்கவேண்டும். இதற்கான வாய்ப்புகள் சந்தையில் அதிகமாக உள்ளது.

வலைபதிவர்கள் (Blogging)

நீங்கள் உங்கள் சொந்த ப்ளாகை தொடங்கலாம், அல்லது வேறு ஒருவருடைய வலைதளத்தில் பதிவுகள் செய்து வருமானம் ஈட்டலாம். தனிச்சிறப்புள்ள தலைப்புகளில் எழுத தேர்ந்திருந்தால் இதில் நல்ல வாய்ப்பு உள்ளது. முக்கியமாக, தொழில்நுட்பம், ஃபேஷன், பயணம், கேளிக்கை மற்றும் தனிப்பட்ட நிதி ஆகிய துறைகள் பற்றி எழுதும் வல்லமை இருந்தால் அதற்கு அமோக வரவேற்பு உள்ளது. இதில் சம்பாதியத்தை பொருத்தவரை வானமே எல்லை. நீங்கள் கிட்டத்தட்ட 50-60 லட்சம் வரை ஒரு வருடத்தில் ஈட்டமுடியும். சிலர் இந்த தொகையை ஒரே மாதத்தில் சம்பாதித்தும் விடுவர்.

சமூக ஊடக மார்க்கெட்டிங் (Social media marketing)

கடந்த பத்தாண்டில், ட்விட்டர், ஃட்ஸ்புக், லிங்க்ட் இன், பிண்ட்ரெஸ்ட், இன்ஸ்டாக்ராம் மற்றும் ரெட்டிட் ஆகியவை சமூக ஊடக தளங்களில் பெரும் இடத்தை பிடித்துள்ளது. தொழில் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள சமூக ஊடகங்களை நாடுகின்றனர். அதற்கு வழிவகை செய்வோர்களே சமூக ஊடக வல்லுனர்கள். இதற்கு தொழில்நுட்ப வல்லமை ஏதும் தேவையில்லை, வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ள உதவினால் போதுமானது.

வெப் டெவலப்மெண்ட் (Web development)

இப்போதுள்ள நிறுவனங்கள் அனைத்திற்கும் வெப்சைட் இல்லாமல் இல்லை. அதற்கு வெப்சைட்டின் பின்புலத்தில் இருந்து பணிபுரிய ஆள் தேவைப்படுகின்றனர். வெப்சைட் வேகமாக செயல்பட, அவ்வப்போது அப்டேட் செய்ய என்று அதில் வல்லுனர் ஒருவர் கண்காணிக்க வேண்டியுள்ளது. அந்த இடத்தை நிரப்ப வெப் டெவலப்பர் தேவை அதிகமாகிறது. இது ஒரு தனிச்சையாக செய்யக்கூடிய பணியே அதனால் அதில் வல்லமை படைத்தவராக நீங்கள் இருந்தால், தினமும் ஒரு சில நேரம் மட்டும் செலவிட்டு நல்ல வருமான ஈட்டமுடியும்.

பின்னணி குரல் கலைஞர் (Voice-over artists)

மக்கள் விரும்பி கேட்கக்கூடிய நல்ல குரல் உங்களுக்கு இருக்கிறதா? விளம்பரங்கள் முதல், கார்ப்பரேட் வீடியோ வரை பின்னணி குரல் கலைஞர்களுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. அதற்கான சம்பளமும் நன்றாகவே உள்ளது. நல்ல பேச்சுத்திறன், அழகிய குரல்வளம், இவை இருந்தால் நீங்கள் வாய்ஸ் ஓவர் என்று சொல்லப்படும் துறையில் முயற்சி செய்யலாம்.

தேடு இயந்திர தேர்வுமுறை (Search engine optimisation)

ஆன்லைனில் நீங்கள் வருமான ஈட்ட, குறிப்பிட்ட இணையதளத்திற்கு பார்வையாளர்களின் ட்ராபிக் அத்தியாவசியமாக இருக்கிறது. அதற்கு சர்ச் எஞ்சின் அதாவது தேடு இயந்திரங்களான யாஹூ, பிங், கூகிள் மற்றும் சமூக ஊடக தளங்கள் அதிக பார்வையாளர்களை கொண்டு சேர்க்கும். இதற்கு ப்ரீலான்சாக பணிபுரியும் எஸ்இஒ (SEO) வல்லுனர்களை நிறுவனங்கள் அவ்வப்போது பணியமர்த்திக் கொண்டு தேவையான வேலையை பெற்றுக்கொள்வர். இன்றைய காலகட்டத்தில் SEO தெரிந்திருந்தால் நீங்கள் நல்ல வருமான ஈட்டமுடியும்.

மொழிபெயர்ப்பு (Translation)

உங்களுக்கு ஒரு மொழிக்கு மேல் நன்கு படிக்க, எழுத, பேச தெரிந்திருந்தால் நீங்கள் ஒரு மொழிப்பெயர்ப்பாளர் ஆகலாம். ஏனெனில் மொழிப்பெயர்ப்பு துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளது. பிராந்திய மொழி வல்லமை மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் உங்களால் நல்ல ஒரு வருமானத்தை ஈட்டமுடியும். மொழிப்பெயர்ப்பு பணிகள் பெரும்பாலும் ப்ரீலான்சாக செய்பவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.

நிர்வாகிகள் தேடு வல்லுனர்கள் (Executive search specialist)

நிறுவனங்களுக்கு தேவையான, பாங்கான ஊழியர்களை நீங்கள் அடையாளம் கண்டு கொடுக்கமுடியும். எச்ஆர் எனப்படும் மனிதவளத்துறைக்கு அவ்வப்போது அவர்களின் தேவைக்கேற்ப நிர்வாகிகளை தேடிப்பிடித்து பணிக்கு அனுப்பிவைக்க உங்களால் முடிந்தால், அதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதற்கும் வானமே எல்லை, அதிக தொடர்பு உள்ளோர் இந்த பணியை இடைவிடாமல் முழுநேரமாக அலுவலகம் செல்லாமலே வீட்டிலிருந்தே செய்தால் வருமானம் உங்களை தேடி வரும்.

செயலி உருவாக்கம் (App development)

இணையதள உருவாக்கம் போலவே ஆப் டெவலப்மெண்ட் இன்று பெரிதும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு துறையாக உள்ளது. இதில் நீங்கள் நல்ல வருமான ஈட்டமுடியும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதற்கு கொஞ்சம் திறமைகள் தேவை. மொபைல் யுஐ டிசைனிங், பாக்எண்ட் கம்ப்யூட்டிங், ப்ரோக்ராமிங் மற்றும் சில தகுதிகள் செயலி உருவாக்க தேவைப்படுகிறது. இதை நீங்கள் சுலபமாக கற்றறியமுடியும். வருங்காலமே செயலிகளை நம்பி இருக்கும் இந்த வேளையில் அதை உருவாக்க நீங்கள் தெரிந்திருந்தால், ப்ராஜெக்ட் அடிப்படையில் பணிகள் எடுத்துக்கொண்டு வருமானம் ஈட்டமுடியும்.

இந்தியாவில் ப்ரீலான்சிங் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. உங்களுக்கு தனித்திறமை இருந்தால், நிறுவனங்களோடு நல்ல தொடர்பும், இணக்கமும் இருந்தால் பலவித பணிகளை வீட்டில் இருந்தே முடித்துக்கொடுத்து நிலையான வருமானத்தை நீங்கள் சம்பாதிக்கமுடியும்.
ஆங்கில கட்டுரையாளர்: புபேந்திர ஷர்மா

Sunday, March 4, 2018

சமையல் கேஸ் உபயோகிப்பாளர்களின் மேலான கவனத்திற்கு!*

*பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்*

கூடுதல் தொகையை கொடுக்க மறுப்போம்!
            கூட்டுக் கொள்ளையை கூடித் தடுப்போம்!!

*சமையல் கேஸ் உபயோகிப்பாளர்களின் மேலான கவனத்திற்கு!*

*பாரத் கேஸ், எச்.பி. கேஸ் மற்றும் இண்டேன் கேஸ்* ஆகியவற்றை விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் பில்லில் குறிப்பிட்ட தொகையை விட *₹ 50* கூடுதலாக வசூலிப்பது வழக்கமாகி விட்டது. இந்த அநியாயத்தை தட்டிக்கேட்டு கூடுதல் தொகை தர மறுத்தால், *கேஸ் சிலிண்டர் தர மாட்டோம்; நேரடியாக நீங்கள் கேஸ் ஏஜென்சியிடம் போய் தான் எடுக்க வேண்டி வரும்; வீடு பூட்டியிருந்தது என்று சொல்லி கேஸை விநியோகிக்காமல் சென்று விடுவோம்* என்று பலவாறு மிரட்டுகின்றனர்.

இம்மிரட்டல்களுக்கு அஞ்ச தேவையில்லை...! கேஸ் சிலிண்டரை விநியோகிக்காமல் செல்ல அவர்களுக்கு அதிகாரம் இல்லை !!

நமதூரில் பல வீடுகளில் ₹ 50 கூடுதல் தொகை கொடுக்க முடியாது எனக்கூறி விட்டனர். இருந்தும், அவர்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது! ஆகையால், கவலை வேண்டாம்!!

கூடுதலாக பணம் கேட்பவர்களிடம், நாம் அனைவரும் ஒரே மாதிரியாக *- ஊர் ஜமாஅத்தில் கொடுக்கக்கூடாது -* என தீர்மானித்துள்ளனர் எனக்கூறினால் முற்றிலுமாக இந்த கொள்ளையை ஒழித்து விடலாம்.

நமதூரில் மட்டும் சுமார் 150 சிலிண்டர்கள் தினசரி விநியோகிக்கப்படுகின்றன. 150 x ₹ 50 = ₹ 7,500 தினமும் கொள்ளை போகின்றது; மாதத்திற்கு  இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் (₹ 2,25,000) கொள்ளை; நாம் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இரத்தத்தை வியர்வையாக்கி சம்பாதிக்கும் பணம் அநியாயமாக  கொள்ளை போக அனுமதிக்க வேண்டாம்.

நாம் நேரடியாக மூன்று கேஸ் கம்பெனிகளுக்கும் பொதுவான இலவச தொலைபேசி எண்ணை toll free ( *18002333555* ) தொடர்பு கொண்டு தமிழிலேயே புகார் செய்யலாம்.
18002333555 ->
தமிழுக்கு எண் 5 ->
இண்டேனுக்கு எண் 1; எச்.பி.க்கு எண் 2; பாரத்-க்கு எண் 3; ->
புகார்களுக்கு எண் 1

நமது ஜமாஅத் சார்பாக ஏற்கனவே கூடுதலாக வசூலித்த கேஸ் விநியோக வாகனத்தை நிறுத்தி கூடுதல் பணத்தை வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு வீடியோ எடுத்து,  சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளது; காவல் நிலையத்திலும் முறையான புகாரும் அளிக்கப்பட்டுள்ளது; சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் தான், இக்கூட்டுக் கொள்ளையை முழுமையாக தவிர்க்க இயலும்.

மேலும் உதவிகள் - தொடர்புகளுக்கு:

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - TNTJ*
*ஆவணியாபுரம் கிளை - xxxxxxxxxx*
*ஆடுதுறை கிளை - xxxxxxxxxx*
*தஞ்சை வடக்கு மாவட்டம்*

் உரிமம் தொலைந்துவிட்டால் எப்ஐஆர

[பதிவு – 1,196]

ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் எப்ஐஆர் தேவையில்லை: மீண்டும் ஓட்டுநர் உரிமத்தின் நகல் பெற புதிய வசதி தொடக்கம் - போக்குவரத்து ஆணையர் புதிய உத்தரவு
*************************************************************************
ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். இதன்படி ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெற எப்ஐஆர் பெறத் தேவையில்லை.
வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தங்கள் கவனக் குறைவால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால் என்ன செய்வது என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே உள்ளது.
பொதுவாக ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு புகார் மனு ஏற்பு சான்றிதழ் அளிக்கப்படும். இதற்கே 15 முதல் 20 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படும். அதன்பிறகே, அவர் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் புதிய தாக பதிவு செய்ய முடியும். இதன்பிறகு ஆர்டிஓ அந்த ஆவணத்தை சரிபார்த்து ஓட்டுநர் உரிமத்தை வழங்குவார். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள இடைத்தரகர்கள் ரூ.2000 வரையில் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்நிலையில், தொலைந்து போன ஓட்டுநர் உரிமத்தை பெறும் முறையை எளிமைப்படுத்தி போக்குவரத்து ஆணையரகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
இணையதளத்தில்..
அதன்படி, தொலைந்துபோன ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக நகல் (டூப்ளிகெட்) உரிமம் பெற www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் தொலைந்துபோன ஆவண அறிக்கை (Lost Document Report) என்ற பிரிவில் சென்று பதிவு செய்து, தாங்களே பிரிண்ட் எடுத்துக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதனால் வீண் அலைச்சலைத் தடுக்க முடியும். இடைத்தரகர்கள் பணம் பெறுவதையும் தடுக்க முடியும். வாகனப் பதிவு சான்று தொலைந்து போனாலும் இதே முறையை பின்பற்றி வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டுமென போக்குவரத்து ஆணையர் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதிய வசதியால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலை எளிதாக பெற முடியும். இதற்காக போலீஸார் சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ள மாட்டார்கள். இந்த ஓட்டுநர் உரிமத்தின் நகல் ஆவணம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த வசதி டெல்லியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: தி இந்து 07 Sep 2017
___________________________________________________

ஆதார் கார்டு தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
https://www.facebook.com/trduraikamaraj/posts/1298792593597955

--------------------------------------------------------------------------------------

பட்டச் சான்றிதழ் தொலைந்தால் இனி எஃப்.ஐ.ஆர். தேவையில்லை: சென்னைப் பல்கலை.
https://www.facebook.com/trduraikamaraj/posts/1298776396932908
----------------------------------------------------------------------------

ஆவணங்கள் தொலைந்தால் இணையத்தில் புகார் தெரிவிக்கலாம்

https://www.facebook.com/trduraikamaraj/posts/1298758950267986

--------------------------------------------------------------------------------
பட்டா தொலைந்துவிட்டதா?
https://www.facebook.com/trduraikamaraj/posts/1298748283602386
------------------------------------------------------------------------------

சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்னதான் தீர்வு?
https://www.facebook.com/trduraikamaraj/posts/1298732063604008
---------------------------------------------------------------

வீ டு வாங்குவோர் பத்திரம்.... பத்திரம்
https://www.facebook.com/trduraikamaraj/posts/1298741170269764