Sunday, September 30, 2018

Postcards from Antarctica

https://3luenile.blogspot.com/search/label/World%20Postcards?m=0


https://m.facebook.com/groups/2208955025?view=permalink&id=10160917669660026



Permenant pictorial cancellations

For Permenant pictorial cancellations ,
Please refer the two links below :

http://indianpostmarks.blogspot.com/?m=1


http://www.indianphilately.net/ppc.html



Saturday, September 29, 2018

Philatelic covers from Antarctic research bases

One of the things I like to collect are philatelic covers but only covers with my mailing address on them. And some of my favorites are covers from the Arctic and Antarctic regions. If you don't know anyone residing or working in those remote corners of the world you can still receive covers from them. Here's how I do it:

Create a cover

Use a standard size envelope. Nothing too large but large enough for a few stamps and cachets to be added. Put your own address on the envelope off to one side. I like to put a thin piece of card stock or folded paper in my covers so they don't get too bent up in the mail. Be sure to seal your cover envelopes also. Don't use tape on the envelopes as it will discolour and leave marks on your covers over time.

Apply appropriate postage to your cover

The postage you use on your cover has to be valid for use in the region from which your cover is being mailed back to you. Make sure you have added the proper amount of postage. Be mindful of rate changes. It might be useful to include a little extra postage (1.00 instead of 0.90 for example) in case your covers are late getting to the base and are processed after a rate increase.

Write a brief and polite request letter to the person receiving the covers

Ask that your covers be cancelled and returned to you. Also include any other special instructions regarding other philatelic markings you want applied such as cachets. Remember to thank them. In some cases their postal administration will require them to appropriately handle philatelic requests but that doesn't mean they have to go out of their way to serve you, or make your cover look attractive.

Put your cover and the request letter in a larger envelope and mail it to the base or administrative organization.

Expect your mail to take a long time to come back to you. I have had some covers take well over a year to come back to me. And sometimes, they don't come back at all. Be patient. It helps to know the shipping schedules so you can get your covers to the bases with plenty of time for them to be back on a boat (or plane) and back to you. If your covers arrive on the last boat of the season they might sit until next season for a return trip. Remember that these bases are in the Southern Hemisphere: summer in the North when it's winter in the South. During their winter months, access to most of these bases is nearly impossible so in most cases, mail will only be delivered during their summer.

http://stamps.mybalconyjungle.com/antarctic_covers/antarctic_covers.html

Friday, September 28, 2018

Santa's address around the world!

Santa's address around the world!

https://www.postcrossing.com/blog/2015/11/25/santa-s-address-around-the-world

Tuesday, September 25, 2018

Santa Claus - II ( Philately)

https://m.facebook.com/groups/2208955025?view=permalink&id=10160900825250026

Santa Claus -II (Philately)



Santa Claus - Philately - I

Santa Claus - I




Tips to get postcards from "rare" places

Tips to get postcards from "rare" places.
*****""""********************************"

(You have to spend a few amount of money) :)

*Tristan da Cunha: http://www.tristandc.com/posundries.php

*South Georgia and South Sandwich: SG Heritage Trust: http://www.sght.org send a msg to the director Sara Lurkock.

*Vanuatu: http://www.vanuatupost.vu/index.php/en/philately/post-cards/5

*Christmas Islands : https://m.facebook.com/ChristmasIslandTourism/

*Antarctica (british): http://www.ukaht.org/shop/souvenirs/product/123-penguin-and-chicks-postcard

*North Korea (sent from there) https://www.explorenorthkorea.com/store/c1/Featured_Products.html

* St Pierre et Miquelon (ask kindly for a postcard, it's for free) https://m.facebook.com/Tourisme-Saint-Pierre-et-Miquelon-107072499359845/

* Guernsey: https://www.guernseypost.com/philatelic_bureau/philatelic_bureau/

*Pitcairn Islands: http://www.pitcairn.pn/shop/

Enjoy them :)

Please share info if you know other postcard sites.

Tuesday, September 18, 2018

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!
**********************************************************************

https://m.facebook.com/story.php?story_fbid=1626865627611087&id=1565094460454871

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------
மேலும் விவரம் வேண்டுபவர்களுக்கு இந்த கீழ்கண்ட தமிழ்நாடு அரசின் இணையதம் தொடர்பு கொடுத்திருக்கிறேன் ... அணைத்து தகவல்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கு கிடைக்கும்..
http://www.tn.gov.in/ta/documents/deptname

செக் (காசோலை) மோசடி - என்ன செய்ய வேண்டும்

செக் (காசோலை) மோசடி - என்ன செய்ய வேண்டும்?

தெரிந்தோ, தெரியாமலோ பெரும்பாலனவர்கள் காசோலைகளை சரியாக எழுதுவதில்லை. அது தகவல்களை நிரப்பும் செயல்பாடு மட்டுமல்லாமல், நீங்கள் எப்படி அந்த தகவல்களை நிரப்புகிறீர்கள் என்பதைத் பொறுத்த காசோலையில் பல விஷயங்கள் உள்ளது.

தற்போது காசோலையானது, ஒரு முனையத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக, அந்த காசோலையை மின்னணு முறையில் ஸ்கேன் செய்து, அந்த ஸ்கேன் காப்பியை பணம் எடுக்க டெபாசிட் செய்த கிளையிலிருந்து, மற்றொரு வங்கி கிளைக்கு அனுப்புவார்கள்.

இதன் காரணமாக, நீங்கள் எழுதும் காசோலையில் ஒரு சிறிய தவறு இருந்தால் கூட, அந்த காசோலை ஏற்கப்படுவதில்லை. இது மட்டுமல்லாமல், காசோலைகளை சரியாக எழுதுவதன் மூலம் அதனால் ஏற்படும் அபாயங்களையும், மோசடிகளையும் தவிர்க்க முடியும். பணம்-சாராத காரணங்களுக்காக ஏற்கப்படாமல் பவுன்ஸ் ஆன காசோலைகளுக்காக, வங்கிகள் சில நூறு ரூபாய்களை அபராதமாக விதிப்பதையும் மறுப்பதற்கில்லை.

எனவே, காசோலைகளை எழுதும் வேளைகளில் நீங்கள் சில முக்கிய விஷயங்களைப் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றைத் தவறாமல் பின்பற்றி வங்கிகள் விதிக்கும் அபராதம் மற்றும் மோசடிகளில் இருந்து உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

இந்த முறையில் தான் காசோலையை எழுத வேண்டும் என்றில்லாவிட்டாலும், நீங்கள் இடது புறமிருந்து வலப்புறத்திற்கு எழுதும் போது காசோலையை எழுதும் வேலைக்கு அது உதவியாக இருக்கும். மேலும், அது காசோலையில் உள்ள அனைத்து பகுதிகளையும் சரியாக நிரப்புவதற்கு ஒரு திட்டமிட்ட வழிமுறையை ஏற்படுத்தும். அங்கொன்றும் இங்கொன்றுமாக காசோலையின் தகவல்களை நீங்கள் நிரப்பும் வேளைகளில், ஏதாவதொரு இடத்தை நீங்கள் மறந்து விட அல்லது விட்டு விட நேரலாம். இதன் காரணமாக, பணம்-சாராத காரணங்களுக்காக காசோலைகள் பவுன்ஸ் ஆகும் சூழலை எதிர்கொள்ள நேரிடலாம்.

காசோலையில் நீங்கள் தேதியைச் சேர்ந்தது என்று குறிப்பிடப்படா விட்டால், அந்த காசோலை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

காசோலைகளில் தேதிகளை எழுதாமல் மறப்பவர்களின் எண்ணிக்கையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எனவே, உங்களுடைய காசோலை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று நினைத்தால், அப்போதைய தேதியை உடனடியாக குறிப்பிடவும். சில நாட்கள் கழித்து எடுக்கும் வகையில் காசோலையைத் தர நினைத்தால், சரியான தேதியைக் குறிப்பிடுங்கள். போதிய அளவு பணம் இல்லாத நேரங்களில், முந்தைய தேதியை தவறுதலாக குறிப்பிட்டிருந்தால் அந்த காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் பவுன்ஸ் ஆகலாம்.

மக்களுக்கு இடையில் இடைவெளிகளை விடுவது நல்லது. ஆனால், காசோலைகளில் இவ்வாறு இடைவெளிகளை விடுவது மோசடி அபாயங்களை எதிர்கொள்ளும் நிலையும் மற்றும் காசோலைகள் சேதமடையும் நிலையும் உருவாகலாம். காசோலையில் 'Payee' என்று எழுதப்பட்டுள்ள இடத்தைத் தொடர்ந்த கோடிட்ட இடத்தில், நீங்கள் யாருக்கு கொடுக்க நினைக்கிறீர்களோ அவருடைய பெயரை அல்லது நிறுவனத்தின் பெயரை எழுதவும்.

நீங்கள் ஒரு தனிநபருக்கு காசோலையை வழங்குகிறீர்கள் என்றால் பெயரை சரியாக எழுதுங்கள். குறிப்பிட்டு சொல்லும் படியாக ஒரு நபருக்கு நீங்கள் காசோலையை கொடுத்தால், அந்த காசோலையில் அச்சிடப்பட்டிருக்கும் 'Bearer' என்ற வார்த்தையை அடித்து விடவும்.

இந்த 'Bearer' என்ற வார்த்தை வழக்கமாக காசோலையின் வலது பக்கத்தில் இருக்கும், சில காசோலைகளில் தேதிக்கு கீழாக இருக்கும். 'Bearer' என்ற வார்த்தைக்கு, இந்த காசோலையை கொண்டு வரும் நபர் யாராக இருந்தாலும், அவருக்கு காசோலையை கொடுக்கலாம் என்று பொருளாகும். எனவே, நீங்கள் ‘Bearer' என்ற வார்த்தையை அடிக்காமல் விட்டு விட்டால், மோசடி செய்வதற்கான வாய்ப்பை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

நீங்கள் எழுதும் காசோலை எந்தவொரு வங்கியின் கவுண்டரிலும் கொடுத்து பணமாக மாற்றத் தக்கதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதில் குறுக்கு கோடிட வேண்டாம்.

குறுக்கு கோடிடுதல் என்ற பெயரில் இரண்டு கோடுகளை காசோலையின் மேல் வலது மூலையில் வரைவதற்கு 'கணக்கில் வரவு வை (Account Payee)' என்று பொருளாகும். இவ்வாறு குறுக்கு கோடிடும் போது, அந்த காசோலையில் உள்ளவருடைய வங்கிக் கணக்கில் மட்டுமே பணம் வரவு வைக்கப்படும் என்பதையும், அதை வங்கியின் கவுன்டரில் கொடுத்து பணமாக பெற முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

காசோலையில் எழுதப்பட வேண்டிய பணத்தின் அளவை எண்ணில் எழுதும் பொருட்டாக கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் சரியாக எழுதவும்.

அதாவது, Rs999, என்று எழுதுவதற்குப் பதிலாக Rs.999/- என்று எழுதுங்கள். /- என்ற குறியீட்டை தொகையின் முடிவில் குறிப்பிடும் போது, அந்த எண்ணிற்குப் பின்னர் மற்றொரு இலக்கத்தை எழுத முடியாது.

தொகையை எழுத வேண்டி வரும் போது, இடைவெளிகள் எதையும் விட வேண்டாம். உதாரணமாக, Rs.5,000 என்று எழுதும் போது 5000 என்ற எண்ணிற்கு முன்னதாக இடைவெளி விட வேண்டாம். இல்லாவிடில், அதற்கு முன்னதாக யாராவது ஒருவர் 3 என்ற எண்ணை எழுதி, 35000 ரூபாயாக மாற்றி விடலாம். இதே விஷயம், தொகையை எழுத்தில் எழுதும் போதும் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. ஐந்து ஆயிரம் என்று எழுதியிருப்பதை, எளிதில் முப்பத்து ஐந்து ஆயிரமாக மாற்றி விட முடியும். எனவே, தொகையை எண்ணிலோ அல்லது எழுத்திலோ எழுதும் போது, முன்னதாக இடைவெளி விட வேண்டாம்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தையும் நிரப்பிய பின்னர் மட்டுமே, உங்களுடைய கையொப்பத்தை இடவும்.

அதே போல முன்னோக்கி செல்லவும் மறந்து விட வேண்டாம்; காசோலைகளில் கையொப்பமிட அடர்த்தியான மையை கொண்டுள்ள பேனாவைப் பயன்படுத்தவும். காசோலையில் அச்சிடப்பட்டிருக்கும் உங்களுடைய பெயருக்கு மேல், கையொப்பமிடவும். மேலும், எக்காரணத்தைக் கொண்டும் உங்களுடைய காசோலைப் புத்தகத்தில் உள்ள வெற்றுக் காசோலைகளில் கையொப்பங்களை போட்டு வைக்க வேண்டாம். அந்த காசோலைப் புத்தகம் தொலைந்து போனால், அடுத்து என்ன நடக்கும் என்று  உங்களுக்கு தெரியும் தானே ?