Tuesday, July 17, 2018

இந்திய மருத்துவ படிப்ப

இந்திய மருத்துவ படிப்புகளுக்கு NEET தேர்வு தேவை இல்லை, +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

சித்தா ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவ படிப்புகள் தமிழகத்தில் 6 அரசு கல்லூரிகள் மற்றும் பல தனியார் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றது.  இதில் மாணவர்கள் சேர்வதற்க்கு தமிழக அரசு +2 மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்துகின்றது.

இந்த ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சிலிங் NEET தேர்வின் அடிப்படையில்  இருக்குமா ? இல்லையா ? என்ற குழப்பத்தில் மாணவர்கள் இருந்த நிலையில் NEET தேர்வு இல்லை என தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

நீண்ட கால மருத்துவத்திற்க்கு ஆங்கில மருத்துவத்தைவிட இந்திய மருத்துவ முறைகளே பெரும்பாலோரின் தேர்வாக இருகின்றது .  பின்விளைவு (Side Effect) இல்லாத மருத்துவ முறை என மக்களால் அறியப்பட்ட  இந்திய மருத்துவ  படிப்புகளை பற்றி பார்ப்போம்

படிப்பு விபரம் :

கீழ் கானும் இந்திய மருத்துவ படிப்புகள்  தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றது

1.B.S.M.S-Bachelor of Siddha Medicine and Surgery (சித்தா)

2.B.U.M.S-Bachelor of Unani Medicine and Surgery (யுனானி)

3.B.A.M.S-Bachelor of Ayurveda Medicine and Surgery (ஆயுர்வேதா)

4.B.H.M.S-Bachelor of Homeopathy Medicine and Surgery (ஹோமியோபதி)

5.B.N.Y.S-Bachelor of Naturopathy and Yogic Science (நேச்சுரோபதி)

சேர்க்கை தகுதிகள் :

+2 ல் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல்) படித்து இருக்க வேண்டும். கூடுதல் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சித்தா : தமிழ் வழி கல்வி அல்லது தமிழை ஒரு பாடமாக +2 வரை படித்திருக்க வேண்டும்.

யுனானி : உருது வழி கல்வி அல்லது உருது மொழியை ஒரு பாடமாக +2 வரை படித்திருக்க வேண்டும்.

ஆயுர்வேதா :  ஹிந்தி தெரிந்திருப்பது நல்லது.

ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி : தமிழ் அல்லது ஆங்கில வழி கல்வி.

கால அளவு மற்றும்  கல்வி கட்டணம் :

4 1/2 ஆண்டுகள் படிப்பு மற்றும் 1 ஆண்டு பயிற்சி மொத்தம் 5 1/2 (ஐந்தரை) ஆண்டுகள். அரசு கல்லூரிகளில் படித்தால் வருட கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும், தனியார் கல்லூரிகளில் படித்தால் கல்லூரிகள் தரத்திற்க்கு ஏற்றவாறு வருட கட்டணம் ரூ.50,000 வரை இருக்கும்

கட் ஆஃப் மதிப்பெண் : 

+ 2 - ல் இயற்பியல், வேதியியல் , உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட பிரிவுகளில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே கட் ஆஃப் மதிப்பெண் கணிக்கிடப்படும். 

சேர்கை முறை  :

இன்னும் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை, இன்னும் சில நாள்களில் விண்ணப்பபடிவங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம் (இன்ஷா அல்லாஹ்). சென்னையில் அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்தா, யுனானி கல்லூரியில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ.500
 
மேற்சொன்ன வகையில் கட் ஆஃப் கணக்கிடபட்டு தர வரிசை படியல் (Rank List ) தயாரிக்கப்படும். 160 - க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்  எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்கள் http://www.tnhealth.org/imh/imedu.htm  இந்த இணையதளத்தில் கிடைக்கும்.

Thursday, July 12, 2018

ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொள்வது எப்படி ?

ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொள்வது எப்படி ?

படித்து முடித்துவிட்டு வேலை வாங்குவதில் முக்கிய பங்கு வகிப்பது மாணவரின் ஆங்கில பேச்சாற்றல், ஆங்கில பேச்சாற்றல் என்ற ஒற்றை தகுதிக்கே வேலை வாய்ப்புகள் உள்ளன. எவ்வளவோ திறமை இருந்தும்,  பட்ட படிப்பில் அதிக மதிப்பெண் இருந்தும் ஆங்கில பேச்சாற்றல் இல்லை என்ற ஒரே காரணத்திற்க்காக வேலை கிடைக்காத எத்தனையோ மாணவர்கள் இருக்கின்றார்கள். வேலை வாய்ப்பை பெறுவதில் முதன்மை பங்காற்ற கூடிய ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.

ஏன் ஆங்கில பேச்சாற்றல் அவசியம் ?

எந்த ஒரு பெரிய நிறுவனத்திலும் ஒரே மொழி பேச கூடியவர்கள் இருக்க மாட்டார்கள், தமிழ், இந்தி, தெலுங்கு, மளையாளம் என பல மொழி பேச கூடியவர்கள் இருப்பார்கள், இன்னும் பன்னாட்டு நிறுவனம் (MNC) என்றால் பிரென்ச், ஜாபனீஸ், சீன மொழி என அயல்நாட்டு மொழி பேச கூடியவர்களும் இருப்பார்கள். இப்படி பல மொழி பேச கூடியவர்கள்  இருக்கும் நிறுவனத்தில் பணியாளர்களிடன் உரையாட பொது மொழி தேவைபடுகின்றது, உலகம் முழுவதும் பேசப்படும் பொது மொழியாக ஆங்கிலம் இருப்பதினால் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளுதலை (Communication) வைத்தால் அனைவருக்கும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும், எனவே தான் பெரும்பாலும் எல்லா பெரிய நிறுவனங்களும் பணியில் சேர்வதற்க்கு ஆங்கில மொழிதிறமையை கட்டாயமான ஒன்றாக கருதுகின்றது.

பல நிறுவனங்கள் ஆங்கில மொழி திறமை இல்லை என்றால் வேலை இல்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கின்றன. ஆங்கில மொழியின் அவசியத்தையும் தேவையையும் உணர்ந்து மாணவர்கள் ஆங்கிலம் கற்ற முன்வர வேண்டும்.

ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொள்ள என்ன செய்வது :

செலவில்லாமல் அல்லது மிக குறைந்த செலவில் ஆங்கிலம் கற்க கீழ்காணும் மூன்று வகையான முயற்சிகளை செயல்படுத்துங்கள்.

1. கற்பது (Learning)

2. வாசிப்பது , கேட்பது (Reading and Listening)

3. பேசுவது, சிந்திப்பது (Talking and Thinking)

மேற்சொன்ன மூன்று வழிமுறையையும் ஒரே காலத்தில் செய்யுங்கள் (do it simultaneously) , அதாவது தினமும் கற்ற சிறிது நேரமும், வாசிக்க சிறிது நேரமும், பேச சிறிது நேரமும் ஒதுக்குங்கள், அல்லது வாரத்தில் ஒரு நாள் கற்ற, ஒரு நாள் வாசிக்க , ஒரு நாள் பேச என வைத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்று வழிமுறைகளையும் விரிவாக பார்ப்போம்.

ஆங்கிலம் கற்பது (Learning) :

ஆங்கிலம் கற்க பணம் செலவு செய்து கோசிங் சென்டர் செல்ல வேண்டாம், அல்லது விலை அதிகமான புத்தங்கள் வாங்க வேண்டாம், எளிமையாக ஆங்கிலம் கற்ற 8- ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு ஆங்கில புத்தகங்களை படியுங்கள், இதுவே போதும், இன்னும் கூடுதலாக ஆங்கிலம் கற்ற +2 ஆங்கில புத்தகம் படியுங்கள். 8- ஆம் வகுப்பு புத்தகம் படிக்க கூச்சம் வேண்டாம், அரசு புத்தகங்களில் மிக எளிமையாக ஆங்கிலம் விளக்கப்பட்டிருக்கும். புத்தகங்களை pdf வடிவில் அரசு இணையதளத்தில் இருந்து இலவசமாக download செய்து கொள்ளலாம் அல்லது கடைகளிலில் கிடைக்கும்.

வாசிப்பது , கேப்டது (Reading and Listening) :

அதிகமாக ஆங்கில சொற்றொடர்களை வாசித்தால் தான் நம்முடைய சொல்லாற்றல் (vocabulary) அதிகமாககும், இது தான் பேச நமக்கு உதவும், பொதுவாக அனைவரும் ஆங்கில நாவல்கள் படிக்க சொல்வார்கள், அதை விட நான் பரிந்துரைப்பது, தினமும் ஆங்கில மொழிபெயர்ப்பு குர்ஆன் படியுங்கள், குர்ஆனிலும் வாழ்கைக்கு பயனளிக்கும் பல வரலாற்று நிகழ்வுகள், உரையாடல்கள் உள்ளன. ஆங்கில குர்ஆன் படிக்கும் போதே தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆனையும் சேர்த்து படியுங்கள், இதனால் எந்த ஆங்கில வார்த்தைக்கு என்ன அர்த்தம் என எளிதில் அறியலாம், ஏதாவது ஆங்கில வார்த்தை விளங்கவில்லை என்றால் Dictionary App பயன்படுத்தி அறிந்துகொள்ளுங்கள். 

ஆங்கில குர்ஆன் வாசிப்பதால் ஆங்கில அறிவும் வளரும், இறைவனின் அறிவுறையை அறிந்துகொள்வதால் இந்த உலகத்திலும் , மறுமையிலும் உங்களுக்கு பயன் அளிக்கும். மொத்த குர்ஆனும் முடிந்து விட்டது என்றால், ஸஹீஹ் புகாரி,  ஸஹீஹ் முஸ்லீம் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு சேர படியுங்கள், ஆங்கில குர்ஆன், புகாரி,  முஸ்லீம் ஆகியவை ஆன்ட்ராய்டு ஆப்-களாக இலவசமாக கிடைகின்றது.

ஆங்கில  Accent (பேச்சு வழக்கு) திறனை வளர்த்து கொள்ள ஆங்கில பயானை (ஆங்கில இஸ்லாமிய சொற்பொழிவுகளை) கேளுங்கள். சிறந்த முறையில் ஆங்கிலம் பேசும் எந்தனையோ இஸ்லாமிய பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களின் ஆங்கில பயானை கேளுங்கள். இப்படி ஆங்கில பயான் கேட்கும் போது கவனமாக இருக்கவும் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக சொல்லபடும் கருத்துகளை புறகணித்து விடுங்கள், குர்ஆன் ஹதீஸுக்கு ஒன்றிபோகும் கருத்துகளை ஏற்றுகொள்ளுங்கள், குர்ஆனை ஹதீஸை தவிர்த்து இன்ன பிற செய்திகளை இஸ்லாத்தின் ஆதாரமாக எடுத்து கொள்ளாதீர்கள். தொடர்ந்து ஆங்கில பயானை கேட்டுவந்தாலே உங்களுக்கும் ஆங்கிலத்தில் பேச வேண்டும், சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.

கூடுதலாக ஆங்கில செய்திதாள்கள் வாங்கிபடியுங்கள், ஆங்கில செய்தி சேனல்கள் பாருங்கள்.

பேசுவது சிந்திப்பது (Talking and Thinking) :

பொதுவாக பேச பேச தான் மொழி அறிவு வளரும். எனவே மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்க வேண்டும். நம்முடைய சமுதாய மாணவர்களிடம் அதற்க்கான சூழல் இல்லை என்பது உண்மைதான், மீறி நாம் ஆங்கிலம் பேசினாலும் நம்மை கின்டல், கேலி செய்யும் நண்பர்கள் தான் அதிகம்.

ஆங்கிலம் பேசும் சூழலலை உருவாக்க சில ஆலோசனைகள் :

1. முதலில் உங்களை போல ஆங்கிலம் கற்கும் ஆர்வமுள்ளவர்களிடம் பழகுங்கள், உங்களை கேலி செய்யும் நண்பர்களை தவிர்த்துவிடுங்கள் (குறைந்த பட்சம் வேலை வாங்கும் வரையாவது தவிர்த்துவிடுங்கள்).

2. தினமும், பஜர் அல்லது ஏதாவது ஒரு தொழுகைக்கு பிறகு உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து  பள்ளிவாசலில் ஆங்கில குர்ஆன் வாசியுங்கள், ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் வாசியுங்கள், சில நாள்கள் கழித்து ஆங்கிலத்தில் குர்ஆன் வாசித்துவிட்டு குர்ஆன் வசனங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லுங்கள், குறிபிட்ட குர்ஆன் வசனம் சம்மந்தமாக விளக்கம் தேவைபட்டால் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க செய்து ஆங்கிலத்தில் பதில் சொல்லுங்கள். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் குர்ஆனை அறிந்து கொண்ட நன்மையும் கிடைக்கும், அல்லாஹ்வின் அருளால் ஆங்கில மொழி திறனும் அதிகமாகும். குர்ஆன் வசனத்தை படிப்பதால் பெரும்பாலும் யாரும் கின்டல் செய்ய மாட்டார்கள்.

3. வாரத்தில் ஒரு முறையாவது உங்களுக்குள் ஆங்கிலத்தில் பயான் செய்யுங்கள், ஆங்கிலத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துங்கள்.

4. சிந்தனை மொழி : ஆங்கிலத்தில் பேச யாரும் கிடைக்கவில்லை என்றாலும் நம்முடைய சிந்தனையை ஆங்கிலமாக ஆக்குங்கள், பொதுவாக  நாம் ஓய்வெடுத்தாலும் நமது மூளை ஓய்வெடுக்காது, எதையாவது யோசித்து கொண்டே இருக்கும், இந்த யோசனை, சிந்தனையில் உரையாடுவது எல்லாம் தமிழில் தான் இருக்கும், இதை ஆங்கிலமாக மாற்றுங்கள், ஆங்கிலத்தில் யோசியுங்கள், சிந்தனையில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள், சிந்தனையில் ஆங்கிலத்தில் திட்டம் போடுங்கள் என சிந்திக்கும் ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்

சிந்தனை செய்யும் போதோ, பேசும் போதோ குறிபிட்ட ஆங்கில வார்த்தை தெரியவில்லை என்றால் கூகுல் Translator  உதவியை நாடுங்கள் , தமிழ் வார்த்தைக்கும் நிகரான ஆங்கில வார்த்தையை google உடனே வழங்கிவிடும்.

5. மாதிரி இன்டெர்வியூ (Mock Interview) : உங்களை போல் வேலை தேடும் நண்பர்களுடன் சேர்ந்து மாதிரி இன்டெர்வியூ (Mock Interview) நடத்துங்கள், இணையதளத்தில் interview questions என தேடி வரும் கேள்விகளை தொகுத்து ஆங்கிலத்தில் உங்கள் நண்பர் உங்களிடம் கேட்க நீங்கள் ஆங்கிலத்தில் பதில் சொல்லுங்கள், ஆங்கிலத்தில் பதில் தெரியவில்லை என்றால் கூகுலின் உதவியை நாடுங்கள், அதன் மூலம் பதில் அளித்து பயிற்சி எடுத்துகொள்ளுங்கள்.

கல்வி கற்க வெட்கம் வேண்டாம் :

கல்வி கற்க வெட்கப்பட கூடாது என்ற இஸ்லாமிய வழிகாட்டுதலை நினைவில் வையுங்கள், யார் கேலி செய்தாலும் ஆங்கிலம் கற்கும் முயற்சியை கைவிடாதீர்கள். ஆரம்பத்தில் கேலி செய்யும் வகையில் தான் நமது ஆங்கில பேச்சு இருக்கும், போக போக பயிற்சி எடுக்க எடுக்க நாம் நன்றாக பேச முடியும், எனவே ஆங்கிலம் பேசும் போது கின்டல், கேலி செய்பவர்களை அலட்சியம் செய்யுங்கள்,  நம்மை கேலி செய்யும் யாரும் நமக்கு வேலை வாங்கி தரபோவதில்லை, நாம் வளர்த்துகொள்ளும் ஆங்கில அறிவுதான் வேலை பெற நமக்கு உதவும்.

விடா முயற்சி :

ஏதோ ஒரு ஆர்வத்தில் ஆங்கிலம் படிக்க முயற்சி செய்தோம் என்றிருந்தால் நாள் போக போக ஆர்வம் குன்றிவிடும் எனவே எந்த சூழ்நிலையிலும் முயற்சியை விட்டு விட வேண்டாம், விடா முயற்சிதான் வெற்றியை தரும், ஆங்கிலம் சரளமாக பேசும் வரையில் மேற் சொன்ன வழிமுறைகளை தொடர்ந்து செயல்படுத்துங்கள், அல்லாஹ் நமக்கு உதவி செய்வான், நம்முடைய முயற்சிக்கும், உழைபிற்க்கும் அல்லாஹ் நமக்கு ஆங்கில மொழி திறமையை வழங்குவான் இன்ஷா அல்லாஹ்.

Wednesday, July 11, 2018

ஆன்லைன் பொறியியல் கவுன்சிலிங்

ஆன்லைன் பொறியியல் கவுன்சிலிங் மூலம் பொறியியல் சேர்வது எப்படி ?

இந்த ஆண்டில் இருந்து தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங் ஆன்லைன் (இணையதளம்)  மூலம் மட்டுமே நடத்தபடுகின்றது, இதன் மூலம் நாம் வீட்டில் இருந்தே நமக்கு விருப்பமான கல்லூரி/ பிரிவுகளை தேர்வு செய்ய முடியும். சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை. விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள் பிரிவு போன்ற சிறப்பு பிரிவுகளுக்கு மட்டும் ஆன்லைன் கவுன்சிலிங் இல்லை, இவர்கள் சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்க்கு வந்து நேரடியாக கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் .

பொறியியல் சேர்க்கைக்கான நடைமுறை மூன்று கட்டங்களாக உள்ளது, முதலில் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், இரண்டாவதாக சான்றிதழ் சரிபார்ப்பு TFC (TNEA facilitation centers) எனப்படும் உதவி மைய்யங்களில் நடைபெறும்,  அதன் பின்னர் RANK  பட்டியல் வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடைபெறும், தற்போது RANK பட்டியல் வெளியிடப்பட்டு கவுன்சிலிங் துவங்கியுள்ளது. எப்படி ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்பில் இடம் தேர்வு செய்வது  என்பதை பார்ப்போம்.

மாணவர்களின் Rank-கை பொருத்து பொறியியல் கவுன்சிலிங் 5 பிரிவுகளாக நடைபெறும், நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள் முதல் பிரிவிலும், அடுத்து அடுத்து மதிப்பெண் எடுத்தவர்கள் அடுத்த அடுத்த பிரிவிலும் வருவார்கள், விண்ணப்பித்த எல்லா மாணவர்களுக்கும், ஆன்லைன் மூலம் கல்லூரி /பிரிவை தேர்வு செய்ய  குறிபிட்ட தேதி ஒதுக்கப்பட்டு இருக்கும், (மொத்தம் 3 நாள்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்) இந்த மூன்று நாள்களில் https://www.tnea.ac.in இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் User name மற்றும் பாஸ்வேர்ட் மூலம் Log-in செய்ய வேண்டும். முதலில் முன்பண தொகை ரூ.5000 கட்ட வேண்டும் (சலுகை உள்ளவர்கள் ரூ.1000 கட்ட வேண்டும்) .

பின்னர் இணையதளத்தில் உள்ள "ADD CHOICES" என்ற  option மூலம் மாணவர்கள் விரும்பும் கல்லூரியில் உள்ள விரும்பும் பாட பிரிவை தேர்வு செய்யலாம், எத்தனை கல்லூரிகள் விருப்பமோ அத்தனை கல்லூரிகளை , பாட பிரிவுகளை தேர்வு செய்யலாம். உங்களின் முதல் விருப்பம் எது, இரண்டாம் விருப்பம் எது என வரிசைபடுத்தி கொண்டே செல்லலாம். உங்களுக்கு இடம் வழங்கும் போது உங்களின் முதல் விருப்பத்தை பார்ப்பார்கள் அது காலியாக இருந்தால் அதை உங்களுக்கு வழங்குவார்கள், இல்லை என்றால் இரண்டாவது விருப்பத்தை பார்ப்பார்கள் இப்படியே வரிசையில் உள்ள உங்களின் விருப்பத்தின் அடிப்படையில் காலியாக உள்ள இடத்தை உங்களுக்கு ஒதுக்குவார்கள் எனவே உங்களுக்கு எது மிக விருப்பமான கல்லூரியோ, பாட பிரிவோ அதை முதலில் குறிபிடுங்கள்.

கல்லூரி / பாட பிரிவுகளை எப்படி தேர்வு செய்வது ?

கடந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையின் விபரங்கள் https://www.tnea.ac.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்னிற்க்கு கடந்த ஆண்டு கிடைத்த கல்லூரி / பாட பிரிவுகளை பாருங்கள், இதில் இருந்து உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்னிற்க்கு எந்த கல்லூரியில் என்ன பிரிவில் இடம் கிடைக்கும் என தோராயமாக கணக்கிடலாம், இதை வைத்து கொண்டு கல்லூரி / பாட பிரிவுகளை உங்களின் விருப்ப பட்டியலில் சேருங்கள்.

பொறியியல் படிப்பில் எந்த பிரிவில் சேர்வது ?, எந்த கல்லூரியில் சேர்வது ? என்பதற்க்கான விளக்கங்கள் "என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?"  https://www.facebook.com/sithiqu.sithiqu/posts/808417676026181
என்ற ஆக்கத்திலும்,
“பொறியியல் (Engineering) படிக்கலாமா ? எந்த பிரிவில் சேரலாம் ?”   https://www.facebook.com/sithiqu.sithiqu/posts/817873415080607  என்ற ஆக்கத்திலும் உள்ளது. கல்லூரி, பாட பிரிவுகளை தேர்வு செய்யும் முன் அதை ஒரு முறை படித்து கொள்ளுங்கள்.

விருப்பபட்டியலை உறுதி செய்தல் :

அவர்கள் குறிபிட்ட 3 நாள்களுக்குள் உங்கள் விருப்ப பட்டியலை https://www.tnea.ac.in இணையதளத்தில் பதிவு செய்யுங்கள், பின்னர்  “LOCK MY CHOICES” என்ற option  மூலம் உங்கள் விருப்ப பட்டியலை இறுதி செய்யுங்கள், இறுதி செய்யும் போது பதிவு செய்யப்பட்ட தொலைபேசிக்கு OTP நம்பர் வரும் அதை https://www.tnea.ac.in வெப்சைடில் டைப் செய்து உங்கள் விருப்ப பட்டியல் இறுதி செய்யலாம், ஒரு முறை விருப்ப பட்டியலை இறுதி செய்தால் பின்னர் மாற்ற முடியாது எனவே இறுதி செய்யும் முன் கவனாமாக இருங்கள்.

தற்காலிக ஒதுக்கீடு :

மாணவர்களின் விருப்ப பட்டியல் அடிப்படையில் கல்லூரி மற்றும் பாட பிரிவு ஒதுக்கப்படும். அவர்கள் ஒதுக்கிய கல்லூரி / பாட பிரிவு நமக்கு பிடிக்கவில்லை என்றால் அடுத்த கட்ட கலந்தாய்வின் மூலம் நாம் வேறு கல்லூரி / பாட பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். (அதாவது மேற் சொன்ன முறையில் மீண்டும் புதிதாக விருப்ப பட்டியல் தயார் செய்து உறுதி செய்து இடங்களை பெறலாம்).  ஒரு வேளை நாம் கேட்ட  அனைத்து கல்லூரிகளிலும் இடம் இல்லை என்றால் நமக்கு ஒன்றும் ஒதுக்கப்படாது, அடுத்த கட்ட கவுன்சிலிங் மூலம்  மீண்டும் புதிதாக விருப்ப பட்டியல் தயார் செய்து உறுதி செய்து இடங்களை பெறலாம். கடந்த ஆண்டு பொறியல் சேர்க்கை விபரங்களை பார்த்து நமது விருப்ப பட்டியலை தேர்வு செய்தால் இப்படி பட்ட சூழ்நிலை வராது, எனவே மாணவர்கள் அவர்களின் மதிப்பெண்னிற்க்கு ஏற்ப கல்லூரியை, பாட பிரிவிவை தேர்வு செய்யுங்கள்.

அவர்கள் வழங்கிய தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்ய 2 நாள்கள் வழங்கப்படும். அதற்க்குள் நாம் ஏற்று கொள்ள வேண்டும் அல்லது நிகாரித்துவிட்டு அடுத்த கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும். எதுவுமே பிடிக்கவில்லை என்றாலோ, பொறியியல் படிப்பே வேண்டாம் என முடிவு செய்தாலோ கவுன்சிலிங்கில் இருந்து வெளியேறி விடலாம் (அதற்க்கான option இணையதளத்திலே உங்களுக்கு வழங்கப்படும்). 

இறுதியாக அவர்கள் ஒதுக்கிய இடம் நமக்கு பிடித்து இருந்தால் அதை உறுதி செய்யலாம், பின்னர் நமக்கு Allotment order வழங்கப்படும், ஈ-மெயிலிலும் அனுப்புவார்கள் அல்லது https://www.tnea.ac.in இணையதளத்திலும் download செய்து கொள்ளலாம். பின்னர் அந்த Allotment order-ரை பிரின்ட் அவுட் எடுத்து சம்மந்த பட்ட கல்லூரியில் குறிபிட்ட தேதிக்குள் சமர்பித்து மீத கட்டணத்தை செலுத்தி பொறியியல் படிப்பில் சேரலாம்.

Wednesday, July 4, 2018

அரசு கல்வி உதவியும்

அரசு கல்வி உதவியும் அதை பெறுவதற்க்கான வழிமுறைகளும்

மத்திய மாநில அரசுகள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காக பல கோடி ரூபாய்களை ஒதுக்குகின்றது, இதை பெறுவது நம்முடைய உரிமை, அதன் வழிமுறைகளை அறிந்து கொண்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் இதற்க்கு விண்ணப்பிக்க தயங்க வேண்டாம். மத்திய மாநில அரசுகள் வழங்கி வரும் கல்வி உதவி திட்டங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு நேரடியாக உதவி தொகை வழங்குவது, தேர்வுகள் நடத்தி அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குவது. முதலில் அரசு நேரடியாக வழங்கும் கல்வி உதவிகளை பார்க்கலாம்.

1. மத்திய அரசு சிறுபாண்மையினருக்கு வழங்கும் கல்வி உதவி தொகை :

பொருளாதாரத்தில் பின் தங்கிய (முஸ்லீம்கள் உட்பட) சிறுபாண்மை மாணவர்களுக்கு  Pre-matric, Post-matric, மற்றும்  MERIT CUM MEANS ஆகிய மூன்று விதமான கல்வி உதவித் திட்டத்தை மத்திய அரசு வழங்கி வருகின்றது. முஸ்லீம்களில் பெரும்பாலோனோர் விண்ணப்பிக்கும் கல்வி உதவி தொகை இது,  அதன் விபரங்களை பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்த உதவித் தொகை கிடைக்காது. அரசு ஒரு குறிபிட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி உதவித் வழங்கும், இது போன்ற உதவிகளில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களுக்கும், பெற்றோரின் ஆண்டு வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த கல்வி உதவி பற்றிய பொதுவான தகவல் :

• மாணவர்கள் 50 % - க்கு மேல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.

• ஒரு குடும்பத்தில் 2 மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.

• இந்த கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் மற்ற எந்த கல்வி உதவிக்கும் விண்ணப்பிக்க கூடாது.

• ஒரு முறை கல்வி உதவி வழங்கப்பட்டால் “Renewal” முறையில் படிப்பு முடியும் வரை விண்ணபித்து கல்வி உதவித் தொகை பெறலாம்.

• மாணவரின் வருகை பதிவேடு (attendance) கணக்கில் கொள்ளப்படும், வருகை பதிவேடு குறைவாக உள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்.

• தொடர்ந்து 50 % - க்கு மேல் மதிப்பெண் எடுக்காவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும்

விண்ணப்பிக்கும் முறை :  

மாணவர்கள்  மத்திய அரசின் கல்வி உதவி இணையதளத்தில் http://www.scholarships.gov.in விண்ணப்பிக்க வேண்டும் மாணவர்கள் விண்ணப்பித்த பிறகு கல்லூரி/பள்ளி நிர்வாகம் மாணவர்களின் விண்ணப்பத்தை அதே இணையதளத்தில் அங்கீகரிக்க வேண்டும் , பிறகு அரசின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Pre-matric கல்வி உதவித் தொகை :

இந்த உதவி தொகை 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

விட்டிலிருந்து பள்ளியில் படிக்கும் 1-ஆம் வகுப்பு முதல் 5 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்க்கு  ரூ.1000  வழங்கப்படுகின்றது. 6-ஆம் வகுப்பு முதல் 10 - ஆம் வகுப்பு வரை  படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்க்கு  ரூ.5000  வழங்கப்படுகின்றது. ஹாஸ்டலில் தங்கி படிக்கும்  6-ஆம் வகுப்பு முதல் 10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்க்கு  ரூ.10000  வழங்கப்படுகின்றது.

Post-matric கல்வி உதவித் தொகை :

இந்த உதவித் தொகை சான்றிதழ் படிப்பு (ITI), டிப்ளோமா, இளநிலை பட்ட படிப்பு (UG), முதுகலை பட்ட படிப்பு (PG) மற்றும் Phd படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றது.

படிப்பிற்க்கு ஏற்ப வருடத்திற்க்கு ரூ.7000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படுகின்றது

MERIT CUM MEANS கல்வி உதவி தொகை :

இந்த உதவித் தொகை  பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம்  படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. விட்டிலிருந்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்க்கு  ரூ.25,000  வழங்கப்படுகின்றது. ஹாஸ்டலில் தங்கி மாணவர்களுக்கு வருடத்திற்க்கு  ரூ.30,000 வழங்கப்படுகின்றது.

2. மாநில அரசின்  முதல் பட்டதாரி கல்வி உதவி :

மருத்தும் , பொறியியல், சட்டம் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த முதல் பட்டதாரி  மாணவர்களுக்கு தமிழக அரசு அதிக பட்சமாக வருடத்திற்க்கு ரூ.20,000 வரை வழங்கி வருகின்றது. படிப்பு முடியும் வரை இந்த உதவி தொகை வழங்கப்படும்.  இதை பெற முதல் பட்டதாரி சான்றிதழ் பெற வேண்டும். ஏப்ரல் மாதத்திலேயே பெறுவது நல்லது.

மருத்தும் , பொறியியல், சட்ட படிப்பிற்க்கான கவுன்சிலிங்கிற்க்கு விண்ணப்பிக்கும் போதே முதல் பட்டதாரி சான்றிதழை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மருத்தும் , பொறியியல், சட்டம் அல்லாத பிற படிப்பு (B.A, B.Sc, B.Com, B.B.A etc..) படிக்கும் பிற்படுத்தப்பட்ட முதல் பட்டதாரி மாணவர்களுக்கு தமிழக அரசு கல்வி உதவி வழங்கி வருகின்றது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000 - க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
படிப்பிற்க்கு ஏற்ப வருடத்திற்க்கு ரூ.1200 முதல் ரூ.1500 வரை வழங்கப்படுகின்றது.

3. மாநில அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கான (முஸ்லீம்கள் உட்பட) கல்வி உதவி தொகை:

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல துறை சார்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய BC/MBC   மாணவர்களுக்கு கல்வி உதவியை தமிழக அரசு வழங்கி வருகின்றது.  தமிழகத்தில் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வருவதால் இந்த கல்வி உதவிக்கு முஸ்லீம்களும் தகுதியானவர்கள்.

6 - அம் வகுப்பு முதல்  Phd  வரை இந்த கல்வி உதவி தொகை வழங்கப்படுகின்றது.  அதிக பட்சமாக வருடத்திற்க்கு  ரூ.10,000 வரை கல்வி உதவி வழங்கப்படும்.  பெற்றோரின் ஆண்டு வருமான ரூ.50,000 மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  

மாணவர்கள்  பள்ளி /கல்லூரி மூலமாகதான் இதற்க்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி /கல்லூரிகளில் இதற்க்கான விண்ணப்பம் வழங்கப்படும், அதை பூர்த்தி செய்து  பள்ளி /கல்லூரிகளில் சமர்பிக்க வேண்டும். பள்ளி /கல்லூரி நிர்வாகம் http://escholarship.tn.gov.in/scholarship.html இணையதளத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு கல்வி உதவி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். ஒரு முறை கல்வி உதவி வழங்கப்பட்டால் “Renewal” முறையில் படிப்பு முடியும் வரை தொடர்ந்து கல்வி உதவி வழங்கப்படும்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் :

• வருமான சான்றிதழ் (Income Certificate)
• சாதி சான்றிதழ் (community Certificate)
• ஆதார் எண்
• இருப்பிட சான்றிதழ் (Residential Certificate)
• மாணவரின் வங்கி கணக்கு

கூடுதல் விபரங்கள் இந்த இணையதளங்களில் உள்ளது
http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm
http://escholarship.tn.gov.in/scholarship.html

4. மத்திய அரசின் 80 % மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி உதவி தொகை :

“CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIP FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS” என்ற கல்வி உதவி தொகையை மத்திய அரசு அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது
இள நிலை பட்ட படிப்பு (any UG course) , முதுகலை பட்ட படிப்பு (any PG course) படிப்பவர்கள் இந்த கல்வி உதவிக்கு தகுதியானவர்கள்.

மாணவர்கள் குறைந்தது 80% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். 80 % குறைவாக மதிப்பெண் எடுத்தால் இதற்க்கு விண்ணப்பிக்க முடியாது. வருடத்திற்க்கு மொத்தம் 82, 000 மாணவர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படுகின்றது. இதில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதில் 27% பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (முஸ்லீம்களையும் சேர்த்து)   ஒதுக்கப்படும்.

பெற்றோரின் ஆண்டு வருமான ரூ.4,50,000 மிகாமல் இருக்க வேண்டும். இளநிலை பட்ட படிப்பு (UG course)  படிப்பவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். முதுகலை பட்ட படிப்பு (PG course)  படிப்பவர்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். உதவி தொகை மாணவரின் வங்கி கணக்கிற்க்கு  நேரடியாக செலுத்தப்படும். ஒரு முறை கல்வி உதவி பெற்றால் படிப்பு முடியும் வரை Renewal முறையில் தொடர்ந்து பெறலாம்.

அடுத்த அடுத்த ஆண்டுகளில் 60 %  மேல் மதிப்பென் எடுக்க வேண்டும் , 75 % மேல் வருகை பதிவேடு (Attendance) இருக்க வேண்டும். குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் கல்வி உதவி தொகை நிறுத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :  

மாணவர்கள்  கல்லூரி மூலமாகதான் இதற்க்கு விண்ணப்பிக்க வேண்டும. கல்லூரி நிர்வாகம் http://www.scholarships.gov.in  இணையதளத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு கல்வி உதவி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். மேலே குறிபிட்ட Post-Metric ஆவணங்களே இதற்க்கும் பொருந்தும்.

5. மாற்று திறனாளிகலுக்கான (ஊனமுற்றோர்) கல்வி உதவி தொகை :

மருத்துவம் , தொழில் நுட்ப கல்வி (பொறியியல்) பயிலும் மாற்று திறனாளி (ஊனமுற்றோர்)  மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு கல்வி உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டிற்க்கு 2500 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகின்றது. மாணவர்கள் குறைந்தது 50% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். நேரடியாக மாணவரின் வங்கி கணக்கிற்க்கே கல்வி உதவி தொகை அனுப்பி வைக்கப்படும்.
படிப்பிற்க்கு ஏற்ப வருடத்திற்க்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகின்றது.

விண்ணப்பிக்கும் முறை :  

மாணவர்கள்   http://www.nhfdc.nic.in/scholarship.html இணையதளதில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். கீழ் காணும் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

• மாற்று திறனாளி (ஊனமுற்றோர்) என்பதற்க்கான சான்று
• மதிப்பெண் சான்றிதழ் (Mark sheet)
• வருமான சான்றிதழ் (Income Certificate)
• கல்வி கட்டண ரசீது (Fee Receipt )
• ஆதார் எண்
• மாணவரின் வங்கி கணக்கு

கூடுதல் விபரங்கள் இந்த இணையதளங்களில் உள்ளது
http://www.nhfdc.nic.in/scholarship.html

6. INSPIRE ஊக்கத்தொகை (INSPIRE Scholarship) :

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிவியல் பாடப்பிரிவு படிக்கும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.80,000 வரை ஊக்கத்தொகையை மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை வழங்கி வருகின்றது.

திறமையான மாணவர்களை அறிவியல் துறையின் பக்கம் ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for inspired Research - INSPIRE)   என்ற திட்டத்தின் கீழ்  அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை (Scholarships for higher Education)  வழங்கப்படுகிறது.

தகுதியான மாணவர்கள் :

1) கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், எர்த் சயின்சஸ் (Earth science) , லைஃப்சயின்சஸ் (Life science ) உள்பட அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் B.Sc, B.Sc (Hons.), ஒருங்கிணைந்த M.S அல்லது M.Sc. படிக்கும் மாணவர்கள்.

2) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் (CBSE/State Board) முதல் ஒரு சதவீத இடங்களுக்குள் இருக்க வேண்டும்.

3) ஐ.ஐ.டி.களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பின் கீழ்  அடிப்படை அறிவியல் பாடப்பிரிவு (Integrated M.Sc) படிக்கும் மாணவர்கள்.

4) தேசிய அளவிலான போட்டித் தேர்வு (COMPETATIVE EXAM) மூலம் பல்கலைக்கழகத்தில் அடிப்படை அறிவியல் பாடங்களில் இளநிலைப் பட்டம் அல்லது ஒருங்கிணைந்த படிப்பு (Integrated M.Sc) படிக்கும் மாணவர்கள்.

5) இந்திய இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் (I.I.S.R) கல்வி நிறுவனங்கள், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச்(N.I.S.E.R.), அணுசக்தித் துறையின் சென்டர் ஃபார் பேசிக் சயின்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள்.

6) விண்ணப்பிக்கும் போது மாணவர்களுக்கு 17 - 22 வயதுக்குள் இருக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  

விண்ணப்ப படிவத்தை http://www.inspire-dst.gov.in என்ற இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து  பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் கீழ் காணும் ஆவணங்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு சாதாரண தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
  "Director, National Institute of Science, Technology & Development Studies (NISTADS), Dr K.S. Krishnan Marg, New Delhi  - 110 012"

குறிப்பு :

1. பட்டப் படிப்பு நிலையில் அடிப்படை அறிவியல் பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கே இந்த உதவி தொகை பொருந்தும் .

2. இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ், எலெக்ட்ரானிக் சயின்ஸ், மெடிக்கல் மற்றும் பயோ - மெடிக்கல் சயின்ஸ் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கமுடியாது.

இணைக்க வேண்டியஆவணங்கள்:

1) 10-ம் மற்றும் 12ம்வகுப்பு தேர்வுமதிப்பெண் சான்றிதழ் நகல் (SELF ATTESTED).

2)  மாணவர் படித்து வரும் கல்லூரி முதல்வர், கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அல்லது பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் (Endorsement letter)
கூடுதல் விபரங்கள் இந்த இணையதளங்களில் உள்ளது
http://www.inspire-dst.gov.in

***தேர்வுகள் மூலமாக பெறும் கல்வி உதவிகள்***

இதுவரை நேரடி கல்வி உதவி திட்டங்களை பார்த்தோம். இப்போது தேர்வுகள் நடத்தி அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அரசு தரும் கல்வி உதவிகளை பார்க்கலாம்.

மத்திய அரசு சில  திறன் சார்ந்த தேர்வுகளை நடத்துகின்றது. இதில் தேர்சி பெறும் மாணவர்களுக்கு மாத மாதம் கல்வி உதவி வழங்கி வருகின்றது. கல்வி உதவி மாணவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் .

1. NTS தேர்வு:

மத்திய அரசால் நடத்தப்படும் இந்த தேர்வில்  தேர்சி பெறும் மாணவர்களுக்கு கீழ் காணும் உதவி தொகை வழங்கப்படுகின்றது.

10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.500
11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1250  பட்ட படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படுகின்றது.

இந்த http://www.ncert.nic.in/programmes/talent_exam/index_talent.html இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்கள் கீழ் காணும் இணையதளங்களில் உள்ளது.

http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/upload_document/Scheme_NMMS.pdf
https://en.wikipedia.org/wiki/National_Talent_Search_Examination

2. GATE தேர்வு :

இது B.E / B.Tech, M.Sc, MCA, படித்தவர்கள் மேற்படிப்பு படிக்க எழுதும் தேர்வாகும். இந்தியாவில் உள்ள IIT, NIT,  டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், அண்ணா பல்கலை கழகம்  போன்ற  மாநில அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech/M.Plan, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது.

இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் . கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை வழங்குகின்றது. கல்வி உதவி மாணவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் .
விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதத்தில்  IIT-யின் இணைய தளங்களில் (http://gate.iitm.ac.in/) கிடைக்கும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க முடியும்.

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

• B.E / B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.

• AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்

• M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்
விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதத்தில்  IIT-யின் இணைய தளங்களில் (http://gate.iitm.ac.in/) கிடைக்கும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க முடியும்.

3. JRF-NET தேர்வு :

இது BE / B. Tech, B. Pharm, M.Sc  படித்தவர்கள் Phd அல்லது ஒருங்கினைந்த  Phd (integrated MS-Ph.D) படிப்பதற்க்கு எழுதும் தேர்வாகும்.

CSIR நடத்தும்  இந்த  NET தேர்வில் தேர்சி பெற்றால்  மாத மாதம் ரூ.25,000 கல்வி உதவி தொகை வழங்கப்படும். 2 வருடத்திற்க்கு பிறகு  மாணவரின் கல்வி திறனை மதிப்பிட்டு   மாதம் ரூ.28,000 என படிப்பு முடியும் வரை  வழங்கப்படும்.

அதிக பட்ச வயது 28, இந்த தேர்வு வருடத்திற்க்கு 2 முறை நடக்கும், இந்த http://cbsenet.nic.in இணையதளத்தில் தேர்விற்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.  JRF பற்றி கூடுதல் விபரங்கள் www.csirhrdg.res.in  இணையதளத்தில் பெறலாம்.

குறிப்பு : தங்களுக்கு தெரிந்த இன்னும் கூடுதல் கல்வி உதவி விபரங்கள் இருந்தால் Comment-ல் தெரியபடுத்துங்கள் கட்டுரையில் சேர்த்து கொள்கின்றேன்.