Sunday, August 23, 2015

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்
http://uidai.gov.in/update-your-aadhaar-data.html)
சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்குதேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம்



ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது இரண்டு/மூன்று மாவட்டங்களுக்கு ஒரு நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தினை நமது மாநில அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியின் தகுதி உள்ள ஒருவர் தலைவராக இருப்பார். இந்தப் பதவிக்கு மாவட்ட நீதிமன்ற, நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரையே, மாநில அரசாங்கம் தலைவராக நியமிக்கிறது. மேலும் இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அவர்களில் ஒருவர் கண்டிப்பாக பெண் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவபர்கள் கல்வி, கேள்விகளில் தலைசிறந்தவர்களாக இருக்கவேண்டும்! என்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிபந்தனை விதித்திருக்கிறது. ஆனால், ஓரளவு படித்த ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதற்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் நீதிமன்றம் நடைபெறும். தலைவரும் ஒரு உறுப்பினரும் இருந்தால்கூட நுகர்வோர் நீதிமன்றம் நடைபெறும். தலைவர் வரவில்லை என்றால், இந்த நீதிமன்றம் நடைபெறாது.

மற்ற நீதிமன்றங்களைப் போல சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பவும், சாட்சிகளை விசாரிக்கவும் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.

வழக்கறிஞர்களோ, மனுதாரர்களோ தங்களது வாதுரைகளை (Arguments) வாய்மொழியாகவும், எழுத்துமூலமாகவும் நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.
மனுவினை தமிழிலோ, ஆங்கிலத்திலோ தாக்கல் செய்யலாம். மனுவினை மனுதாரரோ, வழக்கறிஞரோ அல்லது நுகர்வோர் பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்தவரோ தாக்கல் செய்யலாம்.

மனுதாரர், எதிர்மனுதாரர் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் முகவர்கள் ஒவ்வொரு கேட்புநாளின்போதும் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டும். சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மனுதாரர், எதிர்மனுதாரர் நீதிமன்றத்திற்கு வராமல் இருக்கலாம். அவர்களுக்குப் பதிலாக, அவர்களது வழக்கறிஞர்கள் அல்லது முகவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்க வேண்டும்.

மனுதாரர் அல்லது மனுதாரரின் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு அற்றும் ஆவணங்கள் குறிப்புரைகள் (Memos) ஆகிய எதற்கும் நீதிமன்ற முத்திரை வில்லைகள் (Court fee stamls) ஒட்ட வேண்டிய அவசியமில்லை. வழக்குரைக்கும் அதிகார ஆவணமான (Vakalat) வக்காலத்தில் மட்டும் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையும், வழக்கறிஞர் நலநிதி முத்திரை வில்லையும் ஒட்டப்படுதல் வேண்டும்.

எதிர்மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குரைக்கும் அதிகார ஆவணத்தில் (Vakalat) மட்டும் நீதிமன்றக் கட்டண முத்திரைவில்லை மற்றும் வழக்கறிஞர் நலநிதி முத்திரைவில்லை ஒட்டினால் போதுமானதாகும். மற்றபடி எதிர்மனுதாரரால் தாக்கல் செய்யப்படும் எதிர்விரை, மெய்ப்பு உண்மை உறுதிமொழி (Proof Affidavit) ஆவணம், ஆவணங்கள் (Documents), வரைமொழி வாதுரை (Written Argument), குறிப்புரை (Memos) ஆகிய எவற்றிற்கும் நீதிமன்றக் கட்டண முத்திரைவில்லை ஒட்டவேண்டிய அவசியமில்லை.

மனுதாரர் தரப்பு ஆவணங்கள் A வரிசையிலும் , எதிர்மனுதாரர் தரப்பு ஆவணங்கள் B வரிசையிலும் குறியீடு செய்யப்படும். ஆவணங்கள் (Original documents) அசல் ஆவணங்களாகவோ, ஜெராக்ஸ் நகல்களாகவோ இருக்கலாம். ஆனால், நீதிமன்றம் அசல் ஆவணங்களைக் கோரினால், அவற்றையே மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆவணம் ஒவ்வொன்றையும் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் மேலுரையுடன் (with Docket) தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனுவை முதலில் நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மனுவுடன் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வக்காலத், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் முகவரியிட்ட இரண்டு பதிவு அஞ்சல் உறைகள் ஆகியவற்றை இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். மனு சரியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால் எதிர்ம்னுதாரருக்கு வழக்குப் பற்றிய அறிவிப்பும், மனுவின் நகலும் அனுப்பி வைக்கப்படும். மனுதாரருக்கு கேட்பு நாள் (Hearing Date) தெரிவிக்கப்படும்.

மனுவை கோப்பில் எடுப்பதற்கு முன்னர், சில விளக்கங்கள் தேவைப்பட்டால், அந்த விளக்கத்தை வழக்கறிஞரிடம் கேட்டு, நீதிபதி திருப்தி அடைந்த பிறகு, அந்த மனுவை கோப்பில் எடுப்பார். வழக்கறிஞரின் விளக்கத்தில் திருப்தி ஏற்படாவிட்டால், அந்த மனுவை கோப்பில் எடுக்கமாட்டார்.

மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகிய இருவரும் அவரவர் தரப்பு சாட்சிகளை அவரவர்களே முன்னிலைப்படுத்த வேண்டும்.

சாட்சிகள் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வந்தால்தான் வருவேன் என்று கூறினால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தாமே பெற்று, அந்த சாட்சிக்கு அழைப்பாணையை சார்வு செய்யலாம்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சாட்சிகளை விரிவான நிலையில் விசாரிக்க, மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தின் காலம் இடந்தரவில்லை என்றுரைத்து தனை விரிவான நிலையில் விசாரிப்பதற்குரிய நீதிமன்றம், உரிமையியல் (Civil Court) நீதிமன்றம்தான். அதனால். இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறேன் என்று, நுகர்வோர் சட்டத்தின் கீழான வழக்கொன்றை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற நீதிபதி அனுப்பி வைக்க முடியாது.

மனுதாரர் தமது மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள விரும்பினால், குறிப்புரை ஒன்று தாக்கல் செய்து, திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தமது மனுவை திரும்ப பெற்றுக் கொள்வது சம்பந்தமாக, தமது மனுவிலும் எழுதி தமது கையொப்பத்தை இடுதல் வேண்டும்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் சமரசம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக இருவரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் குறிப்புரை எழுதிக் கொடுத்தல் வேண்டும்.

மனுவில் இரு தரப்பு வாதமும் கேட்கப்பட்டு தீர்ப்புரை வழங்கப்படும்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் எதிர்வுரை (Counter) 45 நாட்களில் தாக்கல் செய்யப்படுதல் வேண்டும். வழக்கில் எதிர்மனுதாரர் முன்னிலையாகாததால், ஒருதலைபட்சத் (Exparte) தீர்ப்பானால், அதனை நீக்கறவு (Setaside) செய்ய முடியாது.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள், மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதே நேரத்தில், மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்பவர்கள், மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமலிருக்க தடையாணை (Stay order) பெற்றிருக்க வேண்டும். தடையாணை பெறப்படவில்லை எனில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழங்கிய ஆணை நிறைவேற்றப்படும்.

எந்தெந்த சூழ்நிலைகளில் நுகர்வோர் வழக்கிடலாம்?
**********************************************************
பொருள்கள் எதனையும் விலை கொடுத்து வாங்கியிருக்கும் போது அவைகள் பழுதுடையவைகளாகவோ, குறைபாடு உடையவையாகவோ இருக்கும்போது அந்தப் பொருள்கள் எவரிடம் வாங்கப்பட்டதோ அவரிடமே அதனை ஒப்படைத்து, வேறு நல்ல பொருள்களை தரும்படி கோர வேண்டும். அவர் அவ்வாறு குறைபாடுடைய பொருள்களுக்குப் பதிலாக வேறு நல்ல பொருளை மாற்றித் தராதபோது, விற்பனை செய்த பொருள்களை திரும்ப பெற்றுக்கொண்டு அதற்குண்டான தொகையை திருப்பி அளிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்ய மறுப்பாராயின் அவர்மீது இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.

நபர் ஒருவருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கிடுமுன், அதனை எதிர்தரப்பினருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், முன்னதாக அறிவிப்புக் கொடுப்பது நல்லதாகும்.

சேவைக்குறைபாடு தொடர்பாக வழக்கிடுதல்
************************************************
வழக்கறிஞர் ஒருவர் தமது கட்சிக்காரரிடம் வழக்குகளை நடத்த பணத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது, அவர் நீதிமன்றத்தில் தவறாது ஆஜராகி வழக்குகளை நடத்துதல் வேண்டும். வழக்கறின்கரின் வருகையின்மையால், வழக்கு அவரது கட்சிக்காரருக்கு பாதகமானால், அதனால் ஏற்படும் இழப்புக்கு வழக்கறிஞர் பொறுப்பாவார். அதன் பொருட்டு வழக்கறிஞரிடம் இருந்து இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

மருத்துவர் ஒருவர் நோயாளியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவம் மேற்கொண்டபோது அவரது தவறான சிகிச்சையால் நோய் குணமடையாதிருந்தாலோ, தவறான அறுவை சிகிச்சையால் நோயாளி பாதிக்கப்பட்டு இருந்தாலோ நோயாளி மருத்துவரிடம் இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

பொறியாளர் ஒருவர், வீடு கட்டித் தருவதாக ஒருவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சரியான முறையில் வீட்டைக் கட்டித்தராமல் இருந்தாலோ, புதிய வீடு கட்ட அடமானத்தின் மூலம் கடன் தொகையை வழங்க முன்வந்திருக்கும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், உடனுக்குடன் கடன் வழங்காமல் இருந்தாலோ, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வானொலிப் பெட்டி போன்றவற்றை பழுதுபார்த்தவர், அவைகளை சரியாக பழுது பார்க்காமல் இருந்தாலோ, கூரியர், அஞ்சல், மணியார்டர் போன்றவை காலதாமதமாக பட்டுவாடா செய்யப்பட்டாலோ, தொலைபேசித்துறை சரியான சேவை செய்யாமல் கட்டணம் பெற்றாலோ, கட்டணத்தை கூடுதலாக பெற்றாலோ, கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தொலைபேசி இனைப்புக் கொடுக்காமல் இருந்தாலோ, மருத்துவர் ஒருவர் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையை சரியான முறையில் மேற்கொள்ளாததால் பெண்மணி ஒருவர் கருவுற்றாலோ சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து புகார்தாரர் இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

எந்தெந்த வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது
*****************************************************
மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, இந்திய தண்டணைச் சட்டம் மற்றும் பிற குற்றவியல் சட்டங்கள் தொடர்பான வழக்குகள், கடனுறுதிச் சீட்டு, விவாக ரத்து, குழந்தைகள் மீட்பு, ஜீவனாம்சம், அடமான மீட்பு, வாடகைப் பிரச்சனை, நிலப்பிரச்சனையில் தடையாணை பெறுதல் சம்பந்தமான வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது.

அவசரத் தன்மை - Emergent Petition



உரிமையியல் வழக்குகளில் (Civil Cases) எந்த வழக்காக இருந்தாலும், எந்த மனுவாக இருந்தாலும் அதனை அவசரத் தன்மையுடன் தாக்கல் செய்யலாம். மனுவை அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்வதற்கு அவசரத்தனை மனு (Emergent Petition) மற்றும் உண்மை உறுதிமொழி ஆவணத்தை (Affidavit) தாக்கல் செய்வது அவசியமாகும். 

வழக்கு அல்லது மனு அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப் படும் போது, அது சரியான முறையில் இருக்கும் நிலையில் அன்றைய தினமே எண் கொடுக்கப்பட்டு, கோப்பில் எடுத்துக் கொள்ளப்படும்.
அவசரத்தன்மை மனுவுடன் இணைத்துத் தாக்கல் செய்யப்படும் உண்மை உறுதிமொழி ஆவணத்தில் (Affidavit) வாதி/மனுதாரரின் கையொப்பத்தைப் பெற்று, வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து சான்றொப்பம் (Attestation) பெறுதல் வேண்டும். வழக்கை நடத்தும் வழக்கறிஞரே தமது கட்சிக்காரரின் கையொப்பத்தை உறுதி செய்வதாக சான்றொப்பம் இடக்கூடாது.

உண்மை உறுதிமொழி (Affidavit) ஆவணத்தில் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை (Court fee Stamp) ஒட்டுதல் கூடாது.
மனு மற்றும் அதனுடன் தாக்கல் செய்யப்படும் உண்மை உறுதிமொழி ஆவணத்தின் நகல் எதையும் எதிர்வாதி மற்றும் மனுதாரருக்கு அளிக்க வேண்டியதில்லை. மேலும் அது குறித்து எதிர்வாதி/எதிர்மனுதாரருக்கு அறிவிப்பும் கொடுக்க வேண்டியதில்லை.

சொத்து எந்த வகை ...??



சொத்து வாங்கும் அனைவரும் பத்திரம், பட்டா என சொத்து தொடர்பான ஆவண சரிபார்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த சொத்தை வாங்குவதற்கு முனைப்பு காட்டுவார்கள். சொத்துக்கான பத்திரம், பட்டா சரியாக இருந்தாலும் அந்த சொத்து விற்பனை செய்பவருக்கு எந்த வகையில் வந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பாகப்பிரிவினை

அந்த ஆவணங்களை நன்றாக படித்து பார்த்து விட்டு அதில் வேறு ஏதேனும் வில்லங்கங்கள் இருக்கும் வகையிலான வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? என்பதை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம். ஏனெனில் சொத்தை விற்பனை செய்பவருக்கு அது அவருடைய சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அதைவிடுத்து அவருக்கு வேறு வகையில் சொத்து வந்திருந்தால் அதில் இருக்கும் விவரங்களை கூர்ந்து படித்து இறுதி செய்வது நல்லது.

அதிலும் பாகப்பிரிவினை மூலம் சொத்து வந்திருந்தால் முறைப்படி பாகப்பிரிவினை செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். சில இடங்களில் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் பாகப்பிரிவினை செய்திருப்பார்கள். ஆனால் தனித்தனியாக அவரவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்திருக்க மாட்டார்கள். ஒருவேளை உங்களுக்கு விற்பனை செய்பவர் மட்டும் பத்திரப்பதிவு செய்து இருக்கலாம்.

பத்திரப்பதிவு

அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக குறிக்கப்பட்டிருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இடத்தின் நான்கு பக்கங்களிலும் என்னென்ன இருக்கிறது என்பதுடன் அந்த இடத்தின் பரப்பளவு சரியாக இருக்கிறதா? என்பதை சர்வேயர் மூலம் உறுதி செய்து கொள்வது அவசியம்.

ஏனெனில் சொத்தை விற்பனை செய்பவருடைய குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் தங்கள் பாகப்பிரிவினை இடத்தை பத்திரப்பதிவு செய்யும் போது இட அளவுகள் சரியாக இருந்து வில்லங்கம் ஏற்படாமல் இருந்தால் பிரச்சினை இல்லை. அதுபோல் சொத்தை விற்பனை செய்பவர் தன்னுடைய பெயருக்கு பட்டா உட்பிரிவு செய்து இருக்கிறாரா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பட்டா பெயர் மாற்றம்

அவர் பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் பத்திரப்பதிவு மட்டும் செய்திருக்கும் பட்சத்தில் அந்த சொத்துக்கான பட்டா அவருடைய குடும்பத்தினர் பெயரில்தான் இருக்கும். அதை அவருடைய பெயருக்கு மாற்றிய பிறகுதான் நீங்கள் உங்கள் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அவர் சொத்தை விற்கும் அவசரத்தில் உங்களுக்கு பத்திரப்பதிவு மட்டும் செய்து கொடுத்துவிட்டால் பின்னர் பட்டாவுக்கு அவரை தேடி அலைய வேண்டியிருக்கும்.

அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் பிரச்சினை இல்லை. எனவே வாங்கும் சொத்தின் பத்திரம், பட்டா போன்ற ஆவணங்கள் அவர் பெயரில் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்வது அவசியம்.

நிபந்தனைகள்

அதேபோல் சொத்தை விற்பனை செய்பவருக்கு அந்த சொத்து தானப்பத்திரம் மூலம் வழங்கப்பட்டிருக்கலாம். அவருக்கு அந்த சொத்தை தானமாக கொடுத்தவர் யார்? என்பதை தெரிந்து கொள்வதுடன் அவருடைய முழு சம்மதத்துடன்தான் சொத்து எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக சொத்தை எழுதி கொடுத்தவர் ஏதேனும் நிபந்தனைகள் எதுவும் குறிப்பிட்டிருக்கிறாரா? என்பதை சரிபார்த்துக்கொள்வது அவசியம்.

ஏனெனில் சொத்தை தானமாக கொடுத்தவர் வாழ்நாள் மூலம் அதை தானமாக பெற்றவர் அனுபவிக்க மட்டுமே முடியும் என்று குறிப்பிட்டிருக்கலாம். அதுபோல் வேறு ஏதேனும் நிபந்தனைகள் குறிப்பிட்டிருந்தாலும் அப்படிப்பட்ட சொத்தை வாங்குவது சிக்கலை உருவாக்கி விடும். அதுபோல் தான–செட்டில்மெண்ட் மூலமும் ஒருவருக்கு சொத்து கிடைத்திருக்கலாம்.

சொத்தின் வகை

அது அவருடைய குடும்ப உறவுகளிடமிருந்து அல்லாமல் வேறொருவர் மூலமாக பெற்றிருக்கலாம். ஒருவருக்கு சொத்து எப்படி வந்திருந்தாலும் அதில் வில்லங்கம், நிபந்தனைகள் ஏதும் இருக்கிறதா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. அதேபோல நீங்கள் வாங்கும் சொத்து மைனருடைய சொத்தாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய சொத்தை நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் அனுமதி பெற்றுதான் விற்பனை செய்ய முடியும். எனவே வாங்கும் சொத்து எந்த வகையை சார்ந்தது என்பதையும் தெளிவுபடுத்திக்கொண்டு இறுதி முடிவு எடுப்பது நல்லது.

COMMUNITY, INCOME, RESIDENCE CERTIFICATE ONLINE,,,,,,,



சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதழ்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ் , இருப்பிடச் சான்றிதழ் ,வருமானச் சான்றிதழ் , No Graduate போன்றச் சான்றிதழ்களை பெற முடியும்.
இணைய முகவரி: http://edistrict.tn.gov.in/

PAN Card - Mandatory



இந்தியாவில் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளுக்குப் பான் நம்பர் எனப்படும் நிரந்தக் கணக்கு எண் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. இந்த எண் குறிப்பிடப்படும்போது வருமான வரித் துறைக்கு அதன் தொடர்பான அனைத்து விவரங்களையும் தொடர்புப்படுத்திக்கொள்ள உதவும் என்பதால் இது அவசியமானதாகிறது. வருமான வரி செலுத்துபவர் பற்றிய விவரங்களை ஆராயவும் அவரது பல்வேறு முதலீடுகள், கடன்கள் மற்றும் பிற வர்த்தக நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்த இணைப்புகள் உதவும். இந்நிலையில் பான் எண் அவசியமாகத் தேவைப்படும் சில முக்கிய இடங்களையும், அதன் வழிமுறைகளையும் பார்ப்போம்...
பணப் பரிவர்த்தனை
****************************
ஒரு லட்சம் அல்லது அதற்கு அதிகமான மதிப்புடைய வியாபாரத்திற்கு நிரந்தரக் கணக்கு எண் அல்லது பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது டீலர்களுக்குத் தரப்படும் தொகை மற்றும் தங்க நாணயம் வாங்குதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
ஹோட்டல் அல்லது உணவு விடுதி
***************************************************
ஒரே நேரத்தில் இருபத்தைந்தாயிரம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ஒரு ஹோட்டலுக்கோ அல்லது உணவு விடுதிக்கோ தரப்படும்போது பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.
விமானப் பயணம்
***************************
வெளிநாடு செல்ல ஒரே சமயத்தில் பயணக் கட்டணமாகச் செய்யப்படும் செலவு இருபத்தைந்தாயிரம் அல்லது அதற்கு மேல் இருந்தால் விமான நிறுவனங்கள் பான் எண்ணை அவசிமாகப் பெறப்படுகிறது.
ஆயுள் காப்பீடு
*********************
ஒரு வருடத்திற்குள் ஐம்பதாயிரம் அல்லது அதற்கதிகமான தொகைக்கு ஆயுள் காப்பீட்டுப் பிரிமியத் தொகை செலுத்தும் போது பான் எண் அவசியம்.
வைப்பு நிதி திட்டம்
*******************************
வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலகத்தில் செலுத்தப்படும் ஐம்பதாயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான வைப்புத் தொகை செலுத்தும் போது பான் எண் அவசியம்.
தொலைப்பேசி இணைப்பு
***************************************
தனிநபர் அல்லது அலுவலகத்திற்குத் தொலைப்பேசி அல்லது செல்ஃபோன் இணைப்புப் பெறத் தரப்படும் விண்ணப்பத்தில் கூடப் பான் எண்ணை முக்கியமாக ஆவணமாகக் கருதப்படுகிறது.
காசோலை
*****************
ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள வங்கி ஆணை அல்லது காசோலைகளை வங்கிகளில் பெற விண்ணப்பிக்கும் போது பான் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்
பங்கு அல்லது கடன் பத்திரங்கள்
*********************************************
ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் பங்கு அல்லது கடன் பத்திரங்கள் வாங்க அல்லது விற்கப்படும்போது செய்யப்படும் ஒப்பந்தத்தில் பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.
வங்கிக் கணக்கு
************************
வங்கிக் கணக்கை துவக்கும் நபர் இளையவராக அதாவது மைனர் இருந்தால், அவருடைய தந்தை, தாய் அல்லது காப்பாளர் பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டு
********************************************
வங்கிகள் உங்கள் சேமிப்பு கணக்கின் மீது நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்க விரும்பினால், இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது பான் எண் கட்டாயமாகக் கோரப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்டு
***************************
மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டுகள் அல்லது பங்குகள் வாங்கும்போது அதன் மதிப்பு ஐம்பதாயிரம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால்
பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கி
******************
ஐம்பதாயிரத்திற்கு அல்லது அதற்கும் அதிகமான தொகைக்கு ஒரு நிறுவனம், அமைப்பு அல்லது ரிசர்வ் வங்கி வெளியிடும் கடன்பத்திரங்கள் அல்லது பங்குப்பத்திரங்கள் வாங்கும்போது பாண் எண்ணை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும்
வாகனம்
****************
கடந்த சில மாதங்களாக எந்த ஒரு வாகனம் அல்லது மோட்டார் வாகனங்களை வாங்கும்போதும் பாண் எண் பெறப்படுகிறது. இதன் மூலம் அரசு அதிக மதிப்புடைய உங்களின் ஒவ்வொரு பரிவர்த்தனையும் கவணிக்கத் துவங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
படிவ எண் 60
******************
பான் எண் இல்லாமல் மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புபவர் படிவ எண் 60ஐ சமர்ப்பிக்க வேண்டும். விவசாயத்தின் மூலம் வருமானம் பெறும் நபர் படிவ எண் 61ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

Sunday, August 16, 2015

கிரயப் பத்திரம் { LAND DOCUMENT }தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?



கிரயப் பத்திரம் { LAND DOCUMENT }தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று கிரயப் பத்திரம் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.

கிரயப் பத்திரம்:

கிரயப் பத்திரம் பெற பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளரை அணுக வேண்டும்.

காவல்துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் அல்லது உறுதிமொழி ஆணையர் (OATH COMMISSIONER) முன்பாக பிறப்பிக்கப்பட்ட உறுதிமொழி (AFFIDAVIT), சர்வே எண் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தர வேண்டும்.

ஆவணக் கட்டணம் ரூ.100. இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ.20 கட்ட வேண்டும்.

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.

தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இதற்கு பிறகு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும்

பத்திரம் பதிவு செய்வதில் கவனிக்க வேண்டியவை என்ன் ?



நாம் நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால், முதலில் அந்த நிலம் அல்லது வீட்டின் மூலப்பத்திரம், பட்டா, சிட்டா போன்றவற்றை நன்றாக படித்து பார்க்க வேண்டும்.

பத்திரம் பதிவு செய்வதில் கவனிக்க வேண்டியவை என்ன் ?
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

முத்திரைதாள்களில் கிரயப்பத்திர விவரங்களை டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்ப்பகுதியில் ஒருபுறம் சொத்து வாங்குபவரும், மறுபுறம் சொத்து விற்பவரும் கையெழுத்து இட வேண்டும்.

சார்பதிவாளரிடம் இந்த கிரயப்பத்திரத்தை பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும். அவர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைபடம், அடையாள அட்டை ஆகியவற்றையும் மற்ற விவரங்களையும் சரிபார்த்து, பதிவு இலக்கம் அளிப்பார்.

பதிவுக்கட்டணம் செலுத்திய பின், முதல் முத்திரைத்தாளின் பின்புறம் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை ஆகியவை பெறப்படும்.
புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர்.
இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக்கட்டணம் செலுத்திய ரசீதில், சார் பதிவாளரும், சொத்து வாங்குபவரும் கையொப்பம் இட வேண்டும். பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு, ரசீது காட்டி, சொத்து வாங்குபவர் பெற்றுக் கொள்ளலாம்.

வேறு யாரேனும் வாங்க வேண்டியிருப்பின், அந்த நபரும் ரசீதில் கையொப்பமிடவேண்டும்.நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்(சர்வே எண்) அமைந்திருக்கலாம்.

பத்திரம் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குவது?
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து மதிப்பீடு செய்யப்பட்டு அரசு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு வழிகாட்டி மதிப்பு (கைடு லைன் வேல்யூ) என்று பெயர். பத்திரப்பதிவின் போது இந்த மதிப்பீட்டில் 8 சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.

சொத்து மதிப்பை நாம் நிர்ணயம் செய்யலாமா?
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
47-ஏ பிரிவு என்றால் என்ன?
“”””””””””””””””””””””””””””””””””””””””””
அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அதிகம். என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்து மதிப்பு நிர்ணயம் செய்து, அதில் 8 சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்கலாம்.

சார்பதிவாளர் இப்பத்திரத்தை பதிவு செய்து விட்டு �பெண்டிங் டாக்குமென்ட்� என முத்திரை இட்டுவிடுவார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென ஒரு பிரிவு இருக்கிறது. அங்குள்ள அலுவலர் குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றியுள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து, வழிகாட்டி மதிப்பு சரியானதா என்பதை முடிவு செய்வார்.அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார். வழிகாட்டி மதிப்பு சரியாகவே உள்ளது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில், அதற்கு நாம் நிர்ணயித்த மதிப்புக்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8 சதவீதத்தை செலுத்த வேண்டும். அல்லது அவர் நிர்ணயித்த மதிப்புக்கும் நாம் நிர்ணயித்த மதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தில் 8 சதவீதத்தை செலுத்த வேண்டும். அதன் பிறகே பதிவு செய்த பத்திரம் நம்மிடம் ஒப்படைக்கப்படும். இம்முறைக்கு 47 ஏ பிரிவு என்று பெயர்.

குறிப்பிட்ட காலத்துக்குள் மீதித்தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தை பெற வேண்டும். இல்லையெனில், அது மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அதன் பிறகு அங்கு சென்று வித்தியாசத் தொகையைச் செலுத்தி பெற்றுக் கொள்ள கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும்.

41 படிவம் பற்றி தெரியுமா?
“”””””””””””””””””””””’””””””””””””””””””
வழிகாட்டி மதிப்பின் 8 சதவீத அளவுக்கும் முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலை, அல்லது கிடைக்க வில்லை எனில் அதற்கும் வழி உண்டு.குறிப்பிட்ட அளவுக்கு முத்திரைத்தாள் வாங்கி, மீதித்தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம். இதற்கு 41 என்ற படிவம் உள்ளது.

வாங்க வேண்டிய முத்திரைத்தாள்களின் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய தொகை ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப்பத்திரத்துடன் தாக்கல் செய்ய வேண்டும்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் நாம் செலுத்த வேண்டியது ஆயிரம் ரூபாய் வரை எனில் பணமாகவே செலுத்தலாம்.

அதற்கு மேல் இருந்தால் வரைவேலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தவேண்டும்.

எந்த பெயரில் டி.டி எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த அலுவலக தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும். வழிகாட்டி மதிப்பில் ஒரு சதவீதத்தை பதிவுக்கட்டணமாகவும், ரூ. 100யை கணினி கட்டணமாகவும் செலுத்த வேண்டும். இதையும் ரூ. 1000 வரை பணமாகவும், அதற்கு மேல் எனில் காசோலையாகவும் அளிக்க வேண்டும்.
 —

வெளிநாட்டில் இருந்து கொண்டே நம்முடைய பெயரில் சொத்துக்களை இந்தியாவில் வாங்க முடியும்


பெரும்பாலானவர்கள் வேலைக்காக வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவர்களில் தன்னுடைய பெயரில் வீட்டு மனை அல்லது வீடு வாங்க முயற்சிக்கும் போது வெளிநாட்டில் இருந்து கொண்டே நம்முடைய பெயரில் சொத்துக்களை இந்தியாவில் வாங்க முடியும்.

அதற்கான வழிமுறைதான் இந்த ஜெனரல் பவர் ஆஃப் அட்டார்னி
Power of (General Attorney (GPA or GPOA) or Purchase Power.

தேவையான ஆவணங்கள்

பவர் எழுதி கொடுப்பவரின் (Principle)
புகைப்பட அடையாளச் சான்று
இருப்பிடச் சான்று
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்
ரூபாய் 20-க்கான முத்திரைத் தாள் (பத்திரம்)
பவர் ஏஜண்ட் (எழுதி வாங்குபவர்)-ன்
புகைப்பட அடையாள அட்டை ( Photo identity proof)
இருப்பிடச் சான்று (Residence Proof)
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்
இரு அத்தாட்சிகளின் (Two witness)
புகைப்பட அடையாளச் சான்று (Photo ID proof)
இருப்பிடச் சான்று (Residential proof)
இந்த ஆவணங்களை தங்களது சொந்த ஊரில் (தமிழ்நாட்டில்) இருக்கும் போதே SUB_REGISTRAR OFFICE (சார் பதிவாளர் அலுவலகம்) தாக்கல் செய்யலாம்.

செலவு தொகை:
ரூபாய் 1100க்கான வரவு காசோலை (DEMAND DRAFT) உள்ளுரில் மாற்றத்தக்க (LOCAL CLEARANCE) வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்கின்றோமோ, அந்த சார்பதிவாளர் அலுவலக‌ பெயரிலே டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு: Sub Registrar, Tiruchirappalli Joint-III, Trichy
ரூபாய் 1100 கட்டணம் தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பவர் கொடுப்பதற்கு மட்டுமே.
ரூபாய் 10100 கட்டணம் குடும்ப நபர்கள் இல்லாது நண்பர்கள் அல்லது மாற்று நபர்களுக்கு(Third Party) பவர் கொடுபதற்கு பொருந்தும்.

தாக்கல் செய்யும் முறை:
மேற்கண்ட ஆவணங்கள் தாக்கல் செய்வதற்காக, பத்திரம் எழுதுபவர்களிடம் சென்று ஷரத்துக்களை முதலில் பத்திரத்தில் டைப் செய்து கொள்ள வேண்டும். (ஆங்கிலம் அல்லது தமிழில் ) அல்லது எளிதாக நாமே கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி தெளிவாக எழுத வேண்டும்.
அல்லது சிவில் வக்கீல்களை கொண்டு பத்திரத்தில் ஷரத்துகளை டைப் செய்து கொள்ளலாம்.

இந்த பவர் ஆஃப் அட்டார்னி எதற்கெல்லாம் உதவும்.

சொத்துகளை தனது பெயருக்கு வேறொருவரின் மூலமாக வாங்கலாம்.
வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது பத்திரம் பதிவு செய்யும் இடத்திற்கு வராமலேயே, இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்தும் கொள்ளலாம்.
சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆவணக்கள் காலவாதி ஆகாது.
முக்கியமான ஒன்று யாதெனில், எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை, இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது ஆகும்..

வரன்முறைகள்:

இந்த ஆவணத்தின் மூலம் சொத்துக்கள் வாங்க மட்டுமே முடியுமே, தவிர சொத்துக்களை விற்க முடியாது
சொத்துக்களை விற்பனை செய்ய நினைத்தால் சொத்து விவரங்கள் கண்டிப்பாக பத்திரத்தில் பதிய வேண்டும்.
ஆனால் சொத்துக்கள் வாங்கும் போது சொத்து விவரங்களை பதிவு செய்ய அவசியமில்லை.
அவ்வாறு சொத்து விவரங்களை வாங்கும் போது பதிய நினைத்தால் அது ஸ்பெஷல் பவர் ஆஃப் அட்டார்னி ஆகிவிடும். அது ஒரே ஒரு சொத்து அல்லது சொத்துக்கல்(பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்துக்களை மட்டும்) வாங்க மட்டுமே வாங்க செல்லுபடி ஆகும்.

இதன் பயன்கள்:

வெளிநாட்டில் இருக்கும் போதே தாயகம் செல்லாமல் முறையாக சொத்துக்களை நம்முடைய பெயரிலே வாங்கிக் கொள்ளலாம். இதனால் அவசர பயணம் தவிர்க்கப்படும்.
இதை தவிர ஷரத்தில் எழுத்தப்பட்ட அத்தனை விவரங்களும் முறையாக செயல்படுத்தலாம்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் ஷரத்த்துகளை பத்திரத்தில் பயன்படுத்தலாம்.
வங்கிகள் மற்றும் வெளிநாடுகளில் இந்த ஆவணங்கள் உதவ ஆங்கிலத்தை ஷரத்தை ஆங்கிலத்தில் தயார் செய்து கொள்வது நல்லது.
வெளிநாட்டில் இந்த ஆவணங்கள் தாக்கல் செய்ய இந்தியன் கான்சலேட் அல்லது எம்பாசியை அணுகலாம்.

எழுதும் முறை:

முதலில், ஷரத்துக்களை தாயகத்தில் ஆங்கிலத்தில் வக்கில் அல்லது பத்திரம் எழுதுபவர்கள் மூலம் டைப் செய்து இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
அதனை சாதாரண ஏ4 ஷீட்(தாளில்)ல் ப்ரிண்ட் செய்து கொள்ள வேண்டும்.
ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் தங்கள் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டு பவர் ஆஃப் அட்டார்னிக்கான தொகையை (துபாய் நாட்டில் 115 திர்ஹம்கள்) செலுத்தித் தூதரக அதிகாரிகள் முன்பு ஆவணங்களில் கையோப்பம் இடல் வேண்டும்.
தூதரக அதிகாரி முத்திரை மற்றும் அவரது கையொப்பம் பெற்றதும்
அதனை அப்படியே இந்தியாவுக்கு தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்ப வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து இந்த ஆவணம் வந்ததற்காக. அந்த தபால் கவரை அல்லது கூரியர் கவருடன்….
பவர் ஆஃப் அட்டார்னி எழுதி வாங்கிய நபர் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் தாக்கல் செய்ய அதற்கான கட்டணங்களுடன் (ரூபாய் 1100 அல்லது ரூபாய் 10100 கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து கொடுத்தால்.
இதனை 90 நாட்களுக்குள் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிய வேண்டும். (சட்டம் என்ன சொல்கிறது என்றால் இப்படி எழுதப்பட்ட ஆவணம் இந்தியாவிற்கு வந்த 90 தினங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். எனவே அங்கிருந்து வந்த தபால் கவர் மிகவும் முக்கியம்!)
அதனை சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் அட்ஜுடிகேஷன்(adjudication) அல்லது பதிவு செய்து கொள்வார்கள்.
ஒரிஜினல் பத்திரத்தை 7 நாள் அல்லது 10 நாளில் சப்ரிஜிஸ்டர் ஆபிஸில் பெற்றுக்கொள்ளலாம்.

மாதிரிப் படிவம்
*******************************
DRAFT CONVENTIONAL FORMAT /GENERAL POWER OF ATTORNEY

******************************************************************************************

THIS DEED OF GENERAL POWER OF ATTORNEY HAS BEEN EXECUTED ON THE DAY OF 21ST OF APRIL MONTH 2013, AND EXECUTED PLACE: ….…

BE IT KNOWN TO ALL MEN BY THESE PRESENTS THAT, I XXXXXXXXX (PASSPORT NO. FXCXCSXX) S/O. XXXXXXXXX, AGED XX YEARS, NON-RESIDENT INDIAN (NRI), PRESENTLY RESIDING IN XXXXXXX, XXXXXX AND PERMANENT ADDRESS OF ORIGIN AT NO. 23, XXXXXXX, TRICHY DISTRICT – 620124, TAMIL NADU, DO HEREBY NOMINATE CONSTITUTE AND APPOINT MY FATHER MR. XXXXXX (FAMILY CARD NO. 17/G/XXXXX) S/O.XXXXXXX , AGED XXYEARS, PRESENTLY RESIDING AT NO. 23, XXXXX, XXXXXXX, TRICHY DISTRICT – 6200124, TAMIL NADU, WHOSE HAND AND SIGNATURE ARE IDENTIFIED AT THE FOOT OF THESE PRESENTS, TO BE MY TRUE AND LAWFUL ATTORNEY FOR ME AND IN MY NAME AND ON MY HALF TO DO AND EXECUTE ALL AND ANY OF THE FOLLOWING ACTS, DEEDS AND THINGS AND TO EXERCISE ALL AND ANY OF THE POWERS AND AUTHORITIES HEREBY CONFERRED AND CONFIRMED, NAMELY:-

1. TO PURCHASE IMMOVABLE PROPERTIES ON MY BEHALF IN MY NAME IN INDIA OUT OF THE FUNDS SOLELY BELONGING TO ME.

2. THAT YOU HAVE TO ACT AS MY ATTORNEY, TO NEGOTIATE AND PAY THE ADVANCE AMOUNT TO THE VENDOR FROM OUT OF THE FUNDS PROVIDED FOR AND TO ENTER SALE AGREEMENT WITH THE VENDOR.

3. TO GET LEGAL OPINION REGARDING THE LEGAL ASPECTS OF THE PROPERTY CONCERNED FROM THE ADVOCATES.

4. TO APPLY ENCUMBRANCE CERTIFICATE REGARDING THE ENCUMBRANCE OF THE PROPERTY CONCERNED ON MY BEHALF IN MY NAME IN INDIA AT CONCERNED JURIDICTIONAL SUB-REGISTRAR OFFICE(S) OF THE DISTRICT(S) WHERE THE PROPERTY BELONGS TO.

5. AND TO APPLY LEGAL ESTIMATION OF THE PROPERTY WITH CONCERNED ESTIMATOR / ENGINEER TO PAY THE NECESSARY FEES AND SIGN ON MY BEHALF IN ANY AND EVERY DOCUMENT / FORM(S)

6. TO SIGN AS VENDOR POWER OF ATTORNEY IN THE APPROPRIATE FORMS AND ALSO SIGN IN THE SALE DEED ALONG WITH THE VENDOR IN THE PRESENCE OF THE CONCERNED SUB-REGISTRAR, WHERE THE SALE DEED HAS TO BE REGISTERED AND TO PAY THE ENTIRE BALANCE OF SALE CONSIDERATIONS TO THE VENDOR AND ALSO PAY NECESSARY REGISTRATION FEES IN THE SUB-REGISTRAR’S OFFICE.

7. AND ALSO TO DO EVERY ACT INCLUDING PREPARING THE PLAN, TO SIGN IT, TO PRESENT IT TO THE ALL AND TOGETHER CONCERNED AUTHORITIES TO PAY THE NECESSARY FEES AND SIGN ON MY BEHALF IN ANY AND EVERY DOCUMENT.

8. TO RECEIVE FROM THE PURCHASER(S) SALE CONSIDERATION AND TO GIVE PROPER RECEIPTS AND DISCHARGES FOR THE SAME.

9. TO APPLY TO THE COMPETENT AUTHORITIES FOR MUTATION OF MY PROPERTIES IN FAVOUR OF AND IN THE NAME OF THE PURCHASER.

10. TO FILE PETITIONS AND SUITS AND APPLICATION AND TO EXECUTE THE DEEDS BEFORE COURTS OF ALL NATURE AND BEFORE ALL CONCERNED AUTHORITIES TO DEFEND AND TO COLLECT THE INTERESTS OF ALL NATURE TO REPRESENT BEFORE ALL SUCH COURTS AND AUTHORITIES AND TO DEFEND AND TO EXPEND ANY SUCH MONEY REQUIRED THEREFORE AND TO PASS RECEIPT THEREFORE.

11. TO COMMENCE AND PERSECUTE AND DEFEND ALL LEGAL PROCEEDINGS, TO APPOINT SOLICITOR AND ADVOCATES, TO DECLARE AND SIGN ALL PLAIN, WRITTEN STATEMENTS, AFFIDAVITS ETC., TO PROTECT AND TO DEFEND OR TO OPPOSE AS MY BE NECESSARY IN RESPECT OF THE PROPERTIES AS MY ATTORNEY.

12. TO RECEIVE, ACKNOWLEDGE AND TO REPLY ALL NOTICES SUMMONS, LETTERS, ETC., IN CONNECTION WITH THE PROPERTY AND TO TAKE SUCH OTHER SUITABLE ACTION AS MAY BE FOUND EXPEDIENT AND NECESSARY BY ATTORNEY.

13. AND TO INVEST ANY OF MY MONEYS IN SUCH MANNER, AT SUCH RATE OF INTEREST AND UPON SUCH SECURITY AS MY SAID ATTORNEY SHALL IN HIS ABSOLIUATE DISCRETION THINK FIT, AND FROM TIME TO TIME TO ALTER AND VARY THE SAID INVESTMENTS, AS AFORESAID, TO DEPOSIT THE SAID MONEYS OR ANY PART THEREOF WITH ANY POST OFFICE, BANK OR BANKS TO WHOM MY SAID ATTORNEY SHALL THINK FIT TO ENTRUST

14. TO REPRESENT ME BEFORE ALL CENTRAL AND STATE GOVERNMENT, MUNICIPAL CORPORATION AND ELECTRICITY BOARD, TELEPHONE DEPARTMENT, AND ANY OF ITS AUTHORITIES FOR ANY PURPOSE WHATS OVER IN REGARD TO MY INTEREST OF THE MY PROPERTIES.

15. AND GENERALLY CONCERNING THE MATTERS, PROPERTIES AND PURPOSE MENTIONED HEREIN AND TO EXERCISE ALL THE RIGHTS AND POWERS TO WHICH I KNOW OR SHALL HEREAFTER AT ANY TIME BE ENTILES, TO EXECUTE AND PERFORM ANY AND EVERY ACT, DEED, MATTER OR THING WHICH IN CONNECTION THEREWITH THOUGHT TO BE DONE, EXECUTED AND PERFORMED IN THE OPINION OF ANY ATTORNEY AS FULLY, AND EFFECTIVELY TO ALL INTENTS AND PURPOSES AS I MIGHT AND COULD DO, EVEN I AM PERSONALLY PRESENT.

16. I DO HEREBY AGREE TO RATIFY AND CONFIRM ALL THAT MY ATTORNEY LAWFULLY DOES BY VIRTUE OF OR AND UNDER THIS POWER. THE POWER AGENT SHALL MAINTAIN TRUE AND PROPER DOCUMENTS AND SHALL SUBMIT THE SAME AS AND WHEN CALLED UPON TO DO SO.

AND I, THE SAID XXXXXXXXXXX HEREBY AGREE TO CONFIRM AND RATIFY ALL AND WHATSOEVER MY SAID ATTORNEY OR ANY SUBSTITUTE OR AGENT, APPOINTED BY HIM, UNDER THE POWER IN THAT BEHALF HEREIN BEFORE CONTAINED SHALL LAWFULLY DO OR CAUSE TO BE DONE.
IN WITNESS WHEREOF, I THE SAID xxxxxxxxx HAVE HERE UNTO SET MY HAND AND SIGNATURE ON THIS 21ST APRIL 2013.

WITNESSESS:
1.
2.

DRAFTED BY ADVOCATE / NOTARY PUBLIC: MR. …………………… REGN NO.

…......................……….DISTRICT,
 —

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது? தகவல்கள்


ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?
தகவல்கள்

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

மதிப்பெண் பட்டியல்!

யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ்!

யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

பான் கார்டு!

யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

கிரெடிட் கார்டு!

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

பட்டா மாற்றம் செய்வது எப்படி?


நமக்கு ஒரு சொத்து வாரிசுரிமைப்படியோ, பாகப்பரிவினை பத்திரபடியோ, உயில் ஆவணத்தின் படியோ, செட்டில்மெண்ட் பத்திரப்படியோ, விற்பனை மூலம் வாங்கியதாக இருந்தாலோ அதற்கு பட்டா மாற்றம் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

மேற்கண்ட வகையில் கிடைக்கும் சொத்திற்கு அந்த சொத்து எந்த தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்த பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்மந்தமாக விண்ணப்பிக்க வேண்டும். 
இந்த சான்று தனியாக 3 பக்க விண்ணப்பப்படிவம் உள்ளது.

(இணையத்தில் பதிவிறக்கம் செய்யwww.tn.gov.in/LA/forms) அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நமக்கு செய்து கொடுக்கப்பட்வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டிய விசயங்கள்:

விண்ணப்பதாரர் பெயர்

தகப்பனார்/கணவர் பெயர்

இருப்பிட முகவரி

பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் (அதாவது மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண்/மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு மனை எண், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்)

மனை அங்கீகரிக்கப்பட்ட மனையா/அங்கீகாரம் இல்லாத மனையா என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடம் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும்.

சொத்து மனுதாரருக்கு எவ்வாறு கிடைக்கப்பட்டது என்ற விவரம் (துவக்கத்தில் கூறப்பட்ட முறைகளில் ஒன்று)
பத்திர ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் இணைக்கப்பட்டுள்ளதா?

சொத்து மனுதாரரின் அனுபவத்தில் உள்ளதா?
எவ்விதம் அனுபவத்தில் உள்ளது? (அதற்கான அத்தாட்சி ஆவணங்களின் நகல்கள் இணைக்கபடவேண்டும் அவை, மாநகராட்சி சொத்துவரி செலுத்திய ரசீது/மின் கட்டண அட்டை/குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை/குடும்ப அட்டை/வாக்காளர் அட்டை போன்ற சான்றுகளில் ஏதேனும் ஒன்று)

பதிவு மாற்றம் கோரும் இடம் சொத்தில் ஒரு பகுதியா? அல்லது முழுமையானதா?

பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டும்.

குறித்த காலத்திற்கும் பட்டா கொடுக்கப்படவில்லை! என்றாலோ, அல்லது லஞ்சம் கேட்டாலோ கோட்டாட்சியர்(RDO) மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யலாம். மேலும் தகவல் பெறும் உரிமம் சட்ட மூலமும் நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.

மிக முக்கியமாக தங்கள் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது தங்கள் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவுத்தபாலில் ஒப்புதல் அட்டை இணைத்து தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்

சொத்து பராமரிப்பு


ஒரு சொத்து வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அத்தனை விவரங்களையும் அலசி ஆராய்வோம். அந்த சொத்து எந்த பகுதியில் அமைந்திருக்கிறது? அருகில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன? சொத்துக்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்வோம்.

பராமரிப்பு

அப்படி சொத்து வாங்கும்போது எத்தகைய அக்கறையை செலுத்துகிறோமோ? அதில் பாதி அளவிற்காவது அந்த சொத்தை பாதுகாப்பதற்கு கவனம் செலுத்துகிறோமா? என் பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சொத்தை பாதுகாப்பது என்பது அடிக்கடி நேரில் சென்று பார்வையிடுவதுடன் முடிந்துவிடும் விஷயமில்லை. அந்த சொத்து ஆவணங்களை முறையாக பராமரித்து வருவதையும் பாதுகாப்பு விஷயமாக எடுத்துக்கொண்டாலும் அதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக பத்திரப்பதிவு செய்தவுடன் அந்த சொத்து நமக்கு கைமாறிவிடும் என்றாலும் அந்த சொத்துக்கான பட்டாவை நம்முடைய பெயரில் மாற்றிவிட்டோமா என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். சில சமயங்களில் நிலத்தை நமக்கு விற்பனை செய்பவர் பெயரில் பட்டா இருக்காது. அவருடைய பெற்றோர் பெயரில் இருக்கும்.

பட்டா மாறுதல்

அப்படி இருக்கையில் அவர் தன்னுடைய பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் நாம் அவரிடம் இருந்து சொத்து வாங்கியவுடன் நம்முடைய பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு எளிதாக இருக்கும்.

பட்டா மாறுதல் செய்வதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது உங்கள் தந்தை அல்லது தாயாரின் பெயரில் நிலம் வாங்கப்பட்டிருந்து அவர்கள் இறந்துவிட்டால் தொடர்ந்து அவர்கள் பெயரிலேயே பட்டா இருந்தால் பின்னாளில் பிரச்சினை ஏற்படும். உடனே வாரிசுரிமை சான்றிதழ் பெற்று உங்கள் பெயருக்கு மாற்றிகொள்ள வேண்டும்.

ஆவண சரிபார்ப்பு

உங்கள் பெயரில் பட்டா வாங்கி வைத்திருந்து அதை பாதுகாத்து அந்த சொத்துக்கு தொடர்ந்து வரி செலுத்தி விட்டு வந்தால் மட்டும் போதாது. பட்டாவில் இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? வருவாய்த்துறை ஆவணங்களில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும். இணையதளம் மூலம் சரிபார்க்கும் வசதி இருப்பதால் அடிக்கடி சொத்து உங்கள் பெயரில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் போலி பட்டா மோசடி நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும். சொத்து வாங்கும்போது எப்படி வில்லங்க சான்றிதழ் வாங்கி சொத்து பரிமாற்ற விவரங்களை சரி பார்த்தோமோ அதேபோல் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் உங்கள் பெயரில் இருக்கும் சொத்துக்கும் வில்லங்க சான்றிதழ் வாங்கி சரிபார்க்க வேண்டும்.

வில்லங்க சான்று விவரம்

அப்படி பார்க்கும்போது நீங்கள் பத்திரப்பதிவு செய்த நாளுக்கு பிறகு ஏதாவது சொத்து பரிமாற்றம் நடைபெற்றது தெரியவந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் சொத்து பத்திர நகல் களை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுப்பது நல்லது. தற்போது இணையதளம் வாயிலாகவே வில்லங்க சான்று விவரங்களை சரிபார்க்கும் வசதி இருப்பதால் அடிக்கடி சரிபார்த்து வர வேண்டும்.

சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலோ அல்லது சொத்து தொடர்பான எந்த விவகாரமாக இருந்தாலும் முதலிலேயே மூல ஆவணங்களை எடுத்து செல்லக்கூடாது. அதன் நகல் ஆவணங்களைத்தான் எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில் ஆவணங்கள் தொலைந்து போக நேரிட்டால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆவண குறிப்பு

வீட்டில் எப்போதும் நகல் ஆவண பிரதிநிதிகளை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சொத்தின் சர்வே எண், பட்டா எண், பத்திர பதிவு விவரங்கள் குறித்த எண்கள் போன்ற விவரங்களை டைரியில் எழுதி வைக்க வேண்டும். ஒருவேளை மூல ஆவணங்கள் காணாமல் போய்விட்டாலோ அல்லது சேதம் அடைந்துவிட்டாலோ இந்த விவரங்கள் மீண்டும் சொத்து ஆவணங்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

அதுபோல நீங்கள் வாங்கியிருக்கும் சொத்து பற்றிய விவரங்களை உங்கள் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் மைனராக இருந்தால் பருவ வயதை எட்டும்போது சொத்து விவரங்களை அவர் களிடம் கூறுவது அவசியம். ஒருவேளை உங்களுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்தாலோ அல்லது உங்கள் காலத்திற்கு பிறகு அந்த சொத்தை மற்றவர்கள் யாரும் நிலமோசடியோ, அபகரிப்போ செய்யாமல் தடுக்க முடியும்.

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!


பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!

பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பிவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா மாறுதல் மனுவின் நிலையை கேட்டால் பட்டா மாறுதல் நடக்கும் 

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன. கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்

விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: மூலபத்திரம் ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.

23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் போதுமானது அல்ல
: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்

கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பட்டா மாறுதல்

பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.
* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.
* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.
* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.
* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.
* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.
* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.
இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.

தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

'அ' பதிவேட்டில் இருக்கும் விபரங்கள் என்னவென்று பார்க்கலாம்.

பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந),புன்செய் (பு),மானாவாரி (மா),தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்
நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும். நன்றிhttp://patta-chitta.blogspot.in/2013_07_01_archive.html
பட்டாவில் உள்ள குறைகளை சரி செய்வது எப்படி

பட்டாவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும்
வட்டாட்சியர் முடிவில் திருப்தி இல்லையெனில் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யுங்க

சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக பட்டா மாறுதல்

சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யும் போதே பட்டா மாறுதல் பட்டா உட்பிரிவு செய்தல் ஆகியவற்றிற்கும் கட்டணம் மனு ஆகியவை பெறப்படும் அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பார்கள்
அதன் அடிபடையில் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும் ஆனால் நடைமுறையில் பட்டா மாறுதல் மட்டும் செய்யப்படுவதில்லை

Saturday, June 20, 2015

வீடு வாங்கும் முன் ஒரு நிமிஷம்

ரொம்ப நாளாக நீங்கள் யோசித்து, ஆலோசித்து கடைசியாக உங்கள் கனவான சொந்த வீட்டை வாங்கப் போகிறீர்களா? வீடு கட்டுவது மட்டுமல்ல, வீடு வாங்குவது கல்யாணப் பரபரப்புக்கு இணையானதுனால் எனச் சொல்லலாம்.
அந்தப் பரபரப்பில் வீட்டிற்குத் தேவையான அடிப்படையான சில விஷயங்களை மறந்துபோகக் கூடும். லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து வாங்கும் வீட்டில் சில விஷயங்களைக் கவனிக்கத் தவறி அது பெரும் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும்.
கொஞ்சம் நிதானமாகப் பொறுமையாக வீட்டைக் குறித்த உங்கள் எல்லாச் சந்தேகங்களையும் கேள்விகளை எழுப்பித் தெரிந்து, தெளிவுபெற வேண்டும். இதில் உங்களுக்குத் தயக்கமோ, கூச்சமோ வேண்டாம். பல லட்சம் ரூபாய் செலவு செய்து வீட்டை வாங்கும்போது நமக்குத் தெரிய வேண்டிய விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
அடுத்த விஷயம் வாங்கப் போகும் வீடு அமைந்திருக்கும் பகுதி. அது மிகவும் முக்கியம். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் இடமாகப் புது வீடு இருக்க வேண்டும். அலுவலகம், குழந்தைகளுக்கான பள்ளி ஓரளவு அருகில் இருக்க வேண்டும். பிறகு வீட்டுக்குத் தேவையான அன்றாட பொருட்களுக்கான கடைகளும் அருகில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் சுற்றுப்புறம் அமைதியாகவும், தூய்மையாகவும் இருப்பது அவசியம். முக்கியமாகப் பாதுகாப்பான பகுதியாகவும் இருக்க வேண்டும்.
பிறகு வீட்டை மேலோட்டமாகப் பார்த்து வாங்கத் தீர்மானிக்க வேண்டாம். வீட்டின் ஒவ்வொரு அறையையும் நன்கு பார்த்து உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்பதை யோசித்து முடிவுசெய்ய வேண்டும்.
வீடு வாங்குவது தொடர்பான ஆவணங்களைச் சரியாகப் பார்க்க வேண்டும். அதற்கான சட்டரீதியிலான பத்திரப் பதிவைச் செய்ய வேண்டும். அந்த வீடு தொடர்பான எல்லா ஆவணங்களும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாதா என்பதையும் பார்க்க வேண்டும்.

அழகும் பாதுகாப்பும்

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் நெடுநாள் கனவாக இருக்கும். அறைகள் எப்படி இருக்க வேண்டும். ஜன்னல்கள், கதவுகள், சுவர் எப்படி இருக்க வேண்டும் எனப் பலவிதமான எதிர்பார்ப்புகள் நமக்கு இருக்கும். மேலும் வீடு என்பது வெறும் செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. நம் வாழ்க்கையின் ஆதாரமாக விளங்கப்போகும் ஓர் இடம். அதனால் சொந்த வீடு கட்டும் கட்டுமானப் பணிகள் விஷயங்களில் மற்றவர்கள் ஆலோசனைகள் சொல்கிறார்கள் என்பதற்காக ஏனோதானோ என முடிவு எடுக்கக் கூடாது.
வீடு கட்டும்போது அஸ்திவாரத்தில் தொடங்கி வீட்டிற்கு வண்ணம் அடிப்பதுவரை உங்களுடைய தேர்வு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கட்டிடப் பணிகளுக்குத் தண்ணீரின் தரம் முக்கியமானது. உப்புச் சுவை உள்ள தண்ணீர் என்றால் அது கட்டிடத்தின் உறுதிக்குப் பங்கம் விளைவிக்கும். அதனால் கட்டிடப் பணிகளுக்கு நல்ல தண்ணீர் உபயோகிக்க வேண்டும். அதைக் கவனிக்க வேண்டும். கட்டிடப் பணிகளுக்காக முதலில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக்கொள்ள வேண்டும்.
* வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
* கட்டிடத்தின் உறுதிக்கான மற்றொரு விஷயங்களில் ஒன்று, சிமெண்ட். அந்த சிமெண்டின் தரத்தை அதன் நிறத்தை வைத்தே ஒரளவு தீர்மானித்துவிடலாம். லேசான பச்சை நிறத்தில் இருந்தால் அது நல்ல சிமெண்ட் என ஊகித்துக்கொள்ளலாம். அதுபோல சிமெண்ட் மூட்டைக்குள் கைவிடும்போது குளுமையாக இருந்தால் அது சிறந்த தரம் என அறிந்துகொள்ளலாம்.
சிமெண்டின் தரத்தை அறிய மற்றொரு முறை, அதைத் தண்ணீருக்குள் இடும்போது அது மிதந்தால் தரம் சரியில்லை என அறிந்துகொள்ள முடியும். சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ. அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஓரளவு குறைவாக இருந்தால் சரி. 1 கிலோவுக்கும் அதிகமாகக் குறைந்திருந்தால் அதை வாங்கிய இடத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
* இன்றைக்குத் தங்கத்தைப் போல விலை மதிப்பான பொருளாக மணல் மாறிவிட்டது. விலை மதிப்பு அதிகமாக, அதிகமாக அதில் கலப்படம் வந்துவிடும் அல்லவா? ஆற்று மணலில் தூசியைக் கலக்கிறார்கள். சிலர் ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலக்கிறார்கள்.
அதனால் மண்ணை முறையாகப் பார்த்து வாங்க வேண்டும். கடல் மணலைக் கண்டுபிடிக்க மணலின் உப்புச் சுவை பரிசோதித்தாலேயே போதும். கடல் மணலில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். மணலில் அதிகமாகக் குருணை இருந்தால் பயன்படுத்தத் தகுதியில்லாததாக இருக்கும். குருணை அதிகமாக உள்ள மணல் சிமெண்டுடன் கலக்காது.
* இப்போதுள்ள நவீனத் தொழிற்நுட்பத்தைத் துணிச்சலாகப் பயன்படுத்த வேண்டும். அதனால் நேரமும் கூலியும் மிச்சமாகும். உதாரணமாக ரெடிமேட் கட்டுமானக் கம்பிகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. கட்டிடத்தின் வரைபடத்திற்குத் தகுந்தாற்போல் அவர்களே கம்பியை வளைத்துக் கொண்டுவந்து இடத்திலேயே இறக்கிவிடுவார்கள்.
முன்புபோல கட்டுமான இடத்தில் தனியான இடத்தை நிர்மானித்துக் கம்பிகளை வளைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமல்ல. அதுபோல சிமெண்ட் கலவையிலும் தேவையான அளவு ரெடி மிக்ஸைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
* கட்டுமானத்திற்குப் பிரித்துப் பார்க்க முடியாத அளவில் உறுதியும் உருவமும் தருவது செங்கல். இதன் தரத்தை அறிய ஓர் எளிய வழிமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது நாலைந்து செங்கற்களை எடுத்து நீரினுள் இட வேண்டும்.
24 மணி நேரத்திற்குப் பிறகு அதை எடுத்து விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் அந்தச் செங்கற்கள் தரம் குறைவானவை என அறிந்துகொள்ளலாம். இப்போது பலவகையான மாற்றுச் செங்கற்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் விலையும் மிச்சமாகும்; தரத்திலும் சிறந்தவையாக இருக்கும்.
அதுபோல தேவையப் பொறுத்து அதற்குத் தகுந்த கற்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுற்றுச் சுவர்களுக்கு ஹல்லோ செங்கல் உகந்தவையாக இருக்கும். இப்போது வீடு கட்டுவதற்கும் இவ்வகையான மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவது நல்லது எனப் பசுமைக் கட்டிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பாரம்பரிய முறையிலான செங்கற்கள் தயாரிக்க ஆகும் ஆற்றலால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது மாற்றுச் செங்கற்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை. அதனால் கூடியவரை நாம் மாற்றுச் செங்கற்களைக் கட்டிடப் பணிகளுக்குப் பயன்படுத்துவோம்.
* கட்டுமானப் பொருள்களைக் கையாளும்போது அவற்றில் சிறிதளவு வீணாகக்கூடும். அவை சிறிய அளவாக இருந்தால் சரி. அப்படியில்லாமல் அஜாக்கிரதையாகக் கட்டுமானப் பொருள்களைக் கையாண்டு அதன் மூலம் ஆகும் கட்டுமானச் சேதாரத்திற்கு நாம் பொறுப்பாக வேண்டிய அவசியமில்லை.
அதனால் பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து சேதாரத்தைக் கண்காணிக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் சேதாரம் என ஒப்பந்தக்காரர்கள் கூறினால் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
* கான்கிரீட்டுக்கு வலுச் சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைக் கம்பிகளைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கம்பிகளில் உள்ள பிசிறுகளை நீக்கிவிட்டே பயன்படுத்த வேண்டும். துரு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கம்பியின் மீது எவ்விதமான கறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது அடையாளத்திற்காகக் கம்பிகள் மீது பெயிண்ட் அடித்திருக்கக்கூடும். அதுபோல எண்ணெய்க் கறை, சேறு இது போன்ற கறைகளையும் நீக்க வேண்டும். இம்மாதிரியான கறைகளுடன் கம்பியைக் கட்டிடப் பணிகளுக்கு உபயோகித்தால் கம்பி, சிமெண்டுடன் வலுவான பிணைப்பை உண்டாக்காமல் போய்விடும்.
* மின்சார இணைப்பைப் பொறுத்தவரை தரமுள்ள வயர்களை வாங்குங்கள். விலை குறைவாகக் கிடைக்கிறது என்று அதிக ஆற்றல் வீணாகும் வயர்களை வாங்காதீர்கள். அதனால் மின்சாரம் வீணாகி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு உண்டாகும். சுவிட்சுகளின் விஷயத்திலும் கவனம் தேவை. மலிவான வகை சுவிட்சுகள் விபத்தை உண்டாக்கக்கூடியவையாக இருக்கும். வீட்டுக்கு விளக்குகளை அமைக்கும்போது முன்கூட்டியே திட்டமிடுங்கள். அறைக்குத் தகுந்தவாறு வண்ண விளக்குகளை அமையுங்கள்.
* வீட்டுக்கான கதவுகள், ஜன்னல்கள் செய்யும்போது வீண் கவுரவத்திற்காக எல்லாவற்றையும் மரத்தால் செய்ய வேண்டாம். சில முக்கியமான நுழைவு வாயிலை மட்டும் மரத்தைக் கொண்டு செய்யலாம். ஜன்னல்களையும் மரத்தால் செய்யலாம். ஆனால் கழிவறைக் கதவு போன்றவற்றிற்கு ரெடிமேர் பிளாஸ்டிக் கதவுகளைப் பயன்படுத்தினாலேயே போதுமானது. மரப் பொருள்களின் பயன்பாடு வீடு கட்டுவதில் அதிகம் செலவுவைக்கக்கூடியது. அதனால் அதில் கவனமாக இருங்கள். அழகும் பாதுகாப்பும்தான் முக்கியமே தவிர ஆடம்பரம் அல்ல.
* வீட்டை ஒப்பந்த முறையில் கட்ட வேண்டுமா அல்லது பணியாளர்களை நியமித்து நீங்களே கட்டப் போகிறீர்களா என்பதை முன்பே முடிவுசெய்துகொள்ள வேண்டும். 5000 சதுர அடி அளவு வீடு கட்ட நினைப்பவர்கள் தனியாகக் கட்டுமானப் பொறியாளர்களை நியமித்துக்கொள்ளலாம். ஆனால் 800 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் வீடுகட்ட நினைப்பவர்களுக்குத் தனி கட்டுமானப் பொறியாளர்கள் தேவையில்லை.
அதுபோல கிராமப்புறமாக இருந்தால் ஒப்பந்தம் இல்லாமல் வீடு கட்டும் சாத்தியம் உண்டு. நகர்ப்புறமாக இருந்தால் ஒப்பந்தம்தான் சிறந்தது. அதிலும் ஒரு குழப்பம் வரும்; தொழிலார்களை மட்டும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா, அல்லது கட்டுமானப் பொருள்களுக்கும் சேர்த்து ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா என்று.
உங்களுக்கு அலுவலகத்தில் கட்டிடப் பணிகளைக் கவனிக்க விடுமுறை கிடைக்குமா என்பன போன்ற பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துப் பாருங்கள். நீங்கள் அருகில் இருந்து கவனிக்க முடியவில்லை என்றால் கட்டுமானப் பொருள்களுக்கும் சேர்த்து ஒப்ப்ந்தம் போட்டுக்கொள்வது சரி. எந்த முறையாக இருந்தாலும் தரத்தில் கவனமாக, உறுதியாக இருங்கள்.
* கட்டுமானத்தைப் பொறுத்தவரை சில புதிய யுக்திகளைப் பயன்படுத்தலாம். அதாவது கட்டிட நிபுணர் லாரிபேக்கர் கண்டுபிடித்த எலிப் பொறித் தொழில்நுட்பம் மூலம் சுவர் கட்டும்போது கட்டிடத்திற்கு ஆக வேண்டிய செங்கல் மிச்சமாகும். அதுபோல வீட்டின் அறைகளைப் பிரிப்பதற்கான சுவர்களை அதிகக் கனம் உள்ளதாக உருவாக்க வேண்டியதில்லை.

அடுக்கடுக்கான பிரச்சினைகள்: தீர்ப்பது எப்படி?

சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மிக அதிகம். நகரின் இட நெருக்கடியை வைத்துப் பார்க்குபோது அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் இருப்பிடத் தேவைக்குச் சரியான தேர்வு. பல முன்னணி நிறுவனங்கள் நகரின் இடநெருக்கடியைக் கணக்கில் கொண்டு, இப்போது புறநகரில் தங்கள் கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் இன்னும் சென்னை, கோவையைத் தாண்டி தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிரபலம் அடையவில்லை. இவற்றுக்கு அடுத்தபடியாக மதுரையில், திருச்சியில் சிறிய அளவில் வந்துள்ளன.
ஆனால் இன்னும் அங்கு தனி வீடுகளையே மக்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு அவ நம்பிக்கைகளே மேலோங்கி உள்ளன. ஒரே இடத்தை அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த எல்லோரும் பகிர்ந்துகொள்வது அவர்களுக்குக் குழப்பமாக இருக்கிறது.
அதை உண்மையாக்குவதுபோல் இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பலதரப்பட்ட பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.
உதாரணமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் மற்ற குடியிருப்புவாசிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். வெளிப்புறச் சுவர்களுக்கு வண்ணம் பூசுவது எல்லோரும் ஒத்துழைத்தால்தான் சாத்தியம். குடியிருப்பில் ஏற்படும் சின்னச் சின்ன பராமரிப்புக்கும் குடியிருப்புவாசிகளே பொறுப்பு.
அதுபோல அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும்போது சில பிரச்சினைகள் தொடங்கிவிடும். ஒப்பந்தம் போட்டு எத்தனை மாதத்திற்குள் வீட்டைக் குடியிருக்கத் தயாராகும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் சில கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீட்டைக் கட்டித் தருவதில்லை.
அதனால் வங்கிக் கடன் ஒரு பக்கம், வீட்டுக் கடன் ஒரு பக்கம் எனக் கொட்டும் தவிலைப் போல் இரு பக்கமும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு எனக் கேட்கிறீர்களா?
ஒப்பந்தத்தில் இம்மாதிரி விஷயங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் வீட்டைக் கட்டி முடிக்கவில்லை என்றால் இப்போதுள்ள வீட்டிற்கான வாடகையை அவர்கள் தர வேண்டும் எனப் பொறுப்பேற்கும்படி ஒப்பந்தத்திலேயே குறிப்பிட வேண்டும்.
கட்டுமான நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை மீறும் பட்சத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கூட்டமைப்பான கிரடெய்யின் உறுப்பினராக இருக்கும்பட்சத்தில் அங்கு இந்த நிறுவனத்தைப் பற்றிப் புகார் தெரிவிக்கலாம். பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும் முன் அந்நிறுவனத்தைப் பற்றித் தெளிவாக விசாரித்து வாங்குவதும் உத்தமம்.
கிரெடாய் நுகர்வோர் 
குறைதீர்க்கும் அமைப்பு 
தொடர்புக்கு 1800-11-4000. 
www.credaichennai.in.

சிக்கனம் தரும் வருமானம்


சிக்கனமாக இல்லாதவன் சந்தோஷமாக வாழ முடியாது, எவ்வளவு வருமானம் உள்ளவர்களுக்கும் சிக்கனம் என்பது நன்மை தரும். இதிலென்ன பெரிதாகச் செலவாகிவிடப் போகிறது என்று நாம் நினைக்கும் விஷயங்கள்தான் பெரும்பாலும் செலவுகளை இழுத்துவைக்கும். ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவுக்கும் பொருந்தும். பணம் செலவு செய்ததை எழுதிவைக்க வேண்டும். செலவு செய்வது தேவைதானா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வரவுக்குள் செலவை நிறுத்த வேண்டும். இது குடும்ப அமைதியை காக்கும். வீண் செலவுகள் குடும்ப அமைதியைச் சீர்குலைக்கும்.
சிக்கனம் அவமானம் அல்ல
‘எலி வளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்’ என்பதற்கிணங்க ஒவ்வொருவருக்கும் அவரவர் சக்திக்கேற்ற வீடு கட்டாயம் இருக்க வேண்டும். நாளுக்கு நாள் வீட்டு வாடகை அதிகமாகிக்கொண்டே வருவதால் சொந்த வீடு இருந்தால் வாடகைப் பணம் மிச்சமாகும். தற்போது பல இடங்களில் வாடகை இருப்போர் குறிப்பிட்ட ஒரு தொகையை வீட்டு உரிமையாளரிடம் தந்துவிட்டு லீஸ் எடுத்துக்கொள்கின்றனர். லீஸூக்குக் கொடுக்க வைத்திருக்கும் பணத்தோடு வங்கியில் வீடு கட்டுவதற்கான கடனையும் பெற்றால், நமக்கு ஏற்ற வீடு ஒன்றைச் சொந்தமாகக் கட்டிக் கொள்ளலாம். சிக்கனமாகவும் இருக்கும். சிக்கனத்தை அவமானமாகக் கருத வேண்டாம்.
வீட்டில் சிக்கனம்
பழைய மரச்சாமான் கடையில் வேண்டிய கதவு ஜன்னல் அனைத்தையும் வாங்கிவிடலாம். வார்னிஷ் அல்லது பெயிண்ட் அடித்தால் புதியது போலவே இருக்கும். தற்போது பசுமைக் கட்டிடங்கள் வந்துவிட்டன. நீண்டகால நோக்கில் பசுமைக் கட்டிடங்கள் ஆண்டுக்கு 30 சதவிகிதம் மின்செலவை மிச்சப்படுத்துகின்றன. 50 சதவிகிதம் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கின்றன. கூடவே ஆரோக்கியத்தையும் அளிக்கின்றன.
பகலில் எந்த அறைகளிலும் மின்விளக்குகள் எரியாத வகையில் ஒவ்வொரு அறைகயையும் போதிய சூரிய வெளிச்சம் மற்றும் காற்று வரும்படி கட்ட வேண்டும். இல்லையென்றால் பெரிய ஜன்னல்கள் அமைக்கலாம். இதனால் வீட்டுக்குள் காற்றோட்டத்துடன் சூரிய வெளிச்சமும் கிடைக்கும். வீடுகளில் ஜன்னல் மற்றும் கதவுகளில் சூரிய பிரதிபலிப்பு மற்றும் ‘டில்டட்’ கண்ணாடிகளைப் பயன்படுத்துவதால் வெளியிலுள்ள வெப்பம் அறைகளுக்குள் வராது.
இதனால் அதிக நேரம் ஏசி, மின்விசிறி போன்றவற்றை இயக்க வேண்டிய தேவையில்லை. ஏசி இருந்தால் அதன் ஏர்பில்டரை மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும் அல்லது மாற்றிட வேண்டும். கூரைகளில் தெர்மாகோல், மரப்பலகை போன்றவற்றால் பால்ஸ்சீலிங் செய்தால் அதிக வெப்பம் இறங்காது. வீட்டைச் சுற்றிலும் அழகிய செடி கொடிகள், மூலிகைகள் வைத்தால் போதும்; சுத்தமான காற்று கிடைப்பதுடன் வீடு அழகாகத் தோன்றும்.
மின்சாதனங்களின் கவனம் வேண்டும்
சாதாரணமாக பல்புகளை மாற்றி விட்டு, குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் சில்.எல்.எப் அல்லது காம்பாக்ட் புளோரசண்ட் விளக்குகளைப் பொறுத்த வேண்டும். சிது ‘சாதாரண பல்புகளைவிட 20 சதவிகிதம் மின்சாரத்தைக் குறைவாக எடுத்துக்கொண்டு, அதே நேரத்தில் 10 மடங்கு கூடுதலாக உழைக்கும். ‘ஆரிசன்ஸ்வெட்’ என்பவர் “சிக்கனம் என்பது பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவிடுகிறார்கள் என்பதைப் பொறுத்ததல்ல; அதை எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறார்கள்” என்பதேயாகும் என்கிறார்.
சூரியஒளி விளக்குகளையும் சூரியஒளி மின்சாரத்தையும் பயன்படுத்தினால் மின்கட்டணத்தில் 80 சதவிகிதம்வரை குறைவு ஏற்படும் (உம்) தண்ணீர் சுட வைப்பதற்குச் சூரிய சக்தியைப் பயன்படுத்தலாம். நடைபாதை மற்றும் பொதுவாக உபயோகிக்கும் இடங்களில், ஆட்கள் நடமாட்டம் இருக்கும்போது மட்டும் எரியும் வகையிலான விளக்குகள் உள்ளன. ‘டிம்மர்’ மற்றும் ‘டைமர்’ விளக்குகளைப் பொறுத்துவதன் மூலம் மின்சாரச் செலவை மிக அதிக அளவில் குறைக்கலாம்.
தேவையான நேரம் தவிர மற்ற நேரங்களில் மின் விளக்கு, மின்விசிறி, தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்தி மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தலாம்.
வீட்டைவிட்டு வெளியேறும்போது அனைத்து விளக்குகளையும் மின் உபகரணங்களையும் அணைக்க மறக்கக் கூடாது. எப்போதாவது பயன்படுத்தும் மின் உபகரணங்களின் பிளக்கை மாட்டியே வைத்திருக்கக் கூடாது. புதியதாக மின் உபகரணங்களை வாங்கும்போது அவை மின்சக்தியைச் சேமிக்கும் திறன் பெற்றவையா என்பதற்கான எனர்ஜி ஸ்டோர் லேபிளைப்
பார்த்து வாங்க வேண்டும். மின்சக்தியை அதிகமாக இழுக்கும் பழைய மின் உபகரணங்களுக்குப் பதிலாக, புதியவற்றை வாங்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியை அதிக நேரம் திறந்து வைக்காமலும், விரிய திறந்து வைக்காமலும், அடிக்கடி திறக்காமலும் இருக்க வேண்டும். இதனால் மின்சாரம் மிச்சமாகும்.
தண்ணீர்க் குழாய்களில்...
தண்ணீர் புழங்கும் சமையலறைக்கு அருகிலேயே குளியல் அறைக் கழிவறை போன்றவற்றை அமைப்பதால் பிளம்பிங் செலவு குறையும். சமையலறைக்கு மாடுலர் கிச்சன் போன்றவை செலவு அதிகரிக்கும் என்பதால், கடப்பா கற்களை நம் தேவைக்கேற்ப வடிவமைக்கலாம். காய்கறி உட்பட சமையலுக்குத் தேவையான பொருட்களைத் தயாராகப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். கொதி வந்ததும் தீயின் அளவைக் குறைக்க வேண்டும். முக்கியமாக அடுப்பை சிம்மில் வைத்துச் சமைத்தால் எரிவாயுவைச் சிக்கனப்படுத்தலாம்.
குளியலறையில் உள்ள ஷவர்களில் காற்றுடன் நீர் வெளியேறும் ஷவர்களைப் பயன்படுத்துவதால் குறைவான தண்ணீரே செலவாகும். இது தண்ணீர் சிக்கனத்துக்கு உதவும். குளியலறை மற்றும் சமையலறைகளில் பயன்படுத்திய தண்ணீரைத் தோட்டங்களிலுள்ள செடி கொடிகளுக்குப் பயன்படுத்தலாம். குளியலறை, கழிப்பறை போன்ற வற்றுக்குப் பிளாஸ்டிக் கதவுகளை உபயோகிக்கலாம். முகம், கை துடைக்கப் பயன்படுத்தித் தூக்கி எறியும் டிஷ்யூ பேப்பர்களுக்குப் பதிலாகத் துண்டையே பயன் படுத்தலாம்.
வீடுகளில் ஆங்காங்கே தண்ணீர் குழாய்களை அமைக்காமல் ஒன்றி ரண்டு இடங்களில் மட்டும் குழாய்களை அமைக்க வேண்டும். அதனால் தண்ணீரைச் சிக்கனப்படுத்தலாம். ஆடைகள் அதிகமாக இருக்கும்போது மட்டும் வாஷிங் மிஷின் பயன்படுத்த வேண்டும்.
மின்சார விரயம் தவிர்ப்போம்
கணினி இணைப்பு வயர்கள், ஸ்பீக்கர்கள், இங்க் கேட்ரிட்ஜ், சி.டிக்கள், டிவிடிக்கள் போன்ற கணினி பயன்பாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை மறு பயன்பாட்டிற்கு உரியனவாக உருவாக்கப்பட்டுள்ளன. செல்போனில் சார்ஜ் ஆனவுடன் சார்ஜர்களை அனைத்துவிட வேண்டும். அவை சார்ஜில் இருந்தால் மின்சாரம் வீணாகும். அறைகளைச் சுத்தம் செய்ய ரசாயன கிளீனர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கையான கிளீனர்களைப் பயன்படுத்தலாம். ஆரோக்கியத்திற்கும் நல்லது.
வருமானம் என்பது உழைத்துப் பணம் கொண்டுவருவது மாத்திரமல்ல. சிக்கனமும்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.