Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Tuesday, October 23, 2018

ஆன்லைனில் வில்லங்க சான்று

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..
.
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம்.

அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு.

இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு.

ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும்.

சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.

அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம்.

அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும்.

இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

பா.வெ.

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelineva…/gvaluemainpage2011.asp
www.tnreginet.net

மின்நுகர்வோரின் சந்தேகங்களுக்க

மின்நுகர்வோரின்  சந்தேகங்களுக்கு   தீர்வு காண

1. நான் ஒரு புதிய இணைப்பு பெறுவது எப்படி?
தங்களின் வயரிங்குகளை ஒரு அரசு மின் உரிமம் பெற்ற உரிமையாளர் மூலம் செய்து முடிக்கவும்.பின்னர் தங்கள் பகுதியுள்ள உதவி பொறியாளர்/இயக்குதல் & பராமரிப்பு, தமிழ்நாடு மின்வாரியம் அலுவலரை மற்ற விவரங்களுக்காக அணுகவும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு மின்வாரிய இணைய தளத்தில் உள்ளது.மற்றும் உதவி பொறியாளர் அலுவலகத்திலும் இலவசமாகக் கிடைக்கும்.

2. ஒருமுனை மின் இணைப்பை மும்முனை மின் இணைப்பாக மாற்ற நான் செய்ய வேண்டியது என்ன?
தங்களிடம் உள்ள அனைத்து "இணைக்கப்பட்ட மின் திறன்களை" மும்முனை இணைப்புகளுக்கு சமமாக பகிர்தளிக்கும் வகையில் (அதன் கூட்டு மின்திறன் 4KW மற்றும் அதற்கும் மேலாக இருக்கும்படி) வயரிங்கை தக்கவாறு செய்து கொள்ள வேண்டும், பின்னர் தங்கள் பகுதியுள்ள உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்வாரியம் அலுவலரை மற்ற விவரங்களுக்காக அணுகவும்.

3. மின்தடை நேரத்தில் நான் யாரிடம் புகார் செய்யவேண்டும்?
தங்களுடைய புகாரை தங்கள் பகுதியில் உள்ள மின்தடை நீக்கும்மையத்திலோ (FOC) (அ) தங்கள் பகுதியுள்ள உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் இடத்தில் பதிவு செய்யலாம். அல்லது கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும்மையம் தொலைபேசி எண் 155333 மூலமாகவும் பதிவு செய்யலாம்.

4. மின் இணைப்புக்குரிய பெயர் மாற்றம் செய்ய வேண்டிய முறைகள் என்ன?
மாற்றப்படும் உரிமத்திற்கு உரிய தேவையான ஆவணங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி எடுத்துக் கொண்டு தங்களின் பகுதி உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலர் அவர்களை மற்ற விவரங்களுக்கு அணுகவும்.

5. மின் அளவி (Meter) பதிவில் முரண்பாடு இருப்பின் நான் செய்ய வேண்டியது என்ன?
தாங்கள் சந்தேகிக்கும் வகையில் மீட்டர் பதிவில் அதிகப்டியாகவோ (அ) குறைந்த படியாகவோ நிகழ்வு ஏற்பட்டால், தங்கள் பகுதி உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் அவர்களிடம் எழுத்து மூலம் முறையிடவும். மேலும் மற்ற விவரங்களுக்கு மேற்சொன்ன அலுவலரை அணுகவும்,அதுபோல்,தங்கள் மீட்டரில் எந்த நுகர்தலின் பதிவு நிகழவில்லையென்றாலும் உடனடியாக அலுவலரிடம் தெரிவிக்கவும்.

6. என் மின் இணைப்பின் மின் கட்டணத்தை (White Meter Card) வெள்ளை அட்டையை தவிர்த்து) எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்?
தங்கள் பிரிவு அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளர்/வருவாய் ஆய்வாளர்/கணக்கீட்டாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தளத்தில் (web) www.tneb.in Consumer servicesல் உள்ள மெனுவில் (Bill Status) மூலமாக தெரிந்து கொள்ளலாம்.முன்னதாக தாங்கள் எந்த மண்டலத்தில் (Region)எந்த வட்டத்தில் வருகிறீர்கள் என்று தெரிந்திருக்க வேண்டும்.

7. எனது மின் மீட்டர் எரிந்து விட்டால் உடனடியாக நான் என்ன செய்ய வேண்டும்?
முதலில் பாதுகாப்பு விதிகளின்படி தீயை அணைத்துவிட்டு தங்கள் பகுதி உட்பட்ட மின் உதவி பொறியாளரிடம் எழுத்து மூலமாக விண்ணப்பம் கொடுத்து மீட்டருக்கு உண்டான பணத்தை செலுத்தி புதிய மின் மீட்டரை பெறலாம்.

8. நான் மின் கட்டணத்தை முன் பணமாக செலுத்தலாமா? கட்டலாமா? கட்டிய பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஆம்,நீங்கள் முன் பணமாக மின் கட்டணத்தை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் கணக்கிட்டு ஆய்வாளர் வருவாய் மேற்பார்வையாளரிடம் கட்டலாம். கட்டிய முன் பணம், அடுத்தடுத்து வரும் கணக்கீட்டு மாதங்களில், சரி செய்யப்படும்.

9. வீதப்பட்டி மாற்றம் செய்ய நான் என்ன செய்யவேண்டும்?
தங்கள் பகுதியின் பிரிவு அலுவலரை சந்தித்து வீதப்பட்டி மாற்றம் செய்வதற்கான காரணத்தை விண்ணப்பமாக கொடுத்து, அதற்கு உண்டான பணத்தை செலுத்தி, வீதப்பட்டியல் மாற்றம் செய்யலாம்.

10, தற்காலிக மின் இணைப்பு பெற என்ன விதிமுறைகள்?
தங்கள் பிரிவின் அலுவலரை சந்தித்து தற்காலிக மின் இணைப்பு பெறலாம். முன்னதாக மின் இணைப்பிற்கான ஒயரிங் செய்திருக்க வேண்டும்,

11. மின் கட்டணத்தை ECS மூலம் பணம் செலுத்த நான் என்ன செய்யவேண்டும்?
முதலில் பிரிவு அலுவலரை சந்தித்து ECS விண்ணப்பம் பெற்று அந்தந்த வட்டத்திற்கு உட்பட்ட துணை நிதி கட்டுபாட்டு அலுவலரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இது இன்னமும் முழுமையாக அனைத்து அலுவலகங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

Wednesday, September 19, 2018

செக் (காசோலை) மோசடி - என்ன செய்ய வேண்டும்

செக் (காசோலை) மோசடி - என்ன செய்ய வேண்டும்?

தெரிந்தோ, தெரியாமலோ பெரும்பாலனவர்கள் காசோலைகளை சரியாக எழுதுவதில்லை. அது தகவல்களை நிரப்பும் செயல்பாடு மட்டுமல்லாமல், நீங்கள் எப்படி அந்த தகவல்களை நிரப்புகிறீர்கள் என்பதைத் பொறுத்த காசோலையில் பல விஷயங்கள் உள்ளது.

தற்போது காசோலையானது, ஒரு முனையத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக, அந்த காசோலையை மின்னணு முறையில் ஸ்கேன் செய்து, அந்த ஸ்கேன் காப்பியை பணம் எடுக்க டெபாசிட் செய்த கிளையிலிருந்து, மற்றொரு வங்கி கிளைக்கு அனுப்புவார்கள்.

இதன் காரணமாக, நீங்கள் எழுதும் காசோலையில் ஒரு சிறிய தவறு இருந்தால் கூட, அந்த காசோலை ஏற்கப்படுவதில்லை. இது மட்டுமல்லாமல், காசோலைகளை சரியாக எழுதுவதன் மூலம் அதனால் ஏற்படும் அபாயங்களையும், மோசடிகளையும் தவிர்க்க முடியும். பணம்-சாராத காரணங்களுக்காக ஏற்கப்படாமல் பவுன்ஸ் ஆன காசோலைகளுக்காக, வங்கிகள் சில நூறு ரூபாய்களை அபராதமாக விதிப்பதையும் மறுப்பதற்கில்லை.

எனவே, காசோலைகளை எழுதும் வேளைகளில் நீங்கள் சில முக்கிய விஷயங்களைப் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றைத் தவறாமல் பின்பற்றி வங்கிகள் விதிக்கும் அபராதம் மற்றும் மோசடிகளில் இருந்து உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

இந்த முறையில் தான் காசோலையை எழுத வேண்டும் என்றில்லாவிட்டாலும், நீங்கள் இடது புறமிருந்து வலப்புறத்திற்கு எழுதும் போது காசோலையை எழுதும் வேலைக்கு அது உதவியாக இருக்கும். மேலும், அது காசோலையில் உள்ள அனைத்து பகுதிகளையும் சரியாக நிரப்புவதற்கு ஒரு திட்டமிட்ட வழிமுறையை ஏற்படுத்தும். அங்கொன்றும் இங்கொன்றுமாக காசோலையின் தகவல்களை நீங்கள் நிரப்பும் வேளைகளில், ஏதாவதொரு இடத்தை நீங்கள் மறந்து விட அல்லது விட்டு விட நேரலாம். இதன் காரணமாக, பணம்-சாராத காரணங்களுக்காக காசோலைகள் பவுன்ஸ் ஆகும் சூழலை எதிர்கொள்ள நேரிடலாம்.

காசோலையில் நீங்கள் தேதியைச் சேர்ந்தது என்று குறிப்பிடப்படா விட்டால், அந்த காசோலை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

காசோலைகளில் தேதிகளை எழுதாமல் மறப்பவர்களின் எண்ணிக்கையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எனவே, உங்களுடைய காசோலை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று நினைத்தால், அப்போதைய தேதியை உடனடியாக குறிப்பிடவும். சில நாட்கள் கழித்து எடுக்கும் வகையில் காசோலையைத் தர நினைத்தால், சரியான தேதியைக் குறிப்பிடுங்கள். போதிய அளவு பணம் இல்லாத நேரங்களில், முந்தைய தேதியை தவறுதலாக குறிப்பிட்டிருந்தால் அந்த காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் பவுன்ஸ் ஆகலாம்.

மக்களுக்கு இடையில் இடைவெளிகளை விடுவது நல்லது. ஆனால், காசோலைகளில் இவ்வாறு இடைவெளிகளை விடுவது மோசடி அபாயங்களை எதிர்கொள்ளும் நிலையும் மற்றும் காசோலைகள் சேதமடையும் நிலையும் உருவாகலாம். காசோலையில் 'Payee' என்று எழுதப்பட்டுள்ள இடத்தைத் தொடர்ந்த கோடிட்ட இடத்தில், நீங்கள் யாருக்கு கொடுக்க நினைக்கிறீர்களோ அவருடைய பெயரை அல்லது நிறுவனத்தின் பெயரை எழுதவும்.

நீங்கள் ஒரு தனிநபருக்கு காசோலையை வழங்குகிறீர்கள் என்றால் பெயரை சரியாக எழுதுங்கள். குறிப்பிட்டு சொல்லும் படியாக ஒரு நபருக்கு நீங்கள் காசோலையை கொடுத்தால், அந்த காசோலையில் அச்சிடப்பட்டிருக்கும் 'Bearer' என்ற வார்த்தையை அடித்து விடவும்.

இந்த 'Bearer' என்ற வார்த்தை வழக்கமாக காசோலையின் வலது பக்கத்தில் இருக்கும், சில காசோலைகளில் தேதிக்கு கீழாக இருக்கும். 'Bearer' என்ற வார்த்தைக்கு, இந்த காசோலையை கொண்டு வரும் நபர் யாராக இருந்தாலும், அவருக்கு காசோலையை கொடுக்கலாம் என்று பொருளாகும். எனவே, நீங்கள் ‘Bearer' என்ற வார்த்தையை அடிக்காமல் விட்டு விட்டால், மோசடி செய்வதற்கான வாய்ப்பை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

நீங்கள் எழுதும் காசோலை எந்தவொரு வங்கியின் கவுண்டரிலும் கொடுத்து பணமாக மாற்றத் தக்கதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதில் குறுக்கு கோடிட வேண்டாம்.

குறுக்கு கோடிடுதல் என்ற பெயரில் இரண்டு கோடுகளை காசோலையின் மேல் வலது மூலையில் வரைவதற்கு 'கணக்கில் வரவு வை (Account Payee)' என்று பொருளாகும். இவ்வாறு குறுக்கு கோடிடும் போது, அந்த காசோலையில் உள்ளவருடைய வங்கிக் கணக்கில் மட்டுமே பணம் வரவு வைக்கப்படும் என்பதையும், அதை வங்கியின் கவுன்டரில் கொடுத்து பணமாக பெற முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

காசோலையில் எழுதப்பட வேண்டிய பணத்தின் அளவை எண்ணில் எழுதும் பொருட்டாக கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் சரியாக எழுதவும்.

அதாவது, Rs999, என்று எழுதுவதற்குப் பதிலாக Rs.999/- என்று எழுதுங்கள். /- என்ற குறியீட்டை தொகையின் முடிவில் குறிப்பிடும் போது, அந்த எண்ணிற்குப் பின்னர் மற்றொரு இலக்கத்தை எழுத முடியாது.

தொகையை எழுத வேண்டி வரும் போது, இடைவெளிகள் எதையும் விட வேண்டாம். உதாரணமாக, Rs.5,000 என்று எழுதும் போது 5000 என்ற எண்ணிற்கு முன்னதாக இடைவெளி விட வேண்டாம். இல்லாவிடில், அதற்கு முன்னதாக யாராவது ஒருவர் 3 என்ற எண்ணை எழுதி, 35000 ரூபாயாக மாற்றி விடலாம். இதே விஷயம், தொகையை எழுத்தில் எழுதும் போதும் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. ஐந்து ஆயிரம் என்று எழுதியிருப்பதை, எளிதில் முப்பத்து ஐந்து ஆயிரமாக மாற்றி விட முடியும். எனவே, தொகையை எண்ணிலோ அல்லது எழுத்திலோ எழுதும் போது, முன்னதாக இடைவெளி விட வேண்டாம்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தையும் நிரப்பிய பின்னர் மட்டுமே, உங்களுடைய கையொப்பத்தை இடவும்.

அதே போல முன்னோக்கி செல்லவும் மறந்து விட வேண்டாம்; காசோலைகளில் கையொப்பமிட அடர்த்தியான மையை கொண்டுள்ள பேனாவைப் பயன்படுத்தவும். காசோலையில் அச்சிடப்பட்டிருக்கும் உங்களுடைய பெயருக்கு மேல், கையொப்பமிடவும். மேலும், எக்காரணத்தைக் கொண்டும் உங்களுடைய காசோலைப் புத்தகத்தில் உள்ள வெற்றுக் காசோலைகளில் கையொப்பங்களை போட்டு வைக்க வேண்டாம். அந்த காசோலைப் புத்தகம் தொலைந்து போனால், அடுத்து என்ன நடக்கும் என்று  உங்களுக்கு தெரியும் தானே ?

Wednesday, August 29, 2018

வாகனத்துக்குப் பதிவு எண் வாங்குவது எப்படி?

வாகனத்துக்குப் பதிவு எண் வாங்குவது எப்படி?

வாகனப்பதிவு எண்
ஃபேன்ஸி எண்களைப் பெறுவது எப்படி?

விண்ணப்பிக்கும் முறை

விரும்பிய எண்ணைப் பதிவு எண்ணாகப் பெற எவ்வளவு கட்டணம்?

வாகனப்பதிவு எண்
மோட்டார் வாகனச் சட்டத்தில் செக்ஷன் 4(6)ன் படி ஒவ்வொரு மாநிலத்தின் மற்றும் யூனியன் பிரதேசத்தின் முதல் இரண்டு ஆங்கில எழுத்துகளைப் பதிவு எண்ணில் முதலில் குறிப்பிட வேண்டும். அதாவது, தமிழ்நாட்டுக்கு TN, ஆந்திராவுக்கு AP,  அதே போல, மாநில அரசு ஒவ்வொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கும் (ஆர்.டி.ஓ.) ஒதுக்கியுள்ள குறிப்பிட்ட கோட் நம்பரையும் குறிப்பிட வேண்டும் (எ.கா: சென்னை அயனாவரம் - 01, திருநெல்வேலி - 72 மதுரை - 58, கிருஷ்ணகிரி - 24 நாகர்கோவில்– 74). அதற்கு அடுத்தாற்போல, நான்கு எண்களுக்கு மிகாமல் எண்கள் குறிப்பிட வேண்டும். அதாவது, ஒவ்வொரு ஆர்டிஒ அலுவலகத்திலும் 1 முதல் 9999 வரையான எண்களைக் கொடுக்க வேண்டும். 9999 என்ற எண் முடிந்தவுடன் அடுத்த சீரிஸ் ஆங்கில எழுத்து குறிப்பிடப்பட்டு 1 முதல் 9999 வரை பதிவு எண்களாகக் குறிப்பிடலாம்.

ஃபேன்ஸி எண்களைப் பெறுவது எப்படி?

சென்னை தவிர, தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஒ. அலுவலகங்களில் எந்த வரிசை ஆரம்பித்தாலும் 1 முதல் 9999 எண்களுக்கு குறிப்பிட்ட 97 பேன்சி எண்களை அரசே தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளும். இந்த எண்கள் எல்லாமே ஃபேன்னறி எண்கள். இந்த எண்களை முதலில் யாருக்கும் கம்ப்யூட்டர் ஒதுக்காதபடி வரிசையிலிருந்து தடுத்து நிறுத்திவிடுவார்கள். இந்த எண்களைப் பெற வேண்டுமெனில், நாம் சென்னையில் தமிழக அரசின் ஹோம் டிபார்ட்மென்ட் - டிரான்ஸ்போர்ட் செக்ஷனில், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான ஆர்.டி.ஒ. பணத்தைச் செலுத்தி இந்த ஃபேன்ஸி எண்களைப் பெற வேண்டும். மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பெற முடியாது.

விண்ணப்பிக்கும் முறை

குறிப்பிட்ட நாளில் கடைசியாக எந்த எண் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதிலிருந்து 1000 எண்களுக்குள் (அரசு ஒதுக்கியுள்ள சிறப்பு எண்களைத் தவிர்த்து) ஏதாவது ஒரு குறிப்பிட்ட எண்ணை நாம் தேர்வு செய்து மனு கொடுத்தால், அதை ஒதுக்கித் தரும். அதிகாரம் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலக அதிகாரிக்கு உண்டு. இதற்கு நம் வாகனத்தை உடனடியாக ஆர்டிஓ. அலுவலகத்தில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

வாகனம் வாங்காமலே ஆயிரம் எண்ணுக்குள் ஏதாவது ஓர் எண்ணை, விண்ணப்பித்து ரிசர்வ் செய்து கொள்ளலாம். நாம் ரிசர்வ் செய்த எண், ரெகுலர் ரெஜிஸ்ட்ரேஷனில் வருவதற்குள் நாம் வாகனத்தைப் பதிவு செய்து அந்த எண்னைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் ரிசர்வ் செய்துள்ள எண்ணுக்கு முந்தைய எண் ரெகுலர் ரெஜிஸ்ட்ரேஷனில்  ஒதுக்கப்பட்டவுடன், ஆர்.டி.ஒ. அலுவலகத்திலிருந்து நமக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். 30 நாட்களுக்குள் நாம் சென்று புதிய வாகனத்தையும் பதிவுக்கான சான்றுகளையும் சமர்ப்பிக்காவிட்டால் நாம் ரிசர்வ் செய்த எண் நமக்கு கிடையாது. ரிசர்வ் செய்வதற்காக நாம் செலுத்திய பணமும் திரும்பக் கிடைக்காது.

விரும்பிய எண்ணைப் பதிவு எண்ணாகப் பெற எவ்வளவு கட்டணம்?

கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 1000 எண்களுக்கு உள்ள எண்ணை ரிசர்வ் செய்ய 50 சிசி-க்கு குறைவான வாகனங்களுக்கு ரூ.1000, 50 சிசி-க்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான (ஆட்டோ ரிக்ஷாவும் சேர்த்து) கட்டணம் ரூ.2000, நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமான விலை உள்ள வாகனங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு ரிசர்வ் செய்ய கட்டணம் ரூ.8000 மற்ற வாகனங்களுக்கு ரூ. 5000 ஆகும்.

இந்த கட்டணத்தைச் செலுத்திய பின், எந்த எண்ணை ரிசர்வ் செய்கிறார்களோ அந்த நபரின் பெயரில் வாங்கும் வாகனத்துக்குதான் இந்த எண் கொடுக்கப்படும். ஒரே எண்ணை இரண்டு பேர் கேட்டால். ஒரே எண் ரிசர்வ் செய்ய வேண்டும் என்று இரண்டு நபர்கள் ஒரே நாளில் மனு செய்தால், அதில் அரசுக்கு அதிக வரி கட்டும் வாகனத்துக்கு முன்னுரிமை தரப்படும். எடுத்துக்காட்டாக, ஒர் எண்ணை ஒருவர் தனது பைக்குக்கு வேண்டும் என்றும், அதே நாளில் வேறு நபர் தனது காருக்கு வேண்டும் என்றும் மனு செய்தால், கார் உரிமையாளர் அதிக வரி செலுத்துவதால், அவருக்கே முன்னுரிமை தரப்படும். ஒரே எண்ணைக் கேட்கும் நபர்கள் ஒரே மாதிரியான வாகனத்துக்கு வேண்டுமென்று செய்திருந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

Thursday, August 16, 2018

TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கு தயாராவது எப்படி ?

அரசு வேலையில் சேர நடத்தப்படும் TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கு தயாராவது எப்படி ? மற்றும் தேர்வின் விபரங்கள்

தமிழக அரசு வேலையில் சேர்வதற்க்கு பல்வேறு தேர்வுகளை TNPSC நடத்துகின்றது, தற்போது 1199 பணி இடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வை வரும் நவம்பர் மாதம் நடத்த உள்ளது.  துணை பதிவாளர் (Sub Registrar, Grade-II), நகராட்சி ஆணையர் (Municipal Commissioner), தணிக்கை ஆய்வாளர் (Audit Inspector), உட்பட பல்வேறு அரசு பணிக்கு இந்த தேர்வு நடத்தப்படுகின்றது. அதிக படசமாக மாதம் ரூ.1,17,600 வரை சம்பளம் தரக்கூடிய இந்த தேர்வை பற்றிய விபரங்களை முதலில் பார்த்துவிட்டு, தேர்விற்க்கு தயாராவது எப்படி என்பதை பார்ப்போம்.

TNPSC குரூப் 2 தேர்வு விபரம் :

கல்வி தகுதி : பட்ட படிப்பு முடித்தவர்கள் (கலை, அறிவியல், பொறியியல் உட்பட ஏதாவது ஒரு டிகிரி படிப்பு படித்து இருக்க வேண்டும்)

வயது : குறைந்த பட்சம் 18, பிற்படுத்தபட்ட (BC, MBC, BC-Muslim), SC/ST வகுப்பினருக்கு அதிக பட்ச வயது இல்லை, பொது பிரிவினருக்கு அதிக பட்சம் 30, சில பணியிடங்களுக்கு 40.

விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 9 (09/09/2018)

தேர்வு கட்டணம் : பதிவு கட்டணம் ரூ.150, தேர்வு கட்டணம் ரூ.250 (100 + 150 )

முதல் கட்ட தேர்வு நடைபெறும் தேதி : நவம்பர் 11  (11/11/2018) , காலை 10 மணி

மாத சம்பளம் : பணி இடங்களுக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்,. குறைந்த பட்சம் ரூ.20,000 முதல் அதிக பட்சமாக ரூ.1,17,600 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

http://www.tnpscexams.in/upage.html இந்த இணையதளத்திற்க்கு சென்று முதலில் பதிவு செய்ய வேண்டும், பிறகு இந்த https://tnpscexams.in/piigrplive18/tfrmlogin.aspx லின்கில்,  பதிவு செய்யப்பட்ட user name, password மூலம் log-in செய்து கேட்கப்படும் விபரங்களை அளிக்க வேண்டும், உங்கள் புகைபடம் மற்றும் கையெளுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்.

தேர்வு முறை :

இது மூன்று கட்டங்களாக நடைபெறும், முதல் கட்ட தேர்வு (Preliminary Examination), இரண்டாம்  கட்ட தேர்வு (Main written examination), நேர்முக தேர்வு (Interview, oral).

முதல் கட்ட தேர்வு (Preliminary Examination) :

Objective type அதாவது சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில் வினாக்கள் இருக்கும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு  கேள்விகள் கேட்கப்படும்,  குறைந்த பட்சம் 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

இரண்டாம் கட்ட தேர்வு மற்றும் நேர்முக தேர்வு :

முதல் கட்ட தேர்வில் தேர்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம், இது எழுத்து தேர்வு , 3 மணி நேரம் நடைபெறும். 300 மதிப்பெண்ணிற்க்கு கேள்விகள் கேட்க்கப்படும். நேர்முக தேர்வு 40 மதிப்பெண்ணிற்க்கு இருக்கும், மொத்தம் 340 மதிப்பெண், குறைந்தது 102 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

தேர்வை பற்றி மேலும் விபரங்கள் தேவை பட்டால் கமென்டில் கேளுங்கள் விடை அளிக்கின்றேன்  தேர்வை பற்றிய முழுவிபரங்களும் இந்த http://www.tnpsc.gov.in/notifications/2018_15_group_ii_services.pdf லின்கில் உள்ளது.

தேர்விற்க்கு தயாராவது எப்படி ?

முதல் நிலை தேர்வில் பொது பாடம் (General Studies), நடப்பு  நிகழ்வுகள் (Current Events), தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொது பாடத்தில் (General Studies) இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடத்திலும், நடப்பு  நிகழ்வுகள் (Current Events) பிரிவில் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியில் (political science) பாடங்களில் இருந்து கேள்வி கேட்கப்படும். இந்த தேர்விற்க்கான மொத்த பாட திட்டமும் (syllabus) இந்த https://tnpsc.news/tnpsc-group-2-syllabus/ லின்கில் உள்ளது.

பட்ட படிப்புதான் இந்த தேர்விற்க்கு தகுதியாக இருந்தாலும், பெரும்பாலான கேள்விகள் 6 முதல் 10 -ஆம் வகுப்பு புத்தகங்களில் இருந்துதான் கேட்கப்படும். எனவே இந்த தேர்விற்க்கு தயாராக விரும்பும் மாணவர்கள் தமிழக அரசு பாட நூல கழகம் வெளியிட்டு அரசு பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் 6 முதல் 10 -ஆம் வகுப்பு புத்தகங்களை வாங்கி படியுங்கள்.

முதலில் பாடதிட்டத்தை (syllabus) படித்து அதில் குறிபிடுள்ள பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது. புத்தங்கள் எல்லா புத்தக கடைகளிலும் கிடைக்கும், இலவசமாக http://www.textbooksonline.tn.nic.in/ இந்த லின்கில் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளாம்.

இந்த தேர்வு அவ்வபோது நடக்கும் தேர்வாகும், எனவே கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பை ஒரு முறை வாங்கிபடித்து பாருங்கள். இந்த மூலம் உங்களுக்கு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும், அதற்க்கு ஏற்றார் போல் உங்களை தயார் செய்துகொள்ளுங்கள். இது போன்ற கேள்விகளின் தொகுப்பு, மற்றும் அதற்க்கான விடைகள் அடங்கிய புத்தங்கள் கடைகளில் கிடைக்கும். பொதுவாக பயிற்சி நிறுவங்களில் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் எளிதில் இந்த தேர்வுகளில் வெற்றி பெறலாம்.  தமிழகத்தின் சென்னை உட்பட பல் வேறு பகுதிகளில் சிறந்த பயிற்சி நிறுவங்கள் உள்ளன.  தேர்வு எழுதுவதற்க்கு முன் மாதிரி தேர்வு (mock exam) எழுதி பயிற்சி எடுத்துகொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் அறிவு திறன் உங்களுக்கு தெரியும், குறைந்த மதிப்பெண் எடுத்த பாடங்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து படித்து மீண்டும் மாதிரி தேர்வு (mock exam) எழுதுங்கள்.

அரசு வேலை என்பதால் போட்டி கடுமையாக இருக்கும், எனவே நமக்கு எங்கே வேலை கிடைக்க போகின்றது என்ற அவ நம்பிக்கையில் தேர்வு எழுதாமல் விட்டு விடாதீர்கள், முதலில் தேர்வில் வெற்று பெறுவோம் என்று நம்பிக்கை வையுங்கள், அதிகமான நேரங்களை தேர்விற்க்கு தயாராவதற்க்கு செலவிடுங்கள், படிக்கும் போது கவனமாக படியுங்கள். படித்ததை எழுதி பாருங்கள். குறைந்த பட்ச மதிபெண் 90 என்றாலும் கூடுதல் மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யுங்கள்.