Showing posts with label Government. Show all posts
Showing posts with label Government. Show all posts

Thursday, October 31, 2019

டிகிரி முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

டிகிரி முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஓர் நற்செய்தி - ஆண்டுக்கு ₹ 10,000 கல்வி உதவித்தொகை

நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறது அதில் குறிப்பாக கல்வி பணியாக தேர்வுக்கு முன் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?, தேர்வுக்கு பின் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?, கல்லூரி முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி, மற்றும் சிறுபாண்மை இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற ஸ்காலர்ஷிப் அப்ளை செய்யும் முகாம் போன்ற கல்வி பணி தவ்ஹீத் ஜமாஅத்தின் இன்றியமையாத பணி.
இந்த கல்வி உதவித்தொகை சற்று மாறுபட்டு இந்திய அளவில் அனைத்து சமுதாய மாணவ மாணவிகளின் மதிப்பெண் அடிப்படையில் அமைந்துள்ளது.

மாணவ மாணவிர்கள் பொருளாதாரா சூழ்நிலை காரணமாக கல்வி தடைபடகூடாது என அரசாங்கம் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது அதுபோல இந்த மத்திய அரசாங்கம் இந்த ஆண்டு ஒரு புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுக படித்தியுள்ளது 

பட்டபடிப்பு படிக்கும் அணைத்து சமுதாய மாணவ மாணவிகளுக்கு தேசிய அளவில் 82,000 பேருக்கு வழங்கப்பட உள்ளது அதில் தமிழத்திற்க்கு 4883 நபர்களும்‌‌ புதுச்சேரிக்கு 78 நபர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. ஆண்டுக்கு ஒரு நபருக்கு ருபாய் ₹10,000 தரப்படுகிறது. இதில் 50% சதவீதம் மாணவிகளுக்கு வழப்படுகிறது. மத்திய அரசின் இட ஒதுக்கீடு முறை‌‌ பின்பற்றப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க  தேவையான தகுதிகள் :

1) +2வில் 80% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்
2) தொலைதூரமோ அல்லது தனித்தேர்வு அல்லாமல் பள்ளியில் +2 படித்து இருக்க வேண்டும்
3) யுஜிசி அங்கிகாரம் பெற்ற கல்லூரியில் பட்டபடிப்பு படிக்க வேண்டும்
4) முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருக்க வேண்டும்
5)‌ குடும்பத்தின் வருமானம் ₹8,00,000 மிகாமல் இருக்க வேண்டும்

யார் அப்ளை செய்ய முடியாது :

1) டிப்ளமோ படிக்கும் மாணவ மாணவிகள் அப்ளை செய்ய முடியாது
2) தொலைதூர கல்வி படிக்கும் மாணவ மாணவிகள் அப்ளை செய்ய முடியாது
3) 80% த்துக்கும் குறைவாக மதிப்பெண் அடுத்த மாணவ மாணவிகள் அப்ளை செய்ய முடியாது
4) பள்ளி கல்லூரிகளில் குற்ற பின்னணி உள்ள மாணவ மாணவிகள் அப்ளை செய்ய முடியாது

ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :

1) +2 மதிப்பெண் சான்றிதழ்
2) பள்ளி மாற்று சான்றிதழ்
3) கல்லூரியில் படித்துகொண்டு இருப்பதற்க்கான சான்றிதழ்
4) மாணவரின்‌ ஆதார் கார்டு
5) மாணவரின் பேங்க பாஸ்புக்

விண்ணப்பிக்க கடைசி நாள் - 31.10.2019.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் - www.scholarships.gov.in 

கல்வி உதவித்தொகை புதுப்பிக்க தகுதிகள்

1) 60% சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்
2) 75% வருகை பதிவேடு இருக்க வேண்டும்
3) ராக்கிங் போன்ற குற்ற செயலில் ஈடுபட்டிருக்க கூடாது

விண்ணப்பிப்பது தொடர்பான உதவிக்கு - 0120- 6619540
என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் 

(அல்லது)

மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் - helpdesk@nsp.gov.in

#scholorship 
#கல்வி_உதவி_தொகை
#மாநில_மாணவரணி
#TNTJSW

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம்!!!

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம்!!!

வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி 

தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டுமென்ற ஆசை அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டம் (Prime Minister Awas Yojana Scheme - PMAY)

நகர்புற ஏழைகள் மற்றும் குடிசைவாசிகளின் வீட்டு வசதி தேவைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுகாதாரமற்ற சூழலில் வாழக்கூடிய குடிசைவாசிகள், பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் (Economically Weaker Section) மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர் (Lower Income Group) ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியானவர்களாவர்.

விதவைப் பெண்கள், துப்புரவுப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டம் நான்கு வகைகளை கொண்டதாக இருக்கிறது. அதனடிப்படையில் மாநில அரசுகள் பயனாளிகளை தேர்வு செய்து உதவி வழங்கும்.

• சேரிகளை தனியார் பங்கேற்புடன் மறுமேம்பாடு செய்தல்

• மானியம் மூலம் நலிவுற்ற பிரிவினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.6,00,000/- முதல் 12,00,000/- வரை கடன் வழங்குதல் - இத்திட்டத்தில் குறிப்பிட்ட சதவிகித வட்டி தள்ளுபடி செய்யப்படும்

 (குறிப்பு:- நலிவுற்ற அடிப்படையில் வழங்கக்கூடிய கடனுக்கு வட்டியின் அடிப்படையில் இருப்பதால்  முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ளவும்)

• மலிவு விலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்படும். குடியிருப்பின் கட்டுமான மதிப்பில் 10 சதவிகித தொகையை பயனாளி முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

• நிலம் வைத்திருப்போர் தனி வீடு கட்டுவதற்கான மானியம் அளித்தல். இத்திட்டத்தில் பயனாளிக்கு ரூ.2,10,000/- நான்கு தவணைகளாக வழங்கப்படும். பயனாளிகளின் மூலம் கட்டப்படும் வீடானது 300 சதுர அடிக்கு அதிகமாகவும் 600 சதுர அடிக்கு மிகாகலும் இருத்தல் வேண்டும்.

*தகுதிகள்*
• ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

• திருமணமானவராக இருத்தல் வேண்டும்.

• இந்தியாவில் எங்கும் விண்ணப்பிப்பவர் மற்றும் அவர் குடும்ப அங்கத்தவர்கள் பெயரில் சொந்த வீடு இருத்தல் கூடாது (குடும்பம் என்பது கணவன் மனைவி மற்றும் மணமாகாத பிள்ளைகளை குறிக்கும்).

• தனி வீடு கட்ட உதவி கோரும் பயனாளிகளுக்கு கான்கிரிட் வீடு இருத்தல் கூடாது.

*தேவையான ஆவணங்கள்*

• வருமான சான்றிதழ் (சுயசான்றிதழ் - Self Affidavit)

• ஆதார் அட்டை

• நில உரிமை பத்திரம் அல்லது பட்டா

• வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை

• வங்கி கணக்கு புத்தகம்.

*விண்ணப்பிக்கும் முறை*

இத்திட்டத்திற்கு *www.pmaymis.gov.in* என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இறைவன் நாடினால், எவ்வாறு விண்ணப்பிப்பது வீடியோ பதிவாக ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும்.

பிறப்பு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?!

பிறப்பு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?!

வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி

ஒவ்வொருவருக்கும் "பிறப்பு சான்றிதழ்" என்பது மிக முக்கியமானதாகும். இந்த சான்றிதழ் ஆனது பள்ளியில் சேரவும் , பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, திருமணத்துக்கு உரிய வயதை நிரூபிக்க , வாக்குரிமை பெற , ஓட்டுநர் உரிமம் , மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றிற்கு "பிறப்பு சான்றிதழ்" மிக அவசியமாகும். பொது சுகாதாரம் , மருத்துவம் சமந்தமான தேசிய திட்டங்களை வகுக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை கட்டாயம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை மாநில அரசும் தேவையான எளிமையான முறையை கையாண்டு வருகிறது.
 

*birth and death certificate பிறப்பு , இறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?*

பிறப்பு , இறப்பு பதிவுகள் சட்டம் 1969 யின் படி ஒருவரின் இறப்பு மற்றும் பிறப்பை 21 நாட்களுக்குள் பதிவு செய்தல் மிகவும் கட்டாயம். எங்கு சென்று பதிவு செய்வது ? பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வோரின் பகுதியை பொருத்து அமைந்தது. இதன் படி மாநகராட்சியாக இருந்தால் இந்த அலுவலகத்தை நாட வேண்டும். கிராமமாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலர் , நகராட்சியாக இருந்தால் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று இறப்பு , பிறப்பு பதிவுகளை அலுவலர்களின் உதவியோடு பதிவு செய்ய வேண்டும். இதற்கென அலுவலர்களை அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நியமித்துள்ளனர். ஒவ்வொரு அலுவலருக்கும் பகுதிகளின் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளே மாநகராட்சி மற்றும் நகராட்சி , கிராம பஞ்சாயத்து ஒப்புதல் உடன் பிறப்பு சான்றிதழ் வழங்கலாம் என மத்திய , மாநில அரசுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்ட பின்பும் அதிகாரிகள் சான்றிதழை வழங்க தவறினால் அதிகாரியின் மீது சமந்தப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் , வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளிக்கலாம்.

*birth certificate பதிவு செய்த சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டணம்?*

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை தேடுவதற்கு ரூபாய் 2யை கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் ஒவ்வொரு கூடுதல் ஆண்டும் தேட ரூபாய் 2யை கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இல்லா சான்றிதழை பெறவும் (Non- Availability Certificate)ரூபாய் 2 யை கட்டணமாக செலுத்த வேண்டும்.(இப்போது கட்டணம் மாறுபடலாம்) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற வேண்டுமென்றால் ரூபாய் 5.00 கட்டணமாக செலுத்தி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். வீட்டிலேயே குழந்தை பிறந்தாள் சமந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். இவர் 21 நாட்களுக்குள் சமந்தப்பட்டவருக்கு பிறப்பு சான்றிதழை வழங்குவர்.

*இறப்பு மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் 21 நாட்களுக்குள் பெறவில்லையா?*

 21 நாட்களுக்கு மேல் ஒரு வருடம் வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய தவறினால் தாசில்தாரிடம் மனு அளித்து தாமத கட்டணத்தை மாநகராட்சி , நகராட்சி , கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட அலுவலகங்களில் செலுத்தி சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

*ஒரு வருடத்திற்கு மேல் இறப்பு மற்றும் பிறப்பு பதிவுகளை செய்ய தாமதமா?*

ஒர் ஆண்டுக்கு மேல் இறப்பு மற்றும் பிறப்பு விவரங்களை பதிவு செய்ய தவறினால் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் சட்டம் - 1969 , பிரிவு (13) 3-ன் கீழ் சமந்தப்பட்ட நபர் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அல்லது மாநகர  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். பிறப்பு , இறப்பு சான்றிதழ்களை சமந்தப்பட்ட பெற்றோர் மற்றும் வாரிசுதாரர்கள் மட்டுமே நீதிமன்றத்தை அணுக முடியும்.

*birth and death certificate நீதிமன்றத்தில் பிறப்பு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்!*

1. பிறந்த தேதி அறிந்த மூன்றாம நபரின் வாக்குமூலம் .

2. பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் இருந்து பெறப்பட்ட பதிவில்லா சான்றிதழ் .

3. பள்ளி சான்றிதழ்

4. மருத்துவமனை அதிகாரியின் சான்றிதழ்.
 

நீதிமன்றத்தில் இறப்பு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் !

1. புதைக்கப்படும் அல்லது கல்லறை அலுவலரின் சான்றிதழ்.

2.மருத்துவ அதிகாரியின் சான்றிதழ்.

3.இறப்பை பற்றி அறிந்த மூன்றாம் நபரின் வாக்குமூலம்.

4. ஏதேனும் நம்ப தகுந்த ஆவணங்கள்.

பதிவாளரிடம் இறப்பு மற்றும் பிறப்பை தெரிவிக்க வேண்டியவர்கள் .

வீட்டில் நடக்கும் இறப்பு மற்றும் பிறப்பு குடும்பத்தில் உள்ள மூத்த  உறுப்பினர்கள் , மருத்துவமனையில் இறப்பு மற்றும் பிறப்பு சமந்தமாக மருத்துவமனையின் மருத்துவர் , சாலையில் நடக்கும் இறப்பு குறித்து சமந்தப்பட்ட பகுதியின் அரசு அதிகாரிகளின் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்க நடவடிக்கையை அரசுகள் எடுத்து வருகின்றனர். 

மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இணையதளம் மூலம் இறப்பு மற்றும் பிறப்பு விவரங்களை பதிவு செய்யவும் , இணையதளம் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதியை சென்னை உட்பட பல மாவட்டங்கள் மாநகராட்சி மூலம் மக்களுக்கு எளிமையான முறையில் இறப்பு மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழக பேரூராட்சி இயக்கத்தின் மூலம் இணையதளத்தில் பிறப்பு / இறப்பு சான்றிதழ்களை கட்டணத்தை செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

முகவரி : 

http://etownpanchayat.com/PublicServices/Birth/ApplyBirth.aspx#! பெரு நகர சென்னை மாநகராட்சியும் இணையதள வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

முகவரி : http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthanddeath.htm பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களை கட்டாயம் பதிவு செய்வது நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை சார்ந்தது . எனவே இது தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மக்கள் ஒருங்கிணைந்து இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

#birth_certificate
#death_certificate
#tntjsw

அரசு கெஜட்டில் பெயரை மாற்றம் செய்வது எப்படி

அரசு கெஜட்டில் பெயரை மாற்றம் செய்வது எப்படி?

வெளியீடு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

தங்கள் பெயர்களை சில முக்கிய காரணங்களுக்காக அரசு கெஜட்டில்  மாற்றம் செய்கின்றனர்.  காரணங்கள் பின்வருமாறு. 

* சில முக்கியமான ஆவணங்கள் புதியதாக எடுப்பதாற்க்காகவும், பழைய ஆவணங்களை திருத்தம் செய்வதற்க்காகவும் தங்கள் பெயர்களை மாற்றம் செய்கின்றனர்.
(எ.கா.: ஆதார்கார்டு, பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் மற்றும் பல)

* அது போல இறைவனும் அவனின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய முறையில் இறைவனுக்கு இணை வைக்கும் பெயர்கள் அல்லாமல் அர்த்தமில்லாத பெயர்களை வைத்து சகோதரர்களும் தங்கள் பெயர்களை மாற்றி கொள்கின்றனர் (எ.கா.: சாஹுல் ஹமித் என்ற இறைவனுக்கு இணையான பெயரை மாற்றி அப்துல் ஹமீத் என்ற இணை இல்லாத பெயர்களாக மாற்றி கொள்கின்றனர்)

*சில தொப்புள் கொடி உறவுகள் சத்திய மார்க்கத்தை ஏற்று கொண்டு தங்கள் பெயர்களை இஸ்லாமிய பெயர்களாக மாற்றி கொள்கின்றனர். பிறகு பழைய பெயர்களை மாற்றி புதிய பெயரை அரசு கெஜட்டில் மாற்றம் செய்கின்றனர்.

* இந்திய அரசியல் சாசன சட்டமும் Article-25 அவரவர் மதங்களை அந்தந்த மத சட்டங்கள் அடிப்படையில் சுதந்திரமாக பின்பற்றலாம் எனவும். ஒவ்வொருவரும் தனது மதத்தை பின்பற்ற யாரும் தடை செய்ய முடியாது. அதில் தமது பெயரைகளை மாற்றம் செய்கிற உரிமையை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகுனுக்கும் அளிக்கிறது. 

*அதுபோல் நபி(ஸல) அவர்கள் கூறினார்கள் 

நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான்.

நூல் : முஸ்லிம் (147)

மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்ளது பெயரால்  நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

நூல் : அஹ்மத் (20704)

அந்த மறுமை நாளில் இறைவன் நம்மை அழைக்கும் போது இறைவனுக்கு இணையான பெயர்களையோ அல்லது பெருளற்ற முட்டாள் தனமான மூடநம்பிக்கையான பெயர்களை வைத்து நம்மை அழைக்கும் போது அது நமக்கு கைசேதம் மற்றும் இழுக்கை ஏற்படுத்தும் அத்தகைய பெயர்களை தவிர்த்து இறைவனின் அருள் பெருந்திய பெயர்களாக அமைத்துகொள்வோமாக. 

🔰 *அரசு கெஜட்டில் பெயரை மாற்றம் செய்வது எப்படி?*

நமது பெற்றோர் வைத்த பெயரையோ அல்லது தனக்கு விரும்பாத பெயரையோ மாற்றி புதிய பெயர் வைக்க அரசு கெஜட்டில் தனது பழைய பெயரை மாற்றம் செய்ய வேண்டும்.

அல்லது மதம் மாறியவர் தனக்கான புதிய பெயரை தேர்ந்தெடுத்து மாற்றிக்கொள்ளலாம் 

🔰  *பெயரை மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:*

🔅தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும் 
🔅60 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

🔰 *பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்:*

🔅பிறப்பு மற்றும் உங்களது கல்வி சான்றிதழ் 

🔅உங்களது போட்டோவை இதற்கென உள்ள விண்ணப்பத்தில் ஒட்டி அரசு அதிகாரியிடம்(Green Ink holder) கையெழுத்து வாங்க வேண்டும்...

(விண்ணப்பம் கீழே உள்ள லிங்கில் உள்ளது )

🔰 *இதற்கான கட்டணங்கள்:*

🔅ஏதோ ஒரு காரணங்களுக்காக பொதுவான ஒரு பெயரை தேர்ந்தெடுக்க கட்டணம் ₹415.

🔅தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் தமிழில் பெயர் மாற்றம் செய்ய கட்டணம் ₹50(அரசிதழில் விளம்பரம் செய்யவேண்டும்)

🔰 *பணம் செலுத்தும் முறை:*

🔅நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பணத்தை செலுத்தலாம்.

🔅அல்லது கீழ்காணும் முகவரிக்கு டிடி வரைவோலை மூலம் பணத்தை அனுப்பலாம்

🔰 *அலுவலக முகவரி*

*உதவி இயக்குனர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையகம் 110 அண்ணா சாலை சென்னை 600 002*

🔰 *விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய நடைமுறைகள்:*

🔅அரசிதழில் நமது பெயர் மாற்றத்திற்கான  விளம்பரத்தை கொடுக்கவேண்டும்.

🔅ஒருவேளை அரசிதழிலும் பெயர் தவறாக அச்சுயிடப்பட்டால் அதை 6 மாத காலத்திற்குள் சரி செய்யவேண்டும் 

🔅விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் அரசு கேசட் ஆபீஸரிடம் கையெழுத்து வாங்கி இருக்க வேண்டும்

🔅இத் துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பம் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் 

🔅பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசிதழில் நேரடியாக வந்து அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம் 

🔅தவறும்பட்சத்தில் தபால் மூலம் அனுப்பப்படும் 

🔅தபால் மூலம் அனுப்பப்பட்ட அரசிதழ் திருப்பப்பட்டால் ஆறு மாத காலத்திற்குள் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து வாங்கிக் கொள்ள வேண்டும்

🔅கீழ்காணும் அரசு இணைய தளத்தில் அனைத்து விவரங்களும் உள்ளது 

http://www.stationeryprinting.tn.gov.in/service_to_public.htm

🔅 *விண்ணப்பங்களை பெற*

http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm

ஆங்கிலத்தில் உள்ள  பெயரை மாற்ற:-

http://www.stationeryprinting.tn.gov.in/forms/Proforma-1E.pdf

தமிழில் உள்ள  பெயரை மாற்ற:-

http://www.stationeryprinting.tn.gov.in/forms/Proforma-1T.pdf

மதம் மாறியவர்கான விண்ணப்பம்:-

http://www.stationeryprinting.tn.gov.in/forms/Proforma-2.pdf