Wednesday, September 4, 2019

GATE EXAM

இந்தியாவில்உள்ள IIT, NIT, மத்திய கல்வி நிறுவனங்கள், அண்ணா பல்கலை கழகம், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech/M.Plan, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது.
இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரி மற்றும் படிப்பிற்க்கு ஏற்ப அரசு மாதம் ரூ.12,400 முதல் ரூ.25,000 வரை வழங்குகின்றது). இந்த தொகை மூலம் கல்வி கட்டணம், ஹாஸ்டல், உணவு, புத்தகம் என அனைத்து வகையான செலவுகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் நிறைவேற்றிகொள்ளலாம்.
இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
இந்த நுழைவு தேர்வுகளை பற்றி அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் பெரும்பாலோன மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவதில்லை. உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை. கவனத்துடன் படித்தால் எந்த தேர்வையும் வெல்லலாம்.
GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம் :
இது முழுக்க முழுக்க ஆன்லைனில் நடக்கும் தேர்வாகும். தேர்வு எழுத 3 மணி நேரம் கொடுக்கப்படும். கணினியில் தேர்வு என்பதால் , தேர்ந்தெடுக்கும் முறை கேள்விகள் ( Multiple Choice Questions) மற்றும் எண்களில் பதில் அளிக்கும் முறை (Numerical Answer) கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 65 கேள்விகள் 100 மதிப்பெண்ணுக்கு கேட்க்கப்படும், தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கபடும் (Negative marking).
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
1. B.E/B.Tech (பொறியியல் படிப்பு) படித்து முடித்த மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்
3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல் ( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க முடியும். இந்த இணையதளத்தில் (https://appsgate.iitd.ac.in/) மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 24 (24-09-2019)
விண்ணப்ப கட்டணம் ரூ.1500
தேர்வு எழுதும் அனுமதி சீட்டை (Admid card) ஆன்லைனில் பெற்றுகொள்ளாம்.
தேர்வுகள் 2020 பிப்ரவரி 1,2,8,9 ஆகிய தேதிகளில் நடைபெறும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் இதில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு எழுதுவார்கள்.
2020 மார்ச் 16-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடபடும்.
GATE - தேர்வில் தேர்சி பெற்றிருந்தால் நாம் விரும்பும் கல்லூரி/ பல்கலை கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் அண்ணா பல்கலை கழகம் நடத்தும் TANCA கவுன்சிலிங் மூலம் விருப்பமான கல்லூரியில் சேரலாம்.
GATE-தேர்வை பற்றி கூடுதல் விபரம் தேவைபட்டால் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

MBA படிக்க படிக்க விருப்பமா ? CAT தேர்விற்க்கு

MBA படிக்க படிக்க விருப்பமா ? CAT தேர்விற்க்கு இப்போது விண்ணப்பிக்கலாம்
இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிக சம்பளம் தரும் படிப்புகளில் IIM-ல் உள்ள MBA படிப்பும் ஒன்று (IIM-ல் இதை PGP படிப்பு என்றும் அழைப்பார்கள்). அதிக சம்பளமும், பெரிய நிறுவங்களை நிர்வகிக்கும் பொருப்புகளையும் பெற CAT என்ற நுழைவு தேர்வை மாணவர்கள் எழுதி தேர்சி பெற வேண்டும். இப்போது இந்த தேர்வு எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 18 (18/09/2019).
தமிழகத்தின் திருச்சி உட்பட இந்தியாவில் பல இடங்களில் IIM-கள் உள்ளன. உலக அளவில் பொருளாதாம் மற்றும் மேலாண்மை துறையில் மிக பெரிய பொருப்புகள் வகிப்பவர்கள் இந்த IIM- ல் படித்தவர்கள். CAT மதிப்பெண்ணை வைத்து இன்ன பிற அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் MBA படிப்பில் நேரடியாக சேரலாம். தமிழகத்தில் திருச்சியில் உள்ள NIT, வேலூரில் உள்ள VIT, சென்னையில் உள்ள Loyola கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் CAT மதிப்பெண்ணை வைத்து MBA சேரலாம்.
CAT நுழைவு தேர்வை பற்றிய விபரம் :
தேர்வு நடைபெறும் நாள் : நவம்பர் 24 (24/11/2019)
இது கணினியில் எழுதும் தேர்வாகும் (Computer based exam). CAT தேர்வு மூன்று பகுதிகளை கொண்டது. முதல் பகுதி Verbal Ability and Reading Comprehension (VARC), இரண்டாம் பகுதி Data Interpretation and Logical Reasoning (DILR), மூன்றாம் பகுதி Quantitative Ability. ஓவ்வொரு தேர்வு எழுத 60 நிமிடங்கள் ஒதுக்கப்படும், மொத்தம் 180 நிமிடங்கள். மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் தேர்ந்தெடுக்கும் முறை வகை ( Multiple Choice Questions) மற்றும் நேரடி கேள்வி வகையில் இருக்கும். தேர்ந்தெடுக்கும் முறை கேள்விகள் (Multiple Choice Questions) பகுதியில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கபடும் (Negative marking). நேரடி கேள்வி வகைகளில் Negative marking கிடையாது.
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் எழுதலாம்
2. குறைந்தது 50% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.
3. இந்த தேர்வை எழுத வயது வரம்பு இல்லை.
இட ஒதுக்கீடு : பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 27%, SC - 15 %, ST – 7.5 % இட ஒதுக்கீடு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க முடியும். https://cdn.digialm.com/…/confi…/756/62128/Registration.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம் ரூ.1900, தேர்வு எழுதும் அனுமதி சீட்டை (Admid card) ஆன்லைனில் பெற்றுகொள்ளலாம்.
சென்னை , மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை உட்பட இந்தியாவில் பல நகரங்களில் தேர்வு நடைபெறும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடபடும்.
தேர்வு முடிவுகள் வெளியானவுடன், அனைத்து ஐஐஎம்-களின் இணையதளங்களில் தர வரிசை பட்டியல் வெளியிடபடும். அதற்கேற்ப மாணவர்கள் அழைக்கப்படுவார்கள், எழுத்து தேர்வு (Written Ability Test), குழு விவாத திறமை (Group Discussion), நேர்முக தேர்வு (Personal Interviews) மூலம் மாணவர்கள் குறிப்பிட்ட ஐஐஎம் - களில் சேர்க்க படுவார்கள். CAT 2019 மதிப்பெண்ணுக்கான validity ஓர் ஆண்டு மட்டுமே.
இந்த தேர்வை பற்றி விபரங்கள் https://iimcat.ac.inஇணையதளத்தில் உள்ளது, மேலும் விபரங்கள் தேவைபட்டால் கமென்டில் கேளுங்கள்.
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Tuesday, July 23, 2019

மத்திய /மாநில அரசு பணி

நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services
21. IIOFS  -   Indian Ordinance Factory Service
22. IDSE  -  Indian defence engineering services
23.  IES  - Indian Economics Services
24. ISS  - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service
26. IREES -  indian railway elec engg service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.
இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.

*இந்த பதவிகளில் எல்லாம் வடநாட்டு காரர்களும் கேரளா காரர்களும் ஆக்கிரமித்து கொள்கின்றனர்.*

இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.
நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம்,
*விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.*
இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.
*💙இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, June 29, 2019

www.bse.ap.gov.in

நல்ல செய்தி!
அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், மத்திய அரசு நடத்தும் என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் 12000 / -, 9,10,11,12 ஆம் வகுப்பு (9 ஆம் வகுப்பு முதல் இடைநிலை வரை) அதாவது 4000 "48000 / - வரை கிடைக்கும்.
  விண்ணப்பிக்க கடைசி நாள்: -26-09-2019,
  தேர்வு தேதி: - 04-11-2019
  வலைத்தளம் www.bse.ap.gov.in

  உங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்தச் செய்தியைக் கற்றுக் கொடுத்து ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்.

Wednesday, June 19, 2019

விரும்பியதை படி !

உனக்கு விரும்பியதை படி !
                      -  ஆக்கம் : அபூ ஸலாம், காயல்பட்டினம் மாணவரணி

பள்ளிக்கூட வாழ்க்கை முடிந்து கல்லூரியை தெரிவு செய்ய கூடிய கட்டத்தில் பல மாணவர்கள் யோசிக்கக்கூடிய கால கட்டம் இது.  பன் முனைகளிலிருந்தும் ஆலோசனைகள், அறிவுரைகள் வந்த வண்ணம் இருக்கும்.

எதை தேர்ந்தெடுத்துப் படிப்பது ?

பெற்றோர் சொல்வதையா ?

நண்பர்கள் சொல்வதையா ?

உறவினர்கள் சொல்வதையா ?

ஆசிரியர்கள் சொல்வதையா ?

என யாரை திருப்திக்கொள்ள வைப்பது என மாணவர்கள் சிந்துத்துக் கொண்டிருப்பீர்கள்.

ஆனால், உண்மையில் இவர்கள் யாரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அறிவுரை வழங்கிய பலர் ஆறு மாதத்தில் அறியாதவர்களாக மாறிவிடுவார்கள்.

நாம் ஒன்றை தெரிவு செய்து படிக்கும் போது பல விஷயங்களையும் அலசி ஆராய வேண்டும்.

ஏனென்றால் நாம் படிக்கும் இந்த படிப்பு தான் இறுதி வரை நமது வாழ்க்கை பயணத்தில் உறுதுணையாக இருக்கப் போகிறது.

மற்றவர்கள் சொல்லை கேட்டு ஒன்றை படிப்பதை விட, நமக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது ? அந்த துறை மார்க்க வரம்புக்கு உட்பட்ட எந்த துறையாக இருந்தாலும் அதை நாம் தெரிவு செய்யலாம்.

ஆனாலும், அதன் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். அதன் பிறகு தெரிவு செய்வதே சிறந்ததாக இருக்கும்.

ஒரு துறையை தேர்ந்தெடுக்கும் முன் அந்த துறையை பற்றியான விவரங்களை நாம் முழுமையாக தெரிந்து வைத்துகொள்வது அவசியம்.

ஒரு துறையில் நுழையும்  முன் தொலைநோக்கு பார்வை மிக அவசியம்.

எதிர்காலத்தில் எந்த துறைக்கு ஆட்கள் தேவை என்பதை உணர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

மலிந்து போன துறைகளை தேர்ந்தெடுத்துப் படித்தால் அதற்கு வேலை கிடைப்பது மிகக் கடினம்.

உதாரணமாக, பிளாஸ்டிக் இந்த பூமிக்கு கேடு என்பதால் உலகம் முழுவதும் அதன் பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ள படுகிறது. எனவே, நாம் துறையை சார்ந்த படிப்புகள் படிக்கும் போது எதிர்காலத்தில் வேலை என்பது கேள்விக்குரியாகிவிடும்.

அதனால், பிளாஸ்டிக் தொழில்நுட்பத்திற்கு மாற்று என்ன என்பதை கண்டறிந்து இயற்கைக்கு உகந்த தொழில்நுட்பத்தை கற்கும் போது வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

அன்புள்ள மாணவ, மாணவிகள் தங்களது துறையை பல முறை யோசித்து அந்த துறையில் தடம் பதித்த பலரை சந்தித்து ஆலசனைகளை பெற்ற பின்பே தேர்ந்தெடுப்பது நல்லது.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் சாதிக்க வாழ்த்துகிறோம் !

நன்றி: உணர்வு

Friday, March 29, 2019

B.A. டிபென்ஸ்

தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து *Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...*
சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், *ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.*
அக்ரி பாடம் பயில விரும்புபவர்கள்  திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும். *ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....*
திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், *இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...*

பகிருங்கள்..

*தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...*

Saturday, March 2, 2019

Land Measurement calculator Live


https://convertlive.com/u/convert/hectares/to/square-feet

Land Measurements calculator

Sunday, February 17, 2019

PPC (Permenant Pictorial Cancellations)

http://www.indianphilately.net/ppc.ht


http://www.indianphilately.net/pbureau.html

Earlier, there were 34 PPCs in Tamil Nadu.

During TANAPEX '17, 3 new PPCs (Lord Ardhanareeswarar Temple, Manapad Light House, Muttom Light House) were released. The Full Set (with Information Sheet) containing the 37 cancellations was sold in the venue. I scanned the Information Sheet and have attached it.

On 3rd Mar '17, the Department of Posts released a PPC of *Vellore Fort*.

To commemorate the consecration event of the 112-foot-tall *Adiyogi, the Source of Yoga*, the Department of Posts introduced a PPC at Ishana Vihar Post Office situated in Isha Yoga Centre on 24th Feb '17.

On 29th Sep '17, PPC of *Holy Rosary Shrine at Karumathampatti* was released.

Now, the total PPCs in Tamil Nadu is *40*.








Friday, February 8, 2019

Postcrossing

https://www.thepencompany.com/blog/letter-writing/4-reasons-you-will-love-postcrossing/

https://kottke.org/12/01/the-secret-language-of-stamps