Wednesday, July 8, 2020

நீங்கள் ஆடிட்டர் ஆக வேண்டுமா?

6 கல்வி முறைகள்

உலக அளவில் சிறந்து விளங்கும் 6 கல்வி முறைகள் இவைதான்!!! 
6 best Education System in the world

பண்டையக் காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் நம் தமிழ் அறிஞர்கள் பலரும் கல்வியைத் தான் தலைசிறந்த செல்வமாகக் கருதுகின்றனர். மனிதனின் அறிவியல் மற்றும் சமூகம் சார்ந்த ஆற்றலுக்கு அடிப்படையாக இருப்பது கல்வி தான் என்று வலியுறுத்தி சொல்லியும் இருக்கின்றனர். கல்வியின் முதன்மையான நோக்கம் நாம் கற்ற அறிவை மற்றவருக்கு எடுத்துரைப்பது தான். அறிவை போதிக்கும் போது நாம் ஆசானாக மாறுகிறோம். ஆசானாக இருப்பதற்கு முதலில் நாம் கல்வியைப் பயில வேண்டும். இதனால் தான் ஆங்கிலத்தில் “லேர்னிங் இஸ் கண்டினியூஸ் ப்ராசஸ்” என்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி முறையானது பணத்தைக் கொடுத்து அறிவை வாங்குவதாக இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கல்வி முறையானது எப்படி இருக்கிறது தெரியுமா? இந்த பதிவில் உலக அளவில் தலை சிறந்து விளங்கும் கல்வி முறை எது? எதனால் உலக மக்களால் அந்த கல்வி முறை அப்படி கருதப்படுகிறது? என்றும் பார்க்கலாம் வாங்க.

#1. நியூஜிலாந்து-New Zealand, இங்கே ஐந்து வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்களுக்கு செல்கின்றனர். உலக அளவில் தலை சிறந்த ஆன்லைன் எஜுகேஷன் சிஸ்டம் இங்கேதான் இருக்கிறது. சராசரியாக இருபத்தி ஐந்து குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்பதை கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு மாணவருக்கு நியூசிலாந்து அரசாங்கம் 12000 டாலரை செலவு செய்கிறது. இங்கே வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை வெறும் நான்கு சதவிகிதம்தானாம்.

#2. டென்மார்க்-DenMark, இங்கே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கண்டிப்பாக பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஒரு சட்டமே இருக்கிறதாம். சரியாக 2008 ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு தங்களது கல்வி முறையை முற்றிலுமாக மாற்றி கொண்டது டென்மார்க் அரசாங்கம். இங்கே ஒரு ஆசிரியரின் சம்பளமும் மருத்துவரின் சம்பளமும் ஒரே அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இங்கே கல்வி இலவசமாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

#3. சுவிட்ஜர்லாந்து-Switzerland, இந்த நாட்டில் ஒரு மாணவருக்கு 16000 டாலர்களை அந்த மாணவனின் கல்விக்காக அரசாங்கம் செலவிடுகிறது. இங்கே தொண்ணூறு சதவிகிதம் மக்கள் அவர்களது மேல் படிப்பை முடித்தவர்களாக இருக்கின்றனர். இங்கே படிக்கும் நூறு சதவிகித மாணவர்களுக்கு படித்தவுடன் வேலை கிடைக்கிறது. வெளிநாட்டிற்குச் சென்று படிக்க விரும்பும் ஒரு மாணவரின் படிப்பு செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறதாம்.

#4. நெதர்லாந்து-Netherland, மற்ற நாடுகளில் இருக்கும் கல்வி முறையை விட இங்கே இருக்கும் கல்வி முறையானது சற்றே மாறுபட்டு இருக்கிறது. இங்கே field education system பின்பற்றப்படுகிறது. இங்கே இருக்கும் எல்லா பள்ளிக் கூடங்களும் அரசாங்கப் பள்ளிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஒரு ஆசிரியருக்கு 7000 டாலர் சம்பளமாக இருக்கிறது. அரசாங்கத்தின் இலவசக் கல்வியைப் பயிலும் மாணவர் தனது 12 வது வயதில் மேலே என்ன படிக்கலாம்? எந்த துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சுயமாக முடிவு செய்ய முடியும்.

#5. சிங்கை-Singapore, இங்கே மொழியைத் தாண்டி கணிதத்திற்கும், அறிவியலிற்கும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நாட்டின் கல்வி முறையை பல நாடுகள் பின்பற்றுகின்றனர். அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 23 சதவிகிதம் மாணவர்களின் கல்விக்காக செலவிடப்படுகிறது. இங்கே ஒரு குழந்தை ஆறு வயதில்தான் பள்ளிக்குச் செல்கிறது. பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வியும், ஏதாவது ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

#6. ஃபின்லாந்து-Finland, இது ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ஆனால் இவர்களது கல்வி முறை உலக அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இங்கே ஒரு ஆசிரியரை அதிக அளவில் மதிக்கின்றனர். இங்கே மாணவர்களுக்கு ஆசிரியராக ஆவது தான் கனவாக இருக்கிறதாம். இந்த நாட்டில் ஏழு வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். 16 வயது வரை அவர்களுக்கு தேர்வுகளே கிடையாது.  

 – இந்த ஆறு கல்வி முறைகளும் தான் உலக அளவில் சிறந்த கல்வி முறைகளாக கருதப்படுகின்றது.

நன்றி: Maybemaynotbe


ஜாம் தேர்வு - ஓர் பார்வை

M.Sc admission/Premium institutes/JAM Exam

ஜாம் தேர்வு - ஓர் பார்வை

ஜாம் (JAM) எனப்படும் முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த தேர்வு (Joint Admissions test for Master's) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 2004ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இத்தேர்வு எம்.எஸ்சி, முனைவர் பட்ட ஆய்வுடன் இணைந்த எம்.எஸ்சி போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது.

நாட்டிலுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக ஜாம் நடத்தப்படுகிறது.

படிப்புகள்: 

1. எம்.எஸ்சி.,(2 ஆண்டுகள்), M.Sc.

2. இணைந்த எம்.எஸ்சி.-பிஎச்.டி., இரட்டை பட்டம், (Joined M.Sc+Ph.D Dual Degree)

3. எம்.எஸ்சி.-எம்.எஸ்.(ஆராய்ச்சி) / பிஎச்.டி., (M.Sc+MS(Research)/Ph.D)

கல்வி நிறுவனங்கள்: 

இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி-IITs., 
நேஷனல் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி-NITs, 
இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் இன்ஜினியரிங் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி - IIEST., 
சண்ட் லாங்கோவல் இன்ஸ்டிடியுட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி - SLIET, 
இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் - IISER, 
ஆகிய கல்வி நிறுவனங்களில் JAM தேர்வின் அடிப்படையிலேயே M.Sc., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 

கல்வித் தகுதி: பாடப்பிரிவுற்கு ஏற்ப உரிய படிப்பில், மொழிப்பாடம் உட்பட அனைத்து பாடங்களிலும் ஒட்டுமொத்தமாக 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு முறை: ஆன்லைன் வாயிலாக மட்டுமே தேர்வு நடத்தப்படும்.

ஆன்லைன் பதிவு துவங்கும் நாள்: செப்டம்பர் 2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 2020

தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 2021

2020ஆம் ஆண்டுக்கான ஜாம் தேர்வை ஐஐடி கான்பூர் (IITK) நடத்தியது. இந்த முறை ஆறு பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே ஜாம் தேர்வு நடத்தப்பட்டது.

திருச்சி என்ஐடி-யில் எம்எஸ்சி சேர்க்கை

திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை தேர்வு (ஜாம் - JAM score) மூலம் எம்எஸ்சி (M.Sc.) படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறகிறது.

இதுதொடர்பாக, என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கூறியது:
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழகமானது, இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், இயங்கும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமாகும்.

2014ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடிய இக்கல்லூரியானது தேசிய நிறுவங்களுக்கான தரவரிசைக் கட்டமைப்பில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் மற்றும் ஒட்டுமொத்த பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் 10ஆவது இடம் வகிக்கிறது.
சிறந்த ஆய்வு நிறுவனமாக இருப்பதுடன் பல முன்னணி பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் தொழில்நுட்ப கல்வியை வழங்கி வருகிறது என்றார். 

சகல வசதிகளுடன் எழில்மிகு வளாகத்தில் 10 இளநிலை, 28 முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக கணிதவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி பயன்பியல் துறைகள் இரண்டாண்டுகள் படிக்கும் முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது.

முதுநிலைப் பிரிவில் கணிதவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதவியல் ஆகிய பாடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) நடத்தும் தேசியளவிலான ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைத் தேர்வு (ஜாம்) மூலம் நடைபெறுகிறது. 

முதுநிலை கணினி அறிவியலுக்கான ஜாம் தேர்வு கணிதப் புள்ளியியலை சார்ந்து நடைபெறும். 2020-21ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 2020ஆம் ஆண்டு ஜாம் தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டு நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் விண்ணப்பங்கள், மாணவர் சேர்க்கை மற்றும் முதுநிலை அறிவியல் படிப்புகளை வழங்கும் துறைகள் குறித்த விவரங்களுக்கு வலைதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும் என்றார் அவர்.

Related links:

http://www.ccmn.in
https://www.nitt.edu

மருத்துவம் சார்ந்த பொறியாளராகுங்கள்!

மருத்துவம் சார்ந்த பொறியாளராகுங்கள்!  

இன்றைய உலகில் மருத்துவத்துறை மிகவும் அத்தியாவசியமாகிவிட்ட துறைகளில் ஒன்றாகும். புதிய புதிய நோய்களைப்போல புதிய புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. 

மேலும் மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான பல மருத்துவக் கருவிகள் - புதிய தொழில் நுட்பங்களுடன் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன.

மருத்துவக் கருவிகளை வடிவமைக்கவும், அதில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தி மேம்படுத்தவும் கற்றுக் கொடுக்கும் உயிரி மருத்துவ பொறியியல் (பயோ மெடிக்கல் என்ஜீனியரிங்) என்ற நான்கு ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது. இந்தப் படிப்பு என்பது மருத்துவம் மற்றும் பொறியியல் இணைந்து அமைக்கப்பட்டதாகும்.
தமிழகத்தில் குறிப்பிட்ட மிகச் சில கல்லூரிகளிலேயே இந்தப் படிப்பு உள்ளது. கோயம்புத்தூரில் கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல் என்ற நிர்வாகத்தின் கீழ் டாக்டர் என்.ஜி.பி.தொழில்நுட்பக்கல்லூரியில் இந்த  "பயோ மெடிக்கல் என்ஜினீயரிங்' என்ற நான்கு ஆண்டு பட்டப்படிப்பு உள்ளது. 

இந்தப் படிப்பு குறித்து அக்கல்லூரி முதல்வர் கே.பொற்குமரன், துறைத்தலைவர் எஸ்.பிரபாகர் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை: 
"பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களை சிறப்பு பாடங்களாக எடுத்துப் படிப்பவர்கள், அப்பாடங்களில் 60 சதத்திற்கு மேல் எடுத்தவர்கள் இந்தப் படிப்பில் சேரத் தகுதியானவர்கள். இந்தப் படிப்பிற்கு அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை வழங்குகிறது.

பயோ இன்ஸ்ட்ரூமென்டேஷன், பயோ மெட்டீரியல், பயோ மெக்கானிக்ஸ், செல்லுலார் என்ஜினீயரிங், டிஸ்யூ என்ஜினீயரிங், ஹியுமேன் பிசியாலஜி அண்டு அனாடமி, மைக்ரோ பயாலஜி அண்டு பேதாலஜி, பயோ கண்ட்ரோல் சிஸ்டம்ஸ், பயோ டெலிமெட்ரி, பயோ விர்சுவல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஜெனட்டிக் என்ஜினீயரிங், கிளிக்கல் என்ஜினீயரிங், ஆர்த்தோபேடிக், பயோ என்ஜினீயரிங் நேவிகேசன் சிஸ்டம் ஆகிய பாடங்கள் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் உள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், கணிப்பொறி அறிவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகியவை குறித்த பாடங்களோடு  அடிப்படை பொறியியல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 

இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மனித உடலியல், உடற்கூறியல், உயிர் வேதியியல், நோயியல் ஆகியவை குறித்த பாடங்களுடன் மருத்துவமனைகளில் உள்ள ரத்த பரிசோதனை மையம், ஸ்கேன் மையம் ஆகியவற்றில் உள்ள இயந்திரங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் நேரடியாகப் பாடம் நடத்தப்படுகிறது.

மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயோ மெட்டிரியல்,  மின்ணனு நுண் செயலிகள் குறித்த பாடங்களோடு, மருத்துவமனையில் உள்ள இ.சி.ஜி.கருவி, இருதயம் பரிசோதிக்கும் கருவியில் உள்ள பாகங்கள், அதன் செயல்பாடுகள், அதன் தன்மைகள், அவற்றைப்  பழுது நீக்குதல் உள்ளிட்டவை  குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மனித உறுப்புகளில்  ஏதாவது ஒன்றில் அதிக ஆர்வம் கொண்ட மாணவர்களைத் தேர்வு செய்து, அந்த உறுப்புகளுக்கு உரிய மருத்துவக்கருவிகள் தயாரிக்கும் பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. 

பின்னர் தற்போது உள்ள மருத்துவக்கருவியில் எப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கும் என மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் அல்லது மருத்துவத்துறைக்கு ஏதாவது ஒரு புதிய கருவியை வடிவமைத்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை நடைபெறும் போது கருவிகளில் கோளாறு ஏற்பட்டால் அதனைச் சரி செய்ய பொறியாளர்களால்தான் இயலும். எனவே பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படிப்பு மிகவும் முக்கியத்துவம் உள்ளதாகும்.

மனித உடலில் உறுப்புமாற்றம், உறுப்புக்களைச் சீர்படுத்துதல் போன்றவற்றுக்கும் இந்தப் படிப்பு பெரும் உதவியாக உள்ளது. முன்பு பல மருத்துவ உபகரணங்களும், கருவிகளும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. இன்று இந்தியாவில் பல நிறுவனங்கள் மருத்துவக்கருவி தயாரிக்கும் ஆலைகளைத் தொடங்கியுள்ளன. எனவே வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.  எங்கள் கல்லூரி அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடோ அட்லாண்டிக் பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்தத் துறையில் மேற்படிப்பை அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம்.

எங்கள் கல்லூரியில் படித்தவர்களில் பலர் உயர்கல்வி கற்க அங்கே செல்கிறார்கள். பலர் சுய தொழில் செய்து வருகிறார்கள். எனவே இதைப் படிப்பவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு நிச்சயம் உண்டு'' என்றார்கள் அவர்கள்.

நன்றி: DInamani

சிலிக்கா பாக்கெட்



புதுசா ஏதாவது வாங்கினா இந்த #சிலிக்காபாக்கெட் உள்ளே இருக்கும் ஏன் என்று தெரியுமா?????
 தெரியாமகூட கீழ போட்றாதீங்க…!!!!

#விழிப்புணர்வுபதிவு..

கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும். அதை சிறுவயதில் நாம் எடுக்கும்பாழுது, விஷம் அதைத் தொடக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லியிருப்பார்கள்.

புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்கான நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அது நம்முடைய வீட்டில் வேறு என்னென்ன மாதிரயான விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு… இனியாவது தெரிஞ்சிக்கோங்க… அதை தூக்கி கீழே வீசிடாதங்க…

◆சமையலறையில்..

பொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும். ஆம்.

நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும்.

◆மொபைல்_நீரில்விழுந்தால்:

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான். அதுதாங்க… செல்போனை தண்ணிக்குள்ள போட்றது.

நாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான புானை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் ஜார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது.

◆ஆவணங்கள்:

வீட்டில் இருக்கின்ற முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள் போன்றவை வீணாகிப் போய்விடாமல் செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க வேண்டுமென்றால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பெட்டியிலோ பையிலோ போட்டு வைத்திருங்கள்.

◆துணிகள் காயவைக்க:

நாம் துவைத்து முடித்த ஈரமான துண்டோ அல்லது மற்ற துணி வகைகளோ உடனடியாக உலர்த்த வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த சிலிக்கான் ஜெல் பெரிதும் உதவிசெய்யும்.

ஒரு பக்கெட்டில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு துணிகளைப் போட்டு அதில் ஊறவைத்தால் போதும் துணிகள் உடனடியாக காய்ந்துவிடும்.

◆கத்தி கூர்மையாக:

பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.

◆துர்நாற்றம்:

எப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் புதுசுபோலவே பளபளக்கும்.

◆வளர்ப்பு பிராணிகள்:

நம்முடைய வீடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு பிஸ்கட்டுகள் மற்றும் வேறு சில உணவுகளை கவர்களில் வைத்திருப்போம். அவற்றை நம்முடைய உணவைப் போல சுகாதாரமாக வைத்திருக்க முயந்சி செய்வதில்லை. அதனால் வேகமாகக் கெட்டுப்போய்விடும். அதை தவிர்க்க வேண்டுமென்றால் அந்த உணவு கவர்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வையுங்கள்.

◆நகைகள்:

பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும்.

◆அலங்காரப் பொருட்கள்:

வீட்டில் சில முக்கிய தினங்களன்று மட்டும் தான் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றைத் தொங்கவிடுவோம். முடிந்ததும் அந்த பொருட்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம். அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறங்கள் மங்கியிருக்கும். இதுவே சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசுபோலவே இருக்கும்.

◆ஜன்னல்கள்:

நம்முடைய வீட்டின் ஜன்னல்கள், வாயிற்படி போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை கட்டி வைத்திருந்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் அடையாமல் காக்க முடியும்.

◆ஷூ துர்நாற்றம்:

பொதுவாக எல்லா வீடுகளிலும் நாம் எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் துர்நாற்றங்கள் ஏற்பட்டு விடுகிறது. அப்படி உண்டாகாமல் இருக்க செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் அந்த துர்நாற்றங்களில் இருந்து விடுபட முடியும

#குறிப்பு:

இவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பயன்படும். ஆனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும்.

Note: இந்த பாக்கெட்டுகளை ஒரு போதும் ஓபன் செய்து உபயோகித்துவிடாதீர்கள். கவனம்..

Friday, April 24, 2020

மத்திய பல்கலை கழகம்



மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென   "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன. 

இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம்,  பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி,  காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

இதையெல்லாம் ஏன் இப்போது சொல்ல வருகிறேன் என்று கேட்டால்...

மீண்டும் ஒரு முறை இந்தப் பதிவின் முதல் பாராவை படியுங்கள். 

பொதுவாக இந்த  பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை.

 தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கானஅட்மிஷன் தருகிறது. Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS.  இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும் எம்பிஏ கோர்ஸுகளும் பிஎச்டி கோர்ஸுகளும் தனித்தனியே நடத்தப்படுகின்றன. 

இங்கே படிக்கும் மாணவர்களில் பேர் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.

ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் வருகிறது. இது போக ஆண்கள் பெண்களுக்கு  தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.

ஆனால் இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குறிய விசயம்.

சரி. 
எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...

18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது.  cucetexam. Central University common entrance exam. 

+2 முடித்து அறுபது  சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு  கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.

இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

www.cucetexam.nic.in 

மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன. எந்தெந்த பல்கலை கழகங்களில் என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம்.  பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.

Wednesday, February 12, 2020

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா?

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா?
சட்ட போராளிகளிடம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான ஆயுதம்....
சென்னை மாநகரில் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை அல்லது நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம்  அமைந்து  உள்ளது.  இந்தத் துறையானது  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
தமிழ்நாடு கிராமங்களின் வரைபடங்கள்
தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து கிராமங்களுக்குரிய கிராம வரைபடம் இங்கு விலைக்கு  கிடைக்கிறது. உங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் வரைபடங்களை உங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே வாங்கலாம்! என்றாலும். அங்கு கிடைக்காத வரைபடங்கள்  இங்கு கட்டாயம் கிடைக்கும்.
இந்த கிராம வரைபடங்கள் சுமார் 1970 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை ரீசர்வே செய்யப்பட்ட வரைபடங்களாகும். எனவே முழு விபரங்களையும் உள்ளடக்கி இருக்கும்.

இந்த வரைபடத்தின் மூலமாக,  நமது தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான  குளம்,  குட்டை, கால்வாய், ஏரி மற்றும் ஆறு போன்ற நீர் நிலைகள்   அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை நாம் எளிதாக  கண்டறியலாம். 
மேலும், இந்த கிராம வரைபடங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நீர் நிலைகள் மற்றும்   அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விஸ்தீரனத்தையும் தற்போது ( நடப்பு ஆண்டில் ) உள்ள “அ” பதிவேடுகளில் உள்ள விஸ்தீரனத்தையும் ஒப்பிட்டு, எங்கெங்கு என்னென்ன ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக கண்டறிய முடியும்.
உங்களால் நேரில் சென்று வாங்க முடிந்தால், தேவைப்பட்ட வரைபடத்தை அரைமணி நேரத்திற்குள் வாங்கிவிட முடியும்.

https://www.facebook.com/601997245/posts/10157996908937246/

Monday, January 20, 2020

உங்கள்_நிலம்_மற்றவர்களால்_ஆக்கிரமிக்கப்பட்டால்

*#உங்கள்_நிலம்_மற்றவர்களால்_ஆக்கிரமிக்கப்பட்டால்…*
*#முக்கியமாக_செய்ய_வேண்டிய_சில_காரியங்கள்*

உங்களிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் கூர்மையாக சரிபார்த்து அதில் ஏதாவது குறை இருந்தால், வேறு ஏதாவது கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், உடனடியாக அதனை நேர் செய்ய செயலாற்ற வேண்டும். 
அதன் மூலம் எதிரி தரப்பு ஆவணங்கள் பலமுள்ளவையாக்கப்படுவது தவிர்க்கப்படும்.

இடம் சமந்தமாக, உள்ளாட்சி வருவாய், மின்சாரம், குடிநீர், சாலை, அங்கீகாரம் போன்ற துறைகளில் எதிரி எதனையும் செயல்படுத்த கூடாது என்று ஆட்சேபனை கடிதம், பதிவுதபாலில் அனுப்பபட வேண்டும்.

எதிர் தரப்பினரிடையே இருக்கும் , அல்லது அவர்கள் கூறும் அனைத்து ஆவணங்களையும் , சார்பதிவகம், இணையதளம், சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் போன்ற இடங்களுக்கு சென்று அந்த ஆவணங்களின் நகல்களை கைப்பற்றுதல் வேண்டும்.

எதிர் தரப்பினர் ஆவணங்களை கூர்ந்து படித்து, எங்கு அவர்கள் ஆவணங்களை திருத்தியோ (அ) நேர் செய்தோ, உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

எதிர் மனுதாரர் நம்முடைய நிலத்தை ஆக்கிரமிக்க காரணமான MOTIVE – யை கண்டுப்பிடிக்க வேண்டும். 

நாம் பலவீனமாக ( கல்வி, அதிகாரம், உறவினர் இல்லாமல் ) இருப்பதால் அதனை பயன்படுத்தி கொள்ளலாம். என்று ஆக்கிரமிக்கிறார்களா! அல்லது இடத்தை விற்பனை செய்ய (அ) கொஞ்சம் இடம் அவர்களுக்கு வழியாக தேவைப்பட ( DEMAND அடிப்படையில் ) ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்களா! அல்லது எதிர் தரப்பு நில மாபியா கும்பல் , அதாவது தொழில்முறை ஆக்கிரமிப்பாளர்களா! என்று கவனிக்க வேண்டும்.

மேற்படி பலவீனங்களை பயன்படுத்தி கொள்பவர், என்றால் நேரிடையாகவோ, தனியாகவோ, (அ) குடும்பத்துடனோ சென்று பேச்சுவார்த்தை நடத்தலாம், (அ) உங்கள் பகுதியில் நன்மதிப்பு உள்ளவர்களை அழைத்து செல்லலாம். இதற்கு உங்களுக்கு கொஞ்சம் ஆளுமையும், எதிர்கொள்ளும் இணக்கமும், கண்ணியமாக பேசும் கலையும் தெரிந்து இருக்க வேண்டும்.

DEMAND அடிப்படையில் ( MOTIVE இருந்தால் ) இடத்தை கொடுக்க விருப்பமிருந்தால் நல்ல விலைக்கு கொடுக்கலாம். கொடுக்க விரும்பும் இல்லை என்றால் இந்த பேச்சுவார்த்தையில் உங்களை நாடுபவர்கள் நில தாரகர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள். அல்லது அந்த பகுதியின் அரசியல் , உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்களாக இருப்பார்கள் நிச்சயம் அவர்களிடம் பேச்சுவார்த்தையை தொடரக்கூடாது. நாசுக்காக அவர்களை முதலில் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உங்களுடைய பலவீனங்களை எதிர் தரப்பினருக்கு கொண்டு சேர்க்கும் காரியத்தை செய்வர்.

இடத்தை அபகரிக்கும் நோக்கமும், நிலமாபியாகவும் அவர்கள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் காவல்துறைக்கு விஷயத்தை கொண்டு செல்ல வேண்டும்.

எதிர் தரப்பினர் போலி ஆவணங்கள், பட்டாக்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரியவந்தால், தகவல்பெறும் உரிமை சட்டம் 2015ன் கீழ் மனு செய்து அவர்களை அம்பலப்படுத்தும் வேலைகளை செய்ய வேண்டும்.

நில ஆக்கிரமிப்பாளர்கள், பெரிய பிரமுகர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை விட பெரிய அதிகாரிகளை, அமைச்சர்களை சந்தித்து முறையிட வேண்டும். ஊடகங்களில் விஷயத்தை செய்தியாக்க வேண்டும்.

நில மாபியாக்களாக இருந்தால், எழுதப்படுகிற மனுக்கள் நமக்கு புரியும் படியும், எதிர்தரப்பினர் சட்ட மீறல்களை வரிசைப் படுத்தி நமக்கு துணையாக இருக்கும் ஆவணங்களை இணைத்து மனு தாயார் செய்ய வேண்டும்.

மேற்படி மனு, அந்த பகுதி காவல் துறை ஆய்வாளர் தேவைப்பட்டால் அந்த பகுதி Anti Land Grabbing Cell, மாவட்ட கண்காணிப்பாளரிடமும் புகார் கொடுத்து ஏற்பு சீட்டு பெறுதல் வேண்டும்.

காவல் துறை எதிர் தரப்பிற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் இதனை கிரிமினல் வழக்காக விசாரிக்க மறுத்தால், சிவில் Dispute என்றே COMMUNITY SERVICE REGISTER “ C.S.R போட்டாவது எதிர் தரப்பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த சொல்லலாம்.

காவல்துறை கிரிமினல் வழக்காக விசாரிக்க மனு செய்யும் போதே இதுபோல் வழக்குகளுக்கு ஏற்கனவே இருக்கின்ற JUDGEMENT – யை மனுவுடன் இணைத்தால் நிச்சயம் கிரிமினல் வழக்காக எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

காவல் துறை கிரிமினல் வழக்காக பதிய மறுத்தால், நேரிடையாகவே நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதியக்கோரி வழக்கு தொடுக்கலாம்.

மேற்சொன்ன எல்லா வழிமுறையும் செய்து நிலத்தை மீட்க முடியவில்லை என்றால், நீதி மன்றத்தில் சிவில் வழக்கு போடலாம். அதன் மூலம் தீர்வுகளை பெற்று கொள்ளலாம்.

*#உங்கள்_நிலம்_எந்தெந்த_காரணங்களால்_ஆக்கிரமிக்கப்படுகின்றன?*

நிலத்தை விட்டு நீங்கள் வெகுதூரம் இருக்கும் பொழுது, அதாவது வெளியூர், வெளி மாநிலம், வெளி நாட்டில் வாசிக்கும் பொழுது.

நிலத்திற்கு தேவையான ஆவணங்களை ஒழுங்காக பாரமரிக்கமால் இருக்கும் பொழுது.
நிலங்களை அடிக்கடி பார்வையிடாமல் இருக்கும் பொழுது.

பத்திரங்களை தொலைத்தவர்களுடைய இடங்கள்.

ஒரே இடத்திற்கு டபுள் டாகுமென்ட் இருப்பவர்களுடைய இடங்கள்.

தவறான நபர்கள் இடங்களை பாரமரிக்க நியமிப்பதால்.

இடத்தில் வாடகைக்கு தரமற்றவர்களை குடிவைக்கும் பொழுது.

இடத்தின் விலை அதிகமாய் விட்ட பிறகு உங்களுடைய பத்திரத்தின் நகல்கள் ஊரெல்லாம் சுத்திவரும் போது.

எல்லைகள் சரியாக அளக்காமல் விட்ட நிலங்கள்.

கூட்டு பட்டாவில் இருக்கும் நிலங்கள், நீளம், அகலம், குறிப்பிடாமல் இருக்கும் கிரைய பத்திரங்கள் உள்ள நிலங்கள்.

காணிகல், “L” கட், பெண்சிங் போன்றவை செய்யப்படாமல் இருக்கும் நிலங்கள்.

Static Asset, களை Dynamic Asset ஆக மாற்றாமல் இருப்பது போன்ற காரணகளால் உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபடுகின்றன.

*#உங்கள்_நிலத்தை_பாதுகாக்க_நீங்கள்_செய்ய_வேண்டியது*

நிலத்தை வாங்கியதோடு நிலத்தினை சுற்றி சுவர் கட்டுங்கள், அல்லது வேலி அமையுங்கள்.

உங்கள் நிலத்தினை அடிக்கடி சென்று பாருங்கள்.
முக்கியமாக உங்களுக்கு தெரியாத இடங்களில் இடத்தை வாங்கதீர், நிலத்தினை பராமரிப்பு செய்யுங்கள்..
நீங்கள் இல்லாத நேரங்களில் வேறு எந்த நபர்களும் வந்து செல்கிறார்களா என்று கவனியுங்கள்..

Saturday, December 14, 2019

பாஸ்போர்ட்டில் திருத்தங்கள் செய்வது,

பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி என்பதை கடந்த கட்டுரையில் பார்த்தோம் (பார்க்க https://www.facebook.com/siddique.mtech/posts/1147988965402382/) 

இப்போது பாஸ்போர்ட்டில் திருத்தங்கள் செய்வது, புதுபித்தல் செய்வது, கிழிந்து போன, தொலைந்து போன பாஸ்போர்ட்டிற்க்கு பதிலாக புதிய பாஸ்போர்ட் பெறுவது எப்படி என்பதை பார்ப்போம் 

*** பெயர் திருத்தம் (Name Change) ***

கீழ் காணும் ஆவணங்களை கொண்டு, ஆன்லைனில் விண்ணப்பித்து பெயர் மாற்றம் செய்யப்பட்ட புது பாஸ்போர்ட்டை பெறலாம், ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பது மேலே குறிபிட்ட கட்டுரையில் உள்ளது

1. உங்களின் புதிய பெயர் உள்ள இரண்டு ஆவணம் (ஆதார் கார்ட், ஓட்டர் ஐடி, பள்ளி சான்றிதழ்கள்  என ஏதேனும் இரண்டு ஆவணங்கள்) 
2. பெயர் மாற்றம் சம்மந்தமாக பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட விளம்பரம் (குறைந்தது இரண்டு விளம்பரம்).  அல்லது அரசு கெஜெட்டில் பெயர் மாற்றம் சம்மந்தமான அறிவிப்பின் நகல் 

*** தாய் , தந்தை பெயர் மாற்றம் (Father, Mother name change) ***

கீழ் காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காண்பித்து சரி செய்து கொள்ளலாம்

1. சரியான பெயர் உள்ள தந்தை , தாயின் பாஸ்போர்ட் 
2. தாய் , தந்தையின் சரியான பெயர் உள்ள ஆதார் கார்ட், ஓட்டர் ஐடி, பள்ளி சான்றிதழ்கள் போன்ற ஏதேனும் ஒரு அரசு ஆவணம் அல்லது வீட்டு பத்திரம்
3. பெற்றோர் இறந்து விட்டார்கள் என்றால், அவர்கள் உயிருடன் இருக்கும் போது எடுக்கப்பட்ட மேற் சொன்ன ஆவணங்கள்

*** கணவன், மனைவியின் பெயர் சேர்ப்பு (Adding Spouse name) ***

திருமணத்தின் போது கணவன், மனைவியின்  பெயரை பாஸ்போர்ட்டில் சேர்க்க எந்த ஆவணமும் தேவை இல்லை , நேரடியாக, கணவன், மனைவி பெயர்களை பாஸ்போர்ட்டில் சேர்த்து புது பாஸ்போர்ட் பெறலாம்.

*** கணவன், மனைவியின் பெயர் திருத்தம் (Spouse name Change)***

விவாகரத்து ஏற்பட்டதால், மருமணம் செய்து கொண்டவர்கள் தங்களின் பாஸ்போர்ட்டில் கணவன் அல்லது  மனைவியின் பெயரை மாற்ற விவாகரத்து சான்றிதழ் (Divorce Certificate) சமர்பிக்க வேண்டும்

கணவன் அல்லது மனைவி இறந்து விட்டதினால், மருமணம் செய்து கொண்டவர்கள் கணவன் அல்லது  மனைவியின் இறப்பு சான்றிதழ் (Death Certificate) சமர்பிக்க வேண்டும்.

*** பிறந்த தேதி மாற்றம் (Date of birth Change) ***

முதல் பாஸ்போர்ட் பெற்ற 5 வருடத்திற்க்குள் தான் பிறந்த தேதி, மாதம், வருடம் மாற்ற முடியும். ஆதார் கார்ட், ஓட்டர் ஐடி போன்ற  ஏதேனும் ஒரு அரசு ஆவணம் சமர்பித்தால் போதும்

பாஸ்போர்ட் எடுத்து 5 வருடம் கடந்து விட்டால் பிறந்த தேதி, மாதம், வருடம் மாற்ற முடியாது

*** முகவரி மாற்றம் (Address Change)***

தற்காலிகமாக உள்ள முகவரியில் ஏதேனும் ஒரு அரசு ஆவணம் எடுகுங்கள்,
கேஸ் பில், கரென்ட் பில், அல்லது வாடகை ஒப்பந்தம் மூலமாக ஓட்டர் ஐடி, அல்லது ஆதாரில் முகவரி மாற்றம் செய்யலாம்

புது முகவரி உள்ள ஆதார் கார்ட், ஓட்டர் ஐடி போன்ற  ஏதேனும் ஒரு அரசு ஆவணம் சமர்பித்து பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியை மாற்றி கொள்ளலாம்

*** பிறந்த இடத்தை மாற்ற (Place of Birth Change) ***

அதே மாநிலத்தில் வேறு பகுதியில் பிறந்ததாக மாற்ற வேண்டும் என்றால் கீழ்காணும் ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட்டில் பிறந்த இடத்தை (Place of Birth) மாற்றலாம்

1. பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனை சான்றிதழ் (Birth Certificate or any proof)
2. மாற்றத்திற்க்கான நீதி மன்ற ஆணை (வழக்கறிஞர்களை கொண்டு முயற்சிக்கவும்) – civil court order 
3. மாற்றத்திற்கான அஃபிடவிட் (Affidavit for “Reason of Chanage”)

வேறு  மாநிலத்தில் அல்லது வேறு நாட்டில் பிறந்ததாக மாற்ற வேண்டும் என்றால் கூடுதலாக மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு 
அமைச்சகத்தில் (MHA) இருந்து கூடுதல் சான்றிதழ் பெற வேண்டும், இது மிக மிக கடினம்.

*** பாஸ்போர்ட் தொலைந்து விட்டால், புது பாஸ்போர்ட் பெற***

கீழ்காணும் ஆவணங்களை சமர்பித்து புது பாஸ்போர்ட் பெறலாம்.
1. தொலைந்தற்க்கான காவல் நிலைய புகார் (Police Report)
2. படிவம் Annexure F , இது ஒன்றும் இல்லை, பிரின்ட் எடுத்து கையெழுத்திட வேண்டும்
3. பிறந்த தேதிக்கான சான்று (Proof of birth date)
4. முகவரிக்கான சான்று (Proof of address)
5. பழைய பாஸ்போர்ட்டின் நகல் (photo copy of old passport)

*** பாஸ்போர்ட் கிழிந்தாலோ, சேதமடைந்தாலோ புது பாஸ்போர்ட் பெற (Damaged passport)***

பாஸ்போர்ட் எண் (passport number) மட்டும் தெரிந்தால் போதும், மற்ற விபரங்கள் கிழிந்தாலும், அழிந்தாலும் கீழ்காணும் ஆவணங்கள் மூலம் புது பாஸ்போர்ட் பெறலாம்

1. பழைய பாஸ்போர்ட்டின் நகல் (photo copy of old passport)
2. படிவம் Annexure F , இது ஒன்றும் இல்லை, பிரின்ட் எடுத்து கையெழுத்திட வேண்டும்
3. பிறந்த தேதிக்கான சான்று (Proof of birth date)

*** ECR ல் இருந்து Non-ECR க்கு மாற்ற (Change from ERC to Non-ECR) ***

உங்கள் பாஸ்போர்டில் ERC (Emigration check Required) என்று இருந்தால் சில நாடுகளுக்கு செல்ல Emigration Clearance  தேவைபடும். பத்தாம் வகுப்பு தேர்சி பெற்றிருந்தால் உங்களுக்கு Non-ECR  பாஸ்போர்ட் வழங்கப்படும்.  பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சமர்பித்து உங்கள் பாஸ்போர்ட்டை  ECR ல் இருந்து Non-ECR க்கு மாற்றலாம்

*** பாஸ்போர்ட் புதுபிக்க (passport renewal) ***

எந்த மாற்றமும் இல்லாமல் பாஸ்போர்ட் புதுபிக்க பழைய பாஸ்போர்டே  போதும் கூடுதலாக எந்த ஆவணமும் தேவை இல்லை

மேலே குறிபிட்ட தகவலில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, கூடுதல் விபரம் தேவை பட்டாலோ, அல்லது பாஸ்போர்ட் எடுப்பது சம்மந்தமாக வேறு ஏதெனும் தகவல் தேவைபட்டாலோ கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கின்றேன்

ஆக்கம் : S.சித்தீக் M.Tech
https://www.facebook.com/siddique.mtech/posts/1154589384742340/

பாஸ்போர்ட் எடுக்க தேவைபடும்

இந்திய குடியுரிமையை உறுதி செய்ய பிறப்பு சான்றிதழ் (Birth Certificate) மற்றும் பாஸ்போர்ட் (passport) உதவியாக இருக்கும் என்பதை பார்த்தோம். அதில் பாஸ்போர்ட் எடுப்பது மிக எளிது, முதலில் அதன் விபரங்களை பார்ப்போம்

தேவையான ஆவணங்கள் : 
இரண்டு விதமான ஆவணங்கள் பாஸ்போர்ட் எடுக்க தேவைபடும்

1. பிறந்த தேதியை நிருபிக்கும் ஆவணம் (Proof of Date of Birth)
2. தற்போது வசிக்கும் முகவரியை நிருபிக்கும் ஆவணம் (Proof of Address)

I. பிறந்த தேதியை நிருபிக்கும் ஆவணங்கள்:

கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் பிறந்த தேதியை நிருபிக்கும் ஆவணமாக அரசு ஏற்று கொள்ளும்

1. பிறப்பு சான்றிதழ் (Birth Certificate)
2. பள்ளிகளில் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ் (mark sheet) அல்லது மாற்று சான்றிதழ் (TC)

இந்த இரண்டு ஆவணங்களில் ஒன்று கூட உங்களிடம் இல்லை என்றால், கீழ்காணும் ஆவணங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

3. ஆதார் கார்ட்
4. வாக்காளர் அடையாள அட்டை (ஓட்டர் ஐடி)
5. ஓட்டுனர் உரிமம் (Driving License)
6. பான் கார்ட் (PAN Card)

II. முகவரியை நிருபிக்கும்  ஆவணங்கள் :

கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் முகவரியை நிருபிக்கும் ஆவணமாக அரசு ஏற்று கொள்ளும்

1. ஆதார் கார்ட்
2. வாக்காளர் அடையாள அட்டை (ஓட்டர் ஐடி)
3. வங்கி கணக்கு புத்தகம் (Bank passbook)
4. கேஸ் இணைப்பு புத்தகம் (Gas Connection)
5. குடிநீர் வரி ரசீது (Water bill)
6. மின் கட்டண ரசீது (Electricity bill)

குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்க :

1. பெற்றோர்களின் பாஸ்போர்ட் நகல் (Copy of parents passport)
2. குழந்தையின் பிறப்பு சான்றிதழ் (Birth Certificate)
3. ஆதார் கார்ட் (அவசியமில்லை, கேட்டால் கொடுக்கவும், இல்லை என்றாலும் பரவாயில்லை)
4.  படிவம் (Annexure D), இது ஒன்றும் இல்லை, ஆன்லைனில் Annexure D படிவத்தை டவுன்லோடு செய்து, பெயர்கள், முகவரி எழுதி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும்.

கணவன், மனைவி பெயர்கள் பாஸ்போர்டில் இடம் பெற :

திருமண சான்றிதழ் இருந்தால் கொடுங்கள், இல்லை என்றாலும் பரவாயில்லை
புதிய பாஸ்போர்ட் விதிகளின் படி திருமண சான்றிதழ் கட்டாயம் இல்லை
https://mea.gov.in/Images/attach/Announcement_tamil.pdf

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை :

1. நீங்கள் கொடுக்கும் ஆவணங்களில் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் , முகவரி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும், மாறி இருந்தால் பாஸ்போர்ட் விண்ணபிக்கும் முன் அணைத்து ஆவணங்களில் உள்ள விபரங்கள் ஒரே மாதிரி இருக்கும் படி சரி செய்து கொள்ளுங்கள்.

2. நீங்கள் இந்தியாவில் தான் பிறந்துள்ளீர்கள் என்பதை நிருபிக்கும்,  பிறந்த இடம் (Place of Birth) என்ற இடத்தில் நீங்கள் பிறந்த மாவட்டத்தை குறிப்பிடுங்கள், உங்களை ஊரை குறிப்பிட வேண்டாம், உதாரணத்திற்க்கு சென்னை, மதுரை, சிவகங்கை என மாவட்டத்தின் பெயரை குறிப்பிடுங்கள்.

3. பிறந்த தேதிக்கும், முகவரிக்கும் ஒரே ஒரு ஆவணத்தை சான்றாக கொடுக்க முடியாது, அதாவது ஆதார் காட்டை பிறந்த தேதி மற்றும் முகவரிக்கும் சான்றாக கொடுக்க முடியாது. ஆதார் காட்டை முகவரிக்கு சான்றாக பயன்படுத்தினால், பிறந்த தேதிக்கு வேறு ஆவணம் கொடுக்க வேண்டும்

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை :

பாஸ்போர்ட் https://portal2.passportindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

1. https://portal2.passportindia.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் e-mail முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள்
2. பதிவு செய்த user name , password மூலம் பாஸ்போர்ட் இணையதளத்தில்  Log in செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தயாராகுங்கள்
3. தொடர்ந்து பல பக்கங்களில் உங்களின் விபரங்களை கொடுக்க வேண்டும்
4. கூடுதலாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது, உங்கள் தாய், தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி
5. உங்கள் தெருவில் உள்ள இரண்டு நபர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் 
6. ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்ப கட்டணம் ரூ.1500 ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும்
7. பணம் செலுத்திய பிறகு உங்களுக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில்  அப்பாய்ன்ட்மென்ட் (Appointment) தேதி, நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
8. குறிப்பிட்ட தேதியில் ஒரிஜினல் ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று மூன்று கட்ட நேர்கானலில் கலந்து கொள்ள வேண்டும்
9. பாஸ்போர்ட் அலுவலகத்தின் முதல் பிரிவில் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு புகைபடம் எடுக்கப்படும்
10. இரண்டாம் பிரிவில் உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்
11. மூன்றாம் பிரிவில் உள்ள அரசு அதிகாரி சில கேள்விகள் கேட்பார்,  ஏன் பாஸ்போர்ட் எடுகின்றீர்கள் ? என்று கேட்டால், வெளிநாட்டில் வேலை, அல்லது வெளிநாட்டில் உள்ள உறவினரை சந்திக்க அல்லது ஹஜ், உம்ரா என ஏதாவது ஒரு தகுந்த காரணங்களை சொல்லவும்
12. இதன் பின்னர் சில நாள்களில் காவல்துறையினர் வீட்டிற்க்கு வந்து விசாரிப்பார்கள் (police verification)
13. அதன் பின்னர் தபாலில் (Post) பாஸ்போர்ட் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்

அனைத்தும் சரியாக இருந்தால் மொத்தமாக 3 அல்லது 5 வாரத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கூடுதல் விளக்கம் தேவைபட்டாலோ, விண்ணப்பிப்பதில் பிரச்சனைகள் இருந்தாலோ கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிகின்றேன்

பாஸ்போர்ட்டில் திருத்தங்கள் செய்வது, புதுபித்தல் செய்வது, கிழிந்து போன, தொலைந்து போன பாஸ்போர்ட்டிற்க்கு பதிலாக புதிய பாஸ்போர்ட் பெறுவது எப்படி என்ற விளக்கத்தை எனது https://www.facebook.com/siddique.mtech/posts/1154589384742340/ இந்த கட்டுரையில் பார்க்கவும்

ஆக்கம் : S.சித்தீக் M.Tech