Wednesday, July 8, 2020

மருத்துவம் சார்ந்த இணை பட்டப்படிப்புகள்

மருத்துவம் சார்ந்த இணை பட்டப்படிப்புகள்: எங்கெங்கு எந்தெந்த படிப்புகள் உள்ளன?

கல்வி நிறுவனத்தின் பெயர்:
NATIONAL INSTITUTE FOR EMPOWERMENT OF PERSONS WITH MULTIPLE DISABILITIES.
இந்நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது.நிறுவனத்தில் கீழ்கண்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன:

* முடநீக்கு சிகிச்சை பட்டப் படிப்பு. Degree in bachelor of physiotherapy.

* தொழில்முறை சார்ந்த சிகிச்சை பிரிவு படிப்பு. Degree in bachelor of occupational therapy.

* Degree in Bachelor of prosthetics and orthotics.

* BSc in speech and hearing. ஆடியாலஜி மற்றும் பேச்சு மொழி நோயியல் இளங்கலை

* DIPLOMA IN SPECIAL EDUCATION CEREBRAL PLASY. சிறப்பு கல்வியில் டிப்ளமோ பெருமூளை வாதம்.

* Diploma in special education deaf blind. சிறப்பு கல்வி டிப்ளமோ காதுகேளாதோர்.

* Diploma in special education autism spectrum disorder.சிறப்பு கல்வியில் டிப்ளமோ ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறு.

* Diploma in special education multiple disabilities. சிறப்பு கல்வியில் டிப்ளமோ பல குறைபாடுகள்

AIIMS எய்ம்ஸ் நிறுவனங்கள்

1.AIIMS-New Delhi:

* BSc nursing Hons
* BSc Nursing Postbasic
BSc Hons in Medical Technology in radiography. பிஎஸ்சி ஆனர்ஸ் பின் ரேடியோகிராபி மருத்துவ தொழில்நுட்பம்
* பிஎஸ்சி ஆப்டோமெட்ரி BSc optometry
AIIMS.Rishikedh.
* BSc Nuclear medicine (3 + 1)4 years
* BSc optometry 3yrs+1 yr
* BSc Medical Technology in radiography 3 years
* BSc in dental assistant 3 yr 6month
* BSc dental hygienist 3 years 6 months
* BSc in operation theatre Technology 3 years 6 months
* BSc in respiratory therapy 3 years 6 months
* BSc Plumonary function (PFT) Technician 3 yr 6 months
* BSc in Bronchoscope Technician 4 yr 6 months
* BSc in sleep lab Technician and regulation 3yr 6 month.
*
3. AIIMS- RAIPUR

* BSC OPERATION THEATRE TECHNOLOGY.
* BSc in Medical Technology in radiography.
* Bachelor in Audiology and Speech Language Pathology
* BSc in Medical Laboratory Technology.
* Advanced Diploma in Radiotherapy Technology.
* Pre Hospital Trauma Technician Certificate course 1 year.

பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பிஎஸ்சி நர்சிங் மட்டும் வழங்கப்படுகிறது

JIPMER-Pondicherry UT

* BSc Nursing 75 seats Duration 4 years
* BSc Allied Medical Sciences number of seats 58 duration 3 years
* BSc Medical Laboratory Technology . Total number of seats 30
* BSc Cardiac Laboratory Technology
* BSc Dialysis Technology
* BSc Neuro Technology
* BSc Nuclear Medicine Technology
* BSc Operation Theatre Technology
* BSc Perfusion Technology
* BSc Radiotherapy Technology.
* Bachelor of Audiology and Speech Language Pathology. In collaboration with AIISH Mysore.
இந் நிறுவனத்தில் சேர இந்நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் நாம் பங்கு கொள்ளவேண்டும். மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும்

AIISH-MYSORE:

* Diploma in Hearing Aid & Earmould Technology (DHA & ET)
* Diploma in Early Childhood Special Education (Hearing Impairment) (DECSE(HI))
* Diploma in Hearing, Language and Speech (DHLS) - Through Quasi Distance Mode
* Bachelor of Audiology and Speech Language Pathology (B.ASLP)
* Bachelor of Education Special Education (Hearing Impairment) [B.Ed. Sp. Ed.(HI)]
* PG Diploma in Clinical Linguistics for SLP (PGDCLP)
* PG Diploma in Forensic Speech Sciences & Technology (PGDFSST)
* PG Diploma in Neuro Audiology (PGDNA)
* PG Diploma in Augmentative and Alternative Communication (PGDAAC)
* M.Sc (Audiology)
* BS Ed Bachelor of Education Special Education Hearing Impairment கல்வி இளங்கலை சிறப்பு கல்வி செவித்திறன் குறைபாடு.
* Degree in Hearing Aid and Ear Mould Technology. டிப்ளமோ இன் ஹியரிங் எய்டு அண்ட்இயர் மோல்ட் டெக்னாலஜி
* Diploma in Training young Hearing Impaired children. ஆரம்பகால குழந்தைப்பருவ சிறப்புக் கல்வி டிப்ளமோ.
* Diploma in Hearing languages and Speech ( through distance mode.) கேட்டல் மொழி மற்றும் பேச்சு மொழி டிப்ளமோ தொலைதூரக் கல்வி.
* Diploma in Early childhood Special Education. Hearing impairment. ஆரம்பகால குழந்தைப்பருவ கல்வியில் டிப்ளமோ செவித்திறன் குறைபாடு.
இந்நிறுவனம் அகில இந்திய அளவில் நடத்தும் ஒரு பொது நுழைவுத் தேர்வின் மூலம் தகுதி மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

Dr. MGR Medical University, Tamilnadu

* Bachelor of Pharmacy
* Bachelor of Science in Nursing
* Bachelor of Physiotherapy
* Bachelor of Occupational Therapy
* BSc in Accident and emergency Technology
* BSc Audiology and Speech Language pathology
* BSc in Cardiac Technology
* BSc in Cardio pulmonary Perfusion Technology
* BSc in Critical Care Technology
* BSc in Dialysis Technology
* BSc in Neuro Electrophysiology
* BSc in Medical Laboratory Technology
* BSc in Medical Sociology
* BSc in Nuclear Medicine Technology
* BSc in Operation Theatre and Anaesthesia Technology
* BSc in Optometry
* BSc Physician Assistant
* BSc in Bachelor of Science in Prosthetics and orthotics
* BSc in Radiography and imaging Technology
* BSc in Radiotherapy Technology
* BSc in Medical Record Science
* BSc in Respiratory Therapy
* BSc Fitness and lifestyle Modification
* BSc in Clinical nutrition
* BSc in Microbiology

Diploma courses
* Accident and emergency care Technology
* Critical Care Technology
* Healthcare Aide
* Operation theatre and anaesthesia Technology
* Opthalmic Assistant
* Podiatry
* Scope support Technology
* Medical record science
* Optometry Technology
* Radiography and imaging Technology
* Medical lab Technology
* Cardiac non invasive Technology
* Dialysis Technology.
இது தமிழ்நாடு அரசின் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மூலம் பொது கலந்தாய்வு நடத்தி அதன்மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது தமிழக அளவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மேற்கண்ட படிப்புகளில் சேரலாம்.

Shri Ramachandra Institute of Higher Education and research.

* B pharmacy
* Bachelor in audiology and speech Language pathology
* BSc Nursing
* BSc Bachelor of physiotherapy
* BSc Bachelor of occupational therapy
* BSc Hons Biomedical Sciences
* B Optom. Bachelor of optometry
* BSc Hons. Renal and Dialysis Technology
* BSc Hons respiratory therapy
* BSc Hons radiology and imaging science technology
* BSc honours cardiac Technology.
* BSc honours radiotherapy Technology.
* BSc Honors allied Health Sciences.
* MSc Medical radiology and imaging Technology 5 yr integrated.
* BSc Nursing

GroupB
* BSc Hons sports and exercise Sciences
* BSc Hons Medical Microbiology and Applied molecular Biology
* BSc Trauma Care Management
* BSc Clinical Nutrition
* BSc Applied Psychology
* BSc Bioinformatics
* BSc Health Informatics
* BSc Data Science
* BSc Honors Environmental Health Sciences
* BSc Applied Psychology
* BSc Clinical Research
* BSc Medical Laboratory Technology
* BBA Hospital and health systems Management.
* Bachelor of Allied Health Sciences.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வின் மூலம் சேர்க்கை நடைபெறும்

CHRISTIAN MEDICAL COLLEGE VELLORE.

* BSc in Nursing
* BSc Accident and emergency care Technology
* BSc Bachelor of Audiology and speech Language pathology
* BSc Cardiac Technology
* BSc Cardio pulmonary perfusion Technology
* BSc Critical Care Technology
* BSc Dialysis care Technology
* BSc in Medical laboratory Technology
* BSc in Medical record science
* BSc in Medical Socialogy
* BSc in Neuro Electrophysiology
* BSc in Nuclear Medicine Technology
* BSc in Occupational Therapy
* BSc in Operation Theatre and Anaesthesia Technology
* BSc in Optometry
* BSc in Physiotherapy
* BSc in Prosthetics and Orthotics
* BSc in Radiography and imaging Technology
* Radio Therapy Technology
* Respiratory Therapy.
வேலூர் கிறித்துவக் கல்லூரி உலகப்புகழ் பெற்றது.
இந்நிறுவனத்தில் சேர இந்நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் நாம் வெற்றி பெற வேண்டும் .
அதில் இந்த இட ஒதுக்கீட்டில் இதர மாணவர்களுக்கும் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டில் அவர்களும் சேரலாம்.
மேற்கண்ட படிப்புகள் அந்தந்த கல்வி நிலையங்களில் 10+2 படித்த மாணவர்கள் சேரலாம்.

Dr.MGR மருத்துவ பல்கலைக்கழகம் 10+2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
எய்ம்ஸ் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனை அகில இந்திய அளவில் நடத்தப்படும் தனித்தனியாக நடத்தும் பொது நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தகுதி அடிப்படையில் சேரலாம்.

ஶ்ரீ இராமசந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தகுதி அடிப்படையில் சேரலாம்.
வேலூர் கிறித்தவ மருத்துவ கல்லூரியில் சேர தனி நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். சிறுபான்மை இன மாணவர்களுக்கு அதிக அளவிலும் பிற இனத்தவர்களுக்கு குறைந்த இடங்களில் பொது ஒதுக்கீடு முறையில் நாம் சேரலாம்..
சேர விரும்பும் மாணவர்கள் மேற்கண்ட நிறுவனங்களின் வலைத்தளங்களை பார்வையிட்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஃபுட்வேர்_படிப்புகள்

#எட்டாம்_வகுப்பு_முதல்_பட்டப்படிப்பு_முடித்தவர்கள்_வரை_பயனளிக்கும்
_ஃபுட்வேர்_படிப்புகள்!

வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி

சென்னை கிண்டியில் செயல்படும் இன்ஸ்டிட்யூட் எனப்படும் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் காலணி தொழில்நுட்பம் தொடர்பான முதுநிலை டிப்ளமோ  மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த நிறுவனம் 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தத் துறையில் பல வல்லுனர்களை உருவாக்கியுள்ளது.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என அனைத்து பிரிவுனருக்கும் அவர்களுடைய கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை பல்வேறு படிப்புகளை இந்த கல்வி நிலையத்தில் கற்றுக் கொள்ளலாம்.
 
சொந்தத் தொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்கள், படித்து முடித்ததும் வேலை கிடைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், மத்திய அரசு நிறுவனத்தில் படிக்க விரும்புவோர் என அனைவரும் புட்வேர் படிப்புகளில் சேரமுடியும்.

இங்கு படித்தவர்கள் உள்நாடு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைகளைப் பெறுவதற்கு பயிற்சி நிறுவனம் சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறது. ஃபுட்வேர் தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த பட்டதாரிகள் உள்நாடு மட்டுமல்லாது இத்தாலி, யுகே, மலேசியா மற்றும் அரபு நாடுகளில் நல்ல ஊதியத்துடன் பணிவாய்பைப் பெற்றுள்ளனர்.

#படிப்புகள்

Short Term Courses: Duration (1 Month to 3 Months)

:- Certificate In Shoe Computer Aided Design (CSCAD)

:- Design and Pattern Cutting.

:- Shoe CAD.

:- Shoe Upper Clicking

:- Shoe Upper Closing.

:- Lasting, Full Shoe Making and Finishing.

:- Leather Goods Making.

:- Die-Less Cutting design.

 

Medium Term Courses: (Duration 6 Months)

:- Condensed Course In “Footwear Design & Production” (CFDP)

Long Term Courses:- (Duration 1 Year to 3 Years)

 
:- Post Graduate Higher Diploma In Footwear Technology & Management Studies

:- Diploma In Footwear Manufacture And Design

:- Post Graduate Diploma In Footwear Technology

:- Certificate Course In Footwear Design & Product Development

:- Post Diploma In Footwear Technology 

:- Certificate Course In Footwear Manufacturing Technology

#கல்விக்கட்டணம்

குறுகியகால படிப்புகளுக்கு (Shot Term Courses ) கல்வி கட்டணம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 23 ஆயிரம் வரையில் உள்ளது.

நடுத்தர படிப்புகளுக்கு (Medium Term Courses) கல்வி கட்டணம் ரூ.40 ஆயிரம் வரையில் உள்ளது.

நீண்ட படிப்புகளுக்கு (Long Term Courses) கல்வி கட்டணம் ரூ.1 இலட்சம் முதல் 4 இலட்சம்  வரையில் உள்ளது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் கிடையாது.

#கல்வித்தகுதி

:- எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு பல குறுகிய கால படிப்புகள் படிக்க இயலும்.

:- பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு எல்லா குறுகிய கால படிப்புகளும் சில டிப்ளமோ படிப்புகளும்  படிக்க இயலும்

:- பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஏறக்குறைய எல்லா படிப்புகளும் படிக்க இயலும்.

டிப்ளமோ படிப்புக்கு மட்டும் 17 முதல் 25 வயதிற்குள் இருக்கவேண்டும். மற்ற படிப்புகளுக்கு குறைந்தபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 
#விண்ணப்பிக்கும்_முறை

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னை அலுவலகத்தில் தொலைபேசி மூலம் படிப்பு மற்றும் விணணப்பம் தொடர்பான விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்தில் விண்ணப்பத்தை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்

இமெயில் மூலம் பெறமுடியும். வெளியூர் மாணவர்களுக்கு தங்கிப் படிக்க விடுதி வசதி உண்டு.

கூடுதல் தகவல்களுக்கு...

https://cftichennai.in/contact-us.php

Central Footwear Training Institute, 
65/1, GST Road, Guindy,
Chennai - 600032,
Tamil Nadu, INDIA

EMAIL: cfti@cftichennai.in

LANDLINE: 044-22501529 / 044-22500876 / 044-22501038

MOBILE: 9677943633 / 9677943733

Software/Python

Technology/IT/Software/Python 
பைதான் கற்பதற்கு மிகவும் எளிமையான ஒரு programming language.

முன்னுரை

பைதான் கற்பதற்கு மிகவும் எளிமையான ஒரு programming language. மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு மொழி. சிறந்த data structure களை கொண்டது. Object oriented தன்மையும் கொண்டது. இதன் எளிய syntax, dynamic typing தன்மை, interpreted தன்மை ஆகியவற்றால் scripting ற்கு தகுந்த மொழியாக விளங்குகிறது. RAD எனப்படும் RAPID APPLICATION DEVELOPMENT அதாவது அதிவேக மென்பொருள் தயாரிப்பிற்கு பயன்படுகிறது.

பைதான் மொழியும், அதன் வளம் மிக்க துணை மென்பொருட்களான் standard library யும் இலவசமாக கிடைக்கிறது. www.python.org என்ற தளத்தில் source ஆகவும் binary ஆகவும் எல்லா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு தகுந்த வகையிலும் கிடைக்கிறது. இதே தளத்தில் பல்வேறு வகையான பைதான் module கள் பற்றிய தகவல்கள், பல்வேறு மென்பொருள்கள், உதவிக் குறிப்புகள், பைதான் பற்றிய நூல்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவை கிடைக்கின்றன.
 
C மற்றும் C++ மூலம் பைதானின் பல புதிய function மற்றும் data type களை எளிதாக சேர்க்கலாம். பல்வேறு மென்பொருட்களுக்கு பைதானை ஒரு extension மொழியாகவும் பயன்படுத்தலாம்.
 
இந்த தொடர் உங்களுக்கு பைதான் மொழியின் அடிப்படை கருத்துகளையும் பண்புகளையும் அறிமுகம் செய்கிறது. இதில் கூறப்பட்டுள்ள உதாரணங்களை நீங்கள் உங்கள் கணிப்போறியில் பைதான் interpreter ல் டைப் செய்து படிக வேண்டும். விரைவாக கற்றுக் கொள்ள உதவும் கணிப்பொறி இல்லை என்றாலும் பரவயில்லை. வாசிப்பு மட்டுமே போதும். பைதான் program கள் படித்தாலே புரியும் வகையில் எளிமையாய் இருக்கும்.
 
பைதான் – சிறப்புகள்

கணிப்பொறியை வாழ்வில் அதிகமாக பயன்படுத்தும் போது, பல நேரங்களில் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்ய நேரிடும். அதை தவிர்க்க, அந்த வேலைகளை Automate (தானியங்கி)யாக செய்து விட்டால், நன்றாக இருக்கும் என்று பல முறை நினைத்திருப்போம். உதாரணமாக, ஒரு பெரிய text பைலில் ஏதேனும் ஒரு சொல்லை தேடி, வேறு சொல்லாக மாற்றுவது. Search and Replace. எ.கா. Suresh என்ற சொல்லை Ramesh என்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மற்றுவது.

டிஜிட்டல் கேமரா அல்லது மொபைல் போனில் அடிக்கடி எடுக்கும் படங்களை கணிப்பொறியில் பெயர் மாற்றி, ஒழுங்காக folder கள் உருவாக்கி அவற்றில் போட்டோக்களை வகைப்படுத்தி வைப்பது. போட்டோக்களுக்கு பெயர் மாற்றுவது. அவற்றை resize செய்வது.
இது போன்ற பல வேலைகளை ஆடோமேட் செய்து விட்டால், நமக்கு நிறைய நேரம் மிச்சமாகும். சில நேரங்களில் நமக்கு தேவையான புதிய மென்பொருள்களை உருவாக்க நினைப்போம். ஒரு புதிய விளையாட்டு அல்லது database சார்ந்த மென்பொருள் பற்றி யோசித்துக் கொண்டு இருப்போம்.
நீங்கள் இவற்றை எப்படி செய்வீர்கள்? நீங்கள் ஒரு மென்பொருள் வல்லுனர் என்றால், C/C++/Java போன்ற ஒரு மொழியை தேர்வு
செய்வீர்கள். ஆனால் write/compile/test/re-compile என்ற முடிவில்லாத ஒரு சூழலில் மாட்டிக் கொள்வீர்கள். மேலும் பிறர் எழுதிய ஒரு மென்பொருளை சோதனை செய்வதற்கு, பல நேரங்களில் நீஙகள் பக்கம் பக்கமாக code எழுதிக் கொண்டிருப்பீர்கள்.

பைதான் – உங்கள் தேவைகளை நிறைவெற்றும், எளிய மொழி அதன் நிறம் மிக்க, சீரான தன்மை விரைவில் , குறந்த நேரத்தில், தரமான program களை எழுத உதவுகிறது.

மேற்கொண்ட சில செயல்களை நீங்கள் லினக்ஸ் Shell Script அல்லது விண்டோஸ் batch file மூலமாக செய்துவிட முடியும். ஆனால், Shell Script ல் text file களை மட்டுமே திறம்பட கையாள முடியும். GUI, database அல்லது விளையாட்டுகளை எழுத முடியாது. C/C++/Java ல் இவற்றை செய்யலாம். ஆனால், நீண்ட நேரம் தேவைப்படும்.

பைதான் மிகவும் எளிமையானது. லினக்ஸ், Mac OS, விண்டோஸ் என அனைத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களிலும் இயங்கக் கூடியது. மிக மிக குறந்த நேரத்தில் பெரிய மென்பொருள்களை எழுத உதவுகிறது.
பைதான் எளிய மொழி என்றாலும் ஒரு முழுமையான, சக்தி வாய்ந்த மொழி. Shell Script, batch file களை விட அதிக அளவிலான data structure களை கொண்டது. C ஐ விட அதிகமான error checking ம், awk, perl போன்ற மொழிகள் தராத high level data type களான array, dictionary களையும் கொண்டு ஒரு high level programing language ஆக உள்ளது. வேறு எந்த ஒரு மொழியை விடவும் பைதான் கற்பது எளிமையானது.

ஒரு பைதான் புரோகிராமை பல்வேறு module களாக பிரிக்கலாம். இந்த மாடியூல்களை அப்படியே பிற பைதான் புரோகிராம்களிலும் பயன் படுத்திக் கொள்ளலாம். பைதான் பல Standard Module களை கொண்டுள்ளது. அவை பைதான் கற்பதை எளிமையாக்குகின்றன. அவை File I/O, system calls, socket, networking, string, date, time, maths, tk போன்ற GUI என பல்வேறு வகையான் வேலைகளை செய்ய உதவுகின்றன.
பைதான் ஒரு interpreted மொழி. இதில் compilation, linking போன்ற வேலைகள் இல்லை. இதனால் மிக விரைவக புரோகிராம்களை எழுத இயலும். இந்த வகை மொழியில், புரோகிராமை இயக்கும் போது ஒவ்வோரு வரியாக படித்து, அது இயக்கப்பட்டு, பின்பு அடுத்த வரி படிக்கப்பட்டு இயக்கப்படும். இதனால், முழு புரோகிராம் எப்போதும் தேவை. Binary exe file கிடையாது.
பைதான் interpreter இயக்குவதற்கு எளிதானது. இதில் சிறு சிறு புரோகிராம் வரிகளை உடனே இயக்கி பார்க்கலாம். இதில் பல புதிய புரோகிராம் வரிகளை சோதனை செய்த பின்பு, அவற்றை நாம் உருவாக்கும் மென்பொருள்களில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த interpreter ஐ ஒரு calculater போலவும் பயன்படும்.

பைதான், புரோகிராம்களை சுருக்கமாகவும், படிப்பதற்கு புரியும் வகையிலும் எழுத வைக்கிறது. C/C++/Java என பிற எந்த மொழியில் எழுதும் புரோகிராம்களை விடவும் பைதான் புரோகிராம்கள் எளிமையாவும் சிறியதாகவும் இருக்கும். ஏனென்றால்,

* பைதானில் உள்ள high level data type கள் சிக்கலான செயல்களை கூட ஒரு வரியில் சொல்ல உதவுகின்றன.

* பல statement களை ஒன்றாக Group செய்ய ஆரம்ப மற்றும் முடிவு இடங்களில் bracket அதாவது { } க்கு பதிலாக indentation பயன் படுத்தப் படுகிறது. Tab அல்லது space மூலம் indent செய்ய வேண்டும்.

* Variable மற்றும் argument களை declare செய்ய தேவை இல்லை பைதான் மொழி வளரும் தன்மை கொண்டது (extensible). C மொழி தெரிந்தால் போதும். சிக்கலான பல பெரிய வேலைகளை C மூலமாக ஒரு extension எழுதி, பைதானை மேலும் எளிமையாகவும் விரைவாகவும் செயல் பட வைக்கலாம்.1991 ல் Guido Van Rossum என்ற அறிஞர் இந்த மொழியை open source ஆக வெளியிட்டார். புதிய மொழிக்கு பெயர் யோசித்துக் கொண்டிருந்த போது, BBC தொலைக்காட்சியில் அவர் விரும்பிப் பார்த்த’Monty Python’s Flying Circus’ என்ற தொடர் நினைவுக்கு வந்தது. அதிலிருந்து Python என்ற சொல்லை எடுத்து தனது புதிய மொழிக்கு பெயராக வைத்தார். இந்த பெயருக்கும் பாம்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
 
பைதான் மொழி பற்றி இவ்வளவு தெரிந்து கொள்ளும் போது, அதை மேலும் கற்றுக் கொள்ள ஆவல் ஏற்படுகிறதா? இதோ இப்போதே களத்தில் குதிக்கலாம். உங்கள் python interpreter ஐ தயார் படுத்துங்கள்.

அடுத்த பிரிவில் பைதான் interpreter பற்றி சற்றே விரிவாக காணலாம். போரடித்தாலும் படித்து வையுங்கள். அடுத்தடுத்த பகுதிகளில் கூறப்படும் பைதான் புரோகிராம்களை இயக்கி மகிழ, இந்த விவரங்கள் தேவை.
 
மேலும் இந்த தொடர், பைதான் மொழியின் பல்வேறு சிறப்புகளையும் பயன்களையும் விளக்குகிறது. எளிய expression, statement ல் தொடங்கி data type, function மற்றும் module வழியாக, சென்று exception, user defined class களை எளிமையான வழியில்
விவரிக்கிறது.

— தொடரும்

#AKV_python_1

பாலிமர் இன்ஜினியரிங் (Polymer engineering) துறை வேலை வாய்ப்புகள் எப்படி?

பாலிமர் இன்ஜினியரிங் (Polymer engineering) துறை வேலை வாய்ப்புகள் எப்படி?

பாலிமர் என்பது ஒரு அடிப்படை வேதிப்பொருளை (monomer) பன்மடங்காக ஒன்றாக்கி ஓரு புதிதாக உருவாக்கிய நெகிலிப்போன்ற வேதிப்பொருளாகும்.

பாலிமருக்கு உதாரனம், PVC, PET, Polythene, Nylon etc. இவைகள் பெரும்பாலும் நெகிழி தன்மையும், எலாஸ்டிக் தன்மையும் கொண்டவை. இவைகளின் பயனபாடு எண்ணிலடங்காது. பாலிமர்களை உற்பத்தி செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றில் கெமிக்கல் இன்ஜினியரிங்கின் கோட்பாடுகளையும் விதிகளையும் பாலிமர் இன்ஜினியர்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்காக பிளான்ட் டிசைன், பிராசஸ் டிசைன், தெர்மோடைனமிக்ஸ், போக்குவரத்து அம்சங்கள் ஆகிய தத்துவங்களை பாலிமர் இன்ஜினியர்கள் ஆராய்கிறார்கள். பிளாஸ்டிக் மற்றம் பாலிமர் உற்பத்தியை இவர்கள் கண்காணிக்கிறார்கள். உற்பத்தித் தளத்தில் பிளாஸ்டிக் மோல்டர்களையும் டெக்னீஷியன்களையும் கண்காணிப்பவர்களும் இவர்களே.

பாலிமர் இன்ஜினியரிங் படிப்பு

இத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை என இரு பிரிவுகளிலுமே பல்வேறு படிப்புகள் உள்ளன. இளநிலையில் பி.இ., பி.டெக். மற்றும் முதுநிலையில் எம்.டெக். என்றும் படிப்புகள் உள்ளன. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்கள் பாலிமர் இன்ஜினியரிங்கில் பி.இ., பி.டெக். படிப்பில் சேரலாம். பாலிமர் இன்ஜினியரிங் மற்றும் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் என இந்தப் படிப்புகள் பெயரிடப்பட்டுள்ளன. இதைப் படித்தவர்கள் பாலிமர் உற்பத்தித் தளங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் நேரடியாகப் பணி புரியலாம்.

இந்தப் படிப்புகளில் சேர மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை எழுதி அவற்றில் வெற்றி பெற வேண்டும்.
எம்.டெக்கில் பாலிமர் இன்ஜினியரிங்/பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்பதற்கு பாலிமர் இன்ஜினியரிங் அல்லது பிளாஸ்டிக் டெக்னாலஜி அல்லது ரப்பர் டெக்னாலஜி அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ. பி.டெக். படித்திருக்க வேண்டும். இயற்பியல் அல்லது வேதியியலில் எம்.எஸ்சி. படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இத் துறையில் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வில் தகுதி பெற்றவருக்கு கல்வி வாய்ப்பைத் தருகின்றன.

இத்துறையில் படிப்பை முடிப்பவருக்கு பாலிமர் உற்பத்தி மற்றும் உபயோகிக்கும் தொழிற்சாலைகளில் புரடக்ஷன் சூப்பர்வைசர், குவாலிடி கன்ட்ரோல் இன்ஸ்பெக்டர், புரடக்ஷன் பிளானர், மோல்டு டிசைனர் என்னும் பல பணிகள் கிடைக்கின்றன. பொதுத் துறை மற்றும் தனியார் பிளாஸ்டிக் நிறுவனங்களிலும் நல்ல வேலைகள் கிடைக்கின்றன. உற்பத்தித் தொழில் நிறுவனங்களான பிளாஸ்டிக், ஆட்டோமோடிவ், எலக்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ், பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களிலும் நல்ல பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பாலிமர் இன்ஜினியர்கள், பாலிமர் டெக்னாலஜிஸ்டுகள், பாலிமர் சயின்டிஸ்டுகளுக்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆய்வகம், பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பிளான்டுகள், வெவ்வேறு மாநிலங்களிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம், பாலிமர் கழகங்கள், பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா, பெட்ரோ பைல்ஸ் கோவாபரேடிவ் லிமிடெட் போன்ற அரசுத் துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.

இயற்கை வளங்கள் குறைவாகிக் கொண்டே வரும் இந்த நாட்களில் மாற்று உபயோகப் பொருளான பாலிமரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் பாலிமர் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை அதிக முக்கியத்துவம் வாய்ந்த் துறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்த இன்கிரிமென்ட், படிகள், பயன்கள் என பல வகைகளிலும் பாலிமர் இன்ஜினியர்களின் ஊதியம் சிறப்பாக அமைகிறது. பி.இ., பி.டெக். முடித்து பணியில் சேரும் பாலிமர் இன்ஜினியர்கள் துவக்கத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம்.

அனுபவம், தகுதி, திறன்கள் ஆகியவையே இத் துறையில் நல்ல சம்பளம் பெறுவதற்கான அடிப்படைத் தேவைகளாக உள்ளன. பொதுவாக பொதுத் துறையில் பணி புரிபவர்களை விட தனியார் துறையில் பணி புரிபவருக்கே நல்ல சம்பளம் இத் துறையில் கிடைக்கிறது. இத் துறையில் 5 ஆண்டுகளுக்கு அதிகமாகப் பணி புரியும் சீனியர் பாலிமர் இன்ஜினியர் மற்றும் சயின்டிஸ்டுகள் மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

பாலிமர் இன்ஜினியரிங் படிப்பானது கடந்த சில ஆண்டுகளாக புதிது புதிதாக பல கல்வி நிறுவனங்களில் துவங்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டிக்கள்(IIT), என்.ஐ.டிக்கள்(NIT), மெஸ்ராவிலுள்ள பிட்ஸ்(Birla Institute of Tech.), கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப் பல்கலைக்கழகம் (IISc), மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே, லங்கோவால் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பஞ்சாப், ஸ்ரீஜெயச்சாமராஜேந்திர காலேஜ் ஆப் இன்ஜினியரிங்-மைசூரு, யுனிவர்சிடி காலேஜ் ஆப் இன்ஜினியரிங்-தொடுபுழா போன்றவற்றில் இத்துறைப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் சமீப காலமாக ஒரு சில கல்லூரிகளில் இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இது சம்மந்தமான மற்றதுறைகள்:

Polymer science
Nano polymer technology 
Polymer Rheology
Polymer Chemistry
Plastic technology

கப்பலில் கேப்டனாக வேண்டும் அல்லது தலைமை பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறதா?

கப்பலில் கேப்டனாக வேண்டும் அல்லது தலைமை பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறதா?

கப்பலில் கேப்டனாக வேண்டும் அல்லது தலைமை பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறதா? இதற்கான படிப்புகளை வழங்குகிறது, சென்னையில் உள்ள இந்தியன் மாரிடைம் யுனிவர்சிட்டி (IMU) என்று அழைக்கப்படும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்.

லட்சக்கணக்கில் சம்பளம். ஆறு மாதம் வேலை. ஆறு மாதம் விடுமுறை. பல நாடுகளுக்கும் செலவில்லாமல் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு. வேலை நேரம் போக மீதி நேரம் சொகுசான பயணத்துடன் கூடிய வாழ்க்கை. பணியின் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு கப்பலை இயக்கும் கேப்டன் அல்லது தலைமை பொறியாளர் பதவி என பல வித வசதிகள்.

கப்பலில் வேலை பார்க்க ஆர்வம் இருக்கிறதா?

உங்களுக்கு கலங்கரைவிளக்காய் வழிகாட்ட காத்திருக்கிறது, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்ட்டில் அமைந்திருக்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகம்.

இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் 2009 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் செயல்பட ஆரம்பித்தது. மும்பை, கோல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை, கொச்சி, கண்ட்லா ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் தேசிய கடல்சார் மையங்களும் இதன் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதைத்தவிர, பல்வேறு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடல்சார் படிப்புகள் வழங்கி வந்த கல்லூரிகளும் படிப்படியாக இந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. தற்போது 41 கடல் சார் கல்லூரிகள், இந்திய கடல் சார் பல்கலைக் கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளன. இதில், 15 கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. இதைத்தவிர, சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் மரைன் என்ஜினீயரிங் படிப்பையும், தனியார் கல்வி நிலையங்கள் டிப்ளமோ படிப்பையும் வழங்குகின்றன.

இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி. விஜயன், இப்பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். . ”தேசிய கடல்சார் மையத்தில் பி.எஸ்ஸி., படிப்புக்கு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மாணவர்கள் சேரலாம். ஒரே சமயத்தில் இந்தப் படிப்பில் 320 பேர் சேரமுடியும். அத்தனை பேருக்குமே படிப்பின் முடிவில் வேலை உறுதி என்பதுதான் இந்தப் படிப்பின் சிறப்பு. சர்வதேச அளவில் இந்தியர்களைத்தான் கடல்பணிக்கு பெருமளவில் தேர்வு செய்வது நமக்கு கூடுதல் சிறப்பு. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது” என்றவர், நாங்கள் இயற்பியல், கணிதம், வேதியியல் பட்டப்படிப்பு படித்திருப்பவர்கள் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பில் சேரும் வகையில் 6 மாதப் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

அதேபோல், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஒருவருடப் படிப்புக்குப் பின்னர் நேரடியாக கப்பல் பணிகளில் சேரலாம். இந்தப் பயிற்சி படிப்புக்கு ’ போஸ்ட்கிராஜுவேட் மரைன் இன்ஜினீயரிங்’ பட்டம் வழங்கப்படும். இவர்கள் முதன்மை இன்ஜினீயராக வேலைக்குச் சேர்க்கப்படுவார்கள். இவைதவிர, கடல்சார் பல்கலைக்கழகத்தில் புதிதாக எட்டுத் துறைகளை உருவாக்கி உள்ளோம்” என்றார்.

”இந்தத் துறையைப் பொறுத்தவரையில் 21 வயதில் வேலைக்குச் சேர்பவர்கள் 30 வயது வரை சம்பாதித்துவிட்டு, கப்பல் பணியில் இருந்து விடுபட்டு, துறைமுகம் சார்ந்த பணிக்கு வந்துவிடலாம். கடல் வளமும், கப்பல் போக்குவரத்தும் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள் என்பதால், வேலைவாய்ப்புக்கும் பஞ்சம் இருக்காது’. தற்போது எங்களிடம் உள்ள எம்பிஏ படிப்புக்கு பெரிய அளவில் தேவை உருவாகி இருக்கிறது.

மேலாண்மைப் படிப்பில் சேர பட்டப்படிப்பு படித்தால் போதுமானது. பி.இ., மெரைன் இன்ஜினியரிங் படிப்பில் 320 இடங்கள், பி.டெக்., நேவல் ஆர்கிடெக்சர் அண்ட் ஓஷன் இன்ஜினியரிங் படிப்பில் 40 இடங்கள், எம்.பி.ஏ., ஷிப்பிங் அண்ட் போர்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.பி.ஏ., இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பில் தலா 30 இடங்கள் உள்ளன. மேலும், பி.இ., மெரைன் இன்ஜினியரிங் படிப்பில், ‘ஸ்பான்சர்டு’ பிரிவில் இடங்கள் உள்ளன. இப்பல்கலைக் கழகத்தின் சென்னை, மும்பை, கோல்கட்டா வளாகங்களில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன” என்று தொடர்ந்தார்.

“வருகிற ஆண்டுகளில் கடலோர மாநிலங்களில் புதிய கல்வி மையங்களை திறக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். இதன் மூலம் கப்பல் துறையில் பெரிய அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பொதுவாக, கப்பல் போக்குவரத்து பிரிவுகளில் பெண்கள் பணிபுரிவதில்லை. ஆனால், தற்போது பலரும் விரும்பும் துறையாக மாறி இருப்பதால் பெண்களும் விண்ணப்பித்து சேர ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி சேர்பவர்களுக்கு நாட்டிக்கல் சயின்ஸ் மற்றும் மரைன் இன்ஜினீயரிங் படிக்க உள்ள பெண்களுக்கு டியூசன் கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியால் கப்பல் கட்டுமான துறையும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் நாங்கள் பி.எஸ்சி கப்பல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு படிப்பை தொடங்கி இருக்கிறோம். இது கொச்சியில் நடந்து வருகிறது. இதைப்போலவே விசாகப்பட்டினத்தில் நேவல் ஆர்கிடெக்சர் படிப்பையும் தொடங்கி இருக்கிறோம். இங்கு படிப்பவர்கள் இந்திய கடற்படை கப்பல் பிரிவில் வேலைவாய்ப்பை பெறலாம்” என்றார் விஜயன்.

நாங்கள் இந்திய சட்டத்துறையுடன் செய்துக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால், அடுத்த மாதம் கடல்சார் சட்டப்படிப்பை துவங்க இருக்கிறோம். இதில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சட்டக்கல்வி பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாங்கள் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புக்கும், மரைன் இன்ஜினீயரிங் மற்றும் இதர பிரிவு படிப்புகளுக்கும் நடத்தப்படும் நுழைவு தேர்வு 150 வினாக்கள் கொண்டதாக இருக்கும். இதில் 6 விதமான பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முதல் மூன்று பகுதியில் இருந்து கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும். அடுத்த மூன்று பகுதிகள் பொது அறிவு, பொது ஆங்கிலம் மற்றும் திறனறிவு சார்ந்தவையாக இருக்கும். நுழைவு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெறுகிறவர்களுக்கு நாங்கள் பத்தாயிரம் ரூபாய் பரிசாக வழங்குகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் சேரும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு பெருமளவில் நிதி உதவி செய்து வருகிறது. இதைப்போலவே மீனவ சமூகத்தை சேர்ந்த மாணவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் பலவிதமான சலுகைகள் இருக்கின்றன. பொதுவாக கடல்சார் படிப்பு படிக்க வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. இளைஞர்கள் தைரியமாக இப்படிப்பில் சேரலாம்” என்றார் துணைவேந்தர் விஜயன்.
நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பை படிக்க வேதியியல், இயற்பியல், கணிதம் பட்டப்படிப்பை படித்தவர்களும் சேரலாம். நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புக்கான கட்டணம் இரண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாய். கடல்சார் பல்கலைக்கழகத்தில் சேரும் போது பல வங்கிகளும் கல்வி கடன் வழங்க முன்வருவதால் படிப்பு கட்டணம் பற்றி கவலைப்படத்தேவையில்லை.
பொறியியல் பிரிவில் செல்ல விரும்புகிறவர்களுக்கு நான்கு ஆண்டுகள் மரைன் இன்ஜினீயரிங் படிப்பு படிக்க வேண்டும். படிப்பின் போது அதிகளவில் பயிற்சி அளிக்கப்படும். கடல் சார் பல்கலைக்கழகத்தின் கோல்கத்தா, சென்னை மையங்களில் மரைன் இன் ஜினீயரிங் படிப்பு சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

இந்த படிப்பை முடித்தவர்கள் பொறியாளர் பயிற்சியாளராகவோ அல்லது இளநிலை பொறியாளராகவோ சேரலாம். இறுதிநிலையாக, தலைமை பொறியாளர் பதவி பெறலாம். கடல்சார் படிப்பில் டிப்ளமோ முடித்தாலே வேலை வாய்ப்பு மிகவும் எளிதாக கிடைப்பதால், அதற்கு மேல் பொறியியல் படிப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கிறது. இதனால் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பிரமாதமாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
குறிப்பிட கால கப்பல் பணி அனுபவத்திற்கு பிறகு, கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை பெறமுடியும். மேலும், துறைமுகங்கள் சார்ந்த வேலைவாய்ப்பிலும் சேர முடியும். கப்பல் துறைமுகத்துக்கு வரும்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பழுது பார்க்கும் பணியை பார்த்திடவும் பெரிய அளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இதனால் கடல்சார்ந்த வேலை வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

கப்பல் போக்குவரத்தில் இப்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தவிர, சொகுசு பயணம் செய்பவதும், சுற்றுலா செல்வதும் அதிகரித்திருக்கிறது. இதனால் கப்பல் சுற்றுலா சார்ந்த பிரிவுகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. சம்பளமும் பெரிய அளவில் கிடைக்கிறது. துறைமுகக் கட்டுமானப் பொறியியல், எண்ணெய் வளங்களைக் கடலில் கண்டறிவது தொடர்பான பெட்ரோல் இன்ஜினீயரிங் படிப்புகளும்கூட இப்போது முக்கியத்துவம் பெறத் தொடங்கி இருக்கின்றன.

அதனால், கடல்சார் படிப்பு என்பதற்கான எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது.இப்போது மின்துறை முக்கியத்துவம் பெற்று வருவதால், அந்தத் துறையில் தெர்மல் பவர் பிளான்ட் மற்றும் இதர மின் தயாரிப்பு நிறுவனங்களில் நிர்வாகப் பணிகளுக்கு கப்பல் துறையில் வேலை பார்த்தவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கிறது. அதேபோல நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகப் பணிகளிலும் எளிதாக வேலைக்குச் சேரமுடியும். மரைன் இன்ஜினீயரிங் படித்தால், கப்பலில் இருக்கும்போதும் வாய்ப்பு; கரைக்கு வந்தாலும் வாய்ப்பு.கப்பல் பணியில் இருந்து விடுபட்டு வருகிறவர்களுக்கு மரைன் கல்லூரிகளில் ஆசிரியர் பணி, துறைமுகங்களில் ஷிப்பிங் நிறுவனங்களில் சர்வேயர் பணி, பயிற்சியாளர் பணி, டெக்னிக்கல் சூப்பிரடென்டன்ட் போன்ற வேலைகள் கிடைக்கின்றன.

மேலும் தகவலுக்கு:

https://www.imu.edu.in


வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

இந்தியாவில் சட்ட படிப்பு இரு விதமாய் உள்ளது. ப்ளஸ் டூ முடித்து விட்டு நேரே BL படித்தால் ஐந்து வருட படிப்பு. BA, B.Sc, B.Com என ஏதேனும் ஒரு டிகிரி முடித்து விட்டு படித்தால் மூன்று வருடம். (ஆம் எந்த டிகிரி படித்தாலும், BL - மூன்று வருட படிப்பில் சேர்ந்து படிக்கலாம்). தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. சேலத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்திய அளவில் புனே மற்றும் பெங்களுருவில் சில சிறந்த சட்ட கல்லூரிகள் (National Law school) உள்ளன.

சென்னையில் அரசு சட்ட கல்லூரி தவிர BA BL - Honours என்கிற கோர்ஸும் உள்ளது. இது பாரிஸ் கார்னர் சட்ட கல்லூரி வளாகத்தில் இல்லை. சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ளது. இந்த படிப்பிற்கு மிக நல்ல மதிப்பு உள்ளது. இங்கு படித்தால் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது

தேர்வு முறை

அரசு சட்ட கல்லூரிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நுழைவு தேர்வு முறையில் மாணவர்கள் தேர்வானார்கள். இப்போது முழுக்க முழுக்க + 2 மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது . 

தமிழக சட்ட கல்லூரிகளை பொறுத்தவரை - அரசு கல்லூரிகள் எனில் + 2 வில் 80 முதல் 90 % வரை மொத்த மதிப்பெண் எடுத்தால் சீட் கிடைக்கும்.

மேலே சொன்ன சென்னை School of Excellence , தரமணி கல்லூரியில் 85 முதல் 90 % மதிப்பெண் என்றால் சீட் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

அரசு கல்லூரி மற்றும் School of Excellence இரண்டிலுமே + 2 வில் எந்த பாட திட்டத்தில் படித்திருந்தாலும் - சேரலாம்.. காமர்ஸ் க்ரூப் தான் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; கணிதம்- இயற்பியல்- கணினி அறிவியல்- உயிரியல் போன்ற பிரிவில் படித்த மாணவர்கள் கூட சட்டம் படிக்கலாம் (நானே அப்படி + 2வில் கணிதம் மற்றும் உயிரியல் படித்த மாணவன் தான்)

செலவு

அரசு சட்ட கல்லூரியில் படித்தால் செலவு மிக குறைவே. கல்லூரிக்கான செலவு (Term fees, exam fees, etc) வருடத்திற்கு 10000-க்குள் அடங்கி விடும். ஹாஸ்டலில் தங்கி படித்தால் அதற்கான செலவு அந்தந்த ஊர் பொறுத்து இருக்கும்.

School of Excellence , தரமணியில் ஆண்டுக்கு 60,000 முதல் 80,000 வரை செலவாகும்

பிற மாநில கல்லூரிகள்

முழு நேர மாணவனாக இல்லாமலே சட்டம் படிப்பதற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நிறைய கல்லூரிகள் உள்ளன. இங்கு தரபடுவது LLB என்ற பட்டம் . BL - LLB இரண்டும் சமமே. சட்ட படிப்பு தமிழகத்தில் BL என்றும், பிற மாநிலங்களில் LLB என்றும் அழைக்க படுகிறது.

ஆனால் இந்த கல்லூரிகள் தனியார் என்பதால் costly-ஆக இருக்கும்; தோராயமாக வருடத்துக்கு ருபாய் 30,000 ஆகலாம். தேர்வு எழுத நீங்கள் அந்த ஊருக்கு சென்றாக வேண்டும். (இது தொலை தூர கல்வி அல்ல என்று அறிக).

சில யூனிவர்சிட்டிகள் தொலை தூரத்தில் படிக்க BGL என்ற படிப்பு வைத்துள்ளனர். இது கோர்ட்டுக்கோ, வேலைக்கோ எந்த விதத்திலும் உதவாது. வேலைக்காக அல்லது வேலை உயர்வுக்காக படிக்கிறீர்கள் என்றால், இதனை படிப்பதை தயவு செய்து தவிர்க்கவும். BGL-க்கு பெரும்பாலும் நல்ல வேலை கிடைக்காது

வேலை வாய்ப்புகள்

1 . வழக்கறிஞர் ஆக Practise செய்வது:

BL முடித்தவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் கோர்ட் சென்று Practise செய்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா? இருப்பினும் BL முடித்து அதிக அளவு சதவீதத்தினர் ( 40 to 50% ) வழக்கறிஞர் தொழில் செய்கிறார்கள் என்ற அளவில் இதனை முதலில் பார்ப்போம்.

பெரும்பாலும் முதலில் யாரேனும் ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பணி புரிய வேண்டும். இது அந்தந்த ஊருக்கு ஏற்ப டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறுகிறது. டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட்டில் பெரும்பாலான ஜூனியர் வழக்கறிஞர்கள் குறைவான சம்பளமே வாங்குகின்றனர். சில ஆண்டுகள் இப்படி கஷ்ட ஜீவனம் தான். பின் தனக்குள்ள தொடர்புகளை வைத்து சுமாராக ஐந்து ஆண்டுகளில் தனியாக Practise செய்யலாம்.

நாங்கள் படித்த காலத்திலேயே " சீக்கிரம் நிறைய கேஸ் வரணும்னா தந்தை வக்கீலா இருக்கணும் இல்லாட்டி மாமனார் வக்கீலா இருக்கணும்" என்பார்கள். இது ஓரளவுக்கு உண்மை தான். முதல் தலை முறை வக்கீல்கள் தனியே சம்பாதிக்க நிறைய ஆண்டுகள் தேவை படுகிறது.

வக்கீலாக ப்ராக்டிஸ் செய்வது எனில் அதில்-

சிவில் Side  (கொடுக்கல் வாங்கல்- சொத்து சம்பந்தமான பிரச்சனைகள்)
கிரிமினல்  Side  (அனைத்து வித குற்றங்கள்- திருட்டு, கொலை, etc )
கம்பனி சட்டம் ( கம்பனிகள் மீது போடப்படும் வழக்குகள்)
இன்கம் டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் போன்ற பிரிவு
குடும்ப நீதிமன்றம் (விவாகரத்து போன்றவை)

என எந்த பக்கம் நாம் ப்ராக்டிஸ் செய்ய போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனை உடனே செய்ய வேண்டும் என்றில்லை; படிக்க துவங்கிய பின் நமக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ - அதில் நுழையலாம்.

2. பெரிய Law firm களில் இணைந்து பணியாற்றுவது:

இந்தியாவில் பல சிறப்பான Law firm-கள் உள்ளன. உதாரணத்துக்கு சில: AZB Partners, Kochar and Co, Amarchand Mangal Das. சென்னையிலேயே Fox Mandal Associates, King and Partridege போன்றவை..

இந்த Law firm-களில் ஜூனியராக அல்லது முழு நேர ஊழியராக சேர்ந்தால் துவக்கதிலேயே ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கும். மேலும் போக போக, நாம் செய்யும் வேலைக்கு சதவீத  (Percentage) அடிப்படையில் பணம் தருகின்றனர். இதன் மூலம் சில வருடங்களிலேயே மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கும் வக்கீல்கள் பலர் உள்ளனர்.

நல்ல Law firm-ல் நுழைய சரியான reference தேவை. அதாவது அங்கு உங்களை சேர்த்து விடும் விதமான நபரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!!

3. நிறுவனங்களில் வேலை :

இந்தியாவில் லட்சக்கணக்கான கம்பனிகள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கானவை பெரிய கம்பனிகள். இவற்றில் Law officer,  Legal Manager, AGM, GM என பல்வேறு பதவிகளில் BL முடித்தவர்கள் வேலை செய்கின்றனர். துவக்க சம்பளமே ஓரளவு decent ஆக இருக்கும். போக போக நிச்சயம் சம்பளம் கூடும். ரிஸ்க் இல்லாமல் குறிப்பிட்ட வருமானம் விரும்புவோர் நிறுவனங்களில் பணி செய்யலாம்.

மேலும் தற்போது Legal Process Outsourcing என்கிற தொழிலும் அதிகரித்து வருகிறது. இது பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லீகல் வேலைகள் இங்கு Outsource செய்யபடுகின்றன ( IT Outsourcing போலவே). இதனாலும் BL-க்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.

இவை தவிர BL முடித்தோர் Civil services (IAS, IPS, etc ), பிற அரசு வேலை என பல இடங்களில் உள்ளனர்.

ஒரு நல்ல வக்கீலுக்கு (கோர்ட்/ அலுவலக வேலை எதுவாக இருந்தாலும்) முக்கிய தேவை எழுத்தாற்றல் (Drafting skills) மற்றும் பேச்சாற்றல்.. இப்படி எழுத்து மற்றும் பேச்சில் ஈடு பாடு இருந்தால் நிச்சயம் நீங்களோ உங்களுக்கு தெரிந்தவருக்கோ இந்த படிப்பை சிபாரிசு செய்யலாம்.


கைத்தறி_தொழில்_நுட்பப்_படிப்புகள்

#கைத்தறி_தொழில்_நுட்பப்_படிப்புகள்!

Courtesy:- திருவாரூர் தெற்கு மாவட்ட மாணவரணி

வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி 

மொத்த உலக பட்டு உற்பத்தியில் 18% இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆடை வடிவமைப்புகளில் மிகுந்த கவனம் செலுத்தும் இன்றைய நவீன தலைமுறையினர் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் துறையாக விளங்குகிறது கைத்தறித்துறை. 

இத்தகைய சிறப்பு மிக்க கைத்தறி துறையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப கைத்தறித் துறை வல்லுநர்களின் தேவை அதிகமாக வாய்ப்புள்ளது. அத்தகைய தொழில் வல்லுநர்களை உருவாக்கவே நவீன கைத்தறி தொழில்நுட்ப படிப்புகளை உருவாக்கப்பட்டது. 

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி கல்வி நிறுவனம் அத்தகைய படிப்புகளை வழங்கி வருகிறது. கைத்தறி தொழில்நுட்பம் சார்ந்த உயர்கல்வி படிப்புகளான மூன்று வருட டிப்ளோமா படிப்புகள், ஒரு வருட சான்றிதழ் படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆறு கல்வி நிறுவனங்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் நான்கு கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, தமிழ்நாட்டில் சேலம், அஸ்ஸாமில் கவுஹாத்தி, ராஜஸ்தானில் ஜோத்பூர், ஒடிசாவில் பாரகார்ஹ், மேற்குவங்கத்தில் ஃபுலியா- சண்டிப்பூர் ஆகிய இடங்களில் உள்ளன. மாநில அரசின் கல்வி நிறுவனங்கள் ஆந்திராவில் வெங்கடகிரி, கர்நாடகாவில் கட்டாக், சதிஸ்கரில் சம்பா, கேரளாவில் கண்ணூர் ஆகிய பகுதிகளில் உள்ளன.

சேலத்தில் வழங்கப்படும் படிப்புகள்

* B.Tech - Handloom & textile Technology (4 Yrs)

* Post Diploma in Textile Processing

* Diploma - Handloom & Textile Technology (3 yrs)

* Handloom Entrepreneur (Certificate Course)

கேரளாவில் வழங்கப்படும் படிப்புகள்:-

* Clothing and Fashion Technology (CFT)

* Computer Aided Fashion Designing (CAFD)

* Computer Aided Textile Designing (CATD)

* Diploma in Handloom and Textile Technology (DHTT)

* Pattern Cutting Master Course (PCMC)

* Post Diploma in Home Textile Management (PDHTM)

ஆந்திரா, கவுகாத்தி, ஜோத்பூர், கர்நாடக என அனைத்து கல்விநிறுவனங்களிலும் மூன்று வருட படிப்பான டிப்ளோமா இன் ஹேண்ட்லூம் அண்ட் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிப்பு வழங்கப்படுகிறது. மேலும் வாரணாசி மற்றும் சேலம் நிறுவனங்கள் 18 மாத கால அளவிலான போஸ்ட் டிப்ளோமா இன் ஹோம் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் படிப்பை வழங்குகிறது.


வணிகவியல் துறையில் கால்பதிக்க எண்ணமா?

பனிரெண்டாம் வகுப்பு முடித்தாகிவிட்டது அடுத்து வணிகவியல் துறையில் கால்பதிக்க எண்ணமா?

பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வணிகவியல் துறையில் சிறந்து விளங்கலாம் . வணிகவியல் துறையானது இன்றைய காலகட்டத்தில் கோலோச்சும் துறையாக இருக்கின்றன .

வணிகவியல் துறையானது அனைத்து துறைக்கும் ஒரு வடிகாலாக இருக்கின்றன. உலகில் உள்ள அனைத்து துறைகளும் வணிகவியல் துறையின் சார்ந்தே இயங்குகின்றன. கணக்காளர் (அக்கவுன்டன்ட்) இல்லாத கம்பெனிகளே இல்லை என்று சொல்லலாம். வணிகவியல் துறைசார்ந்த பணியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

1. நிதி (ஃபினானஸ்)
2. கணக்குபதிவியல் (அக்கவுன்ட்ஸ்) 
3. சட்டம் (கமர்சியல் லா)
4. வரி விதிப்பு (டேக்ஸேசன்)
5. ஆடிட்டிங் 
6. மேலாண்மை (மேனேஜ்மெண்ட்) 
7. முதலீடு (இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்)
8. பொது வங்கியியல் (ஜெனரல் பேங்கிங்) 
9. ஆலோசகர் (கன்சல்டிங்)
10. கண்கானிப்பாளர் (சூப்பர்வைசிங்)
11. அறிக்கை தாக்கல் (ரிப்போர்டிங் )
12. முடிவெடுத்தல் (டெசிஸன் மேக்கிங்)

இன்னும் எண்ணற்ற பல துறைகளை கொண்டு இயங்குகின்றது. 

வணிகவியல் துறை

வணிகவியல் துறையானது அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டிய சூழலில் இருக்கின்றது. வணிகவியல் இன்றி ஒருதுறையும் இயங்காது என்பதனை நாம் அறிந்துள்ளோம். வனிக துறையில் B.com, B.com (honors), BA economics, BBA போன்ற பல இளங்கலை படிப்புகளும், CA, CS, ICWA இவற்றுக்கான foundation படிப்புகளும் உள்ளன.

வணிகவியல் படிப்புகள் படிக்கும் ஒரு நபர் வணிகம் சார்ந்த துறைகளில் செம்மை பெறுகிறார் . அத்துறையின் போக்குகுறித்தும் அவருகென்று மதிப்பீடு இருக்கும்.

படிப்புகள்

B.com: பிகாம் எனும் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பானது 3 வருட படிப்பாகும். இப்பட்டப்படிப்பானது அடிப்படை வணிகவியல் துறைப் படிப்பு ஆகும். மேலும் இது ஆரம்பகாலம் முதல் நடைமுறையில் இருக்கும் ஒரு துறையாகும் .  இப்படிப்பு எல்லா கலை-அறிவியல் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. மாறிவரும் உலகின் தேவைக்கேற்ப இப்படிப்பில் புதிய சிறப்பு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது,  

B.com specialization 

Mathematics 
Accountancy
Accounting and Taxation 
Accounting and Finance
Actuarial Science Advanced Accountancy
Advertising and Brand Management Applied Economics
Banking and Finance Banking and Insurance
Banking Management 
Business Administration
Business Economics 
Communicative English
Computer Application 
Computer Applications and Informatics
Computer Science 
Corporate Accountancy
Corporate Affairs and Administrations
Corporate Secretaryship
Customer Service Management 
e-Commerce
Electronic Education 
Executive Education
Executive Communication 
Financial Accounting
Financial Planning 
Foreign Trade Management
Functional English 
Garment Production 
Export Management
Hotel Management and Catering Human Resource Management
Industrial Management 
Information Systems
Information Technology 
Information Technology and its Application in Business
Jewellery Design and Technology Marketing and Advertising
Marketing Management 
Money and Financial System
Office Management and Secretarial Practices 
Principles and Practice of Accountancy
Principles of Management Professional Secretarial Practice Statistics
Supply Chain Management 
Tax Procedure and Practice
Taxation 
Tourism and Travel Management
B.Com + MBA Integrate 
Integrated B.Com (B.Com + M.Com)

B.com (honors) : பிகாம் ஹானர்ஸ் படிப்பானது பிகாம் துறையை போன்றது. பொதுவாக ஹானர்ஸ் படிப்பென்பது பிரதான பாடப்பிரிவுடன் சில சிறப்பு பாடங்களையும் உடன் சேர்வது பயில்வதைக் குறிக்கும். பிகாம் ஹானர்ஸ் படிக்கும் போது கணக்கியல் மற்றும் மேலாண்மை, பொருளாதாரம் சேர்த்து கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 

B.Com (Hons) Courses in India 

Accountancy 
Accounting and Finance
Banking and Insurance 
Computer Applications and e-Business
International Accounting 
Marketing and Retail Management
Marketing 
Marketing and Management
Taxation 
Entrepreneurship

BA (economics) : இந்த எக்கானிமிக்ஸ் துறையானது பனிரெண்டாம் வகுப்புக்குப்பின் பட்டப்படிப்பில் பொருளாதாரம் சார்ந்த கருத்துறைகள் கான்செப்ட்ஸ், பொருளாதார திட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தின் திரனாய்வு முறைகள், வங்கியின் செயல்பாடு போன்றவற்றை அறியலாம் . பொருளாதார கருத்துக்கள் உங்களது போட்டிதேர்வுக்கு இன்னும் உதவிகாரமாக இருக்கும் . 

BBA: பிபிஏ எனப்படும் இளங்கலை வணிக மேலாண்மை (Bachelor of Business Administration) வணிக மேலாண்மைத் துறையில் மேல்நிலை பள்ளிக்கல்வி பயின்றபின் பெறும் ஓர் பட்டமாகும். பல கல்வித்துறைகளிலிருந்தும் மாணவர்களைக் கவரும் இந்தக் கல்வித்திட்டம், 19வது நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவில் தொழில் புரட்சியின் விளைவாக எழுந்த வணிக வளர்ச்சியை அறிவியல் சார்ந்து முகவாண்மை செய்யக்கூடிய தேவை ஏற்பட்டதை யடுத்து, உருவாக்கப்பட்டது. 

Commerce Courses in India Apart from B.Com/B.Com (Hons) /B.A. in Economics:

BBA in Accounting and Finance
BBA in Banking and Finance 
BBA in Banking
BBA in Marketing and Finance Bachelor of Business Management (BBM) in Computer Application
Bachelor of Corporate Science Bachelor of Economics
B.Sc in Banking and Finance Bachelor in Financial Management
Bachelor of Business Studies Bachelor of System Administration
Final Course For Company Secretary Final Course for ICWAI (Institute of Cost and Work Accountants in India)
Foundation Course for Company Secretary 
Foundation Course for ICWAI
Intermediate Course for Company Intermediate Course for ICWA

பட்டய மற்றும் சான்றிதழ்படிப்புகள்:

மேல்நிலை பள்ளிக்கல்விக்கு பிறகு வனிக துறையில் மேற்சொன்ன இளங்கலையில் ஒரு பட்டம் பெற்று கேரியரை துவங்குவதுதான் சிறந்தது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் பட்டப்படிப்பை தொடர முடியாதவர்கள் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை தொடரலாம். 

பட்டய படிப்புகள் (Diploma)

Diploma Courses in India 

Accounting and Auditing Administrative Services
Advance Accounting Advance Cost Accounting
Banking and Finance Banking and Insurance
Banking Laws 
Banking Management
Banking Services 
Consumer Protection
Customs and Central Excise 
e-Commerce
Finance, Budget and Accounting Financial Accounting and Taxation
Financial Service 
Income Tax and Company Law
Mother and Child Health and Family Welfare 
Operational Research
Statistical Process Control and Operational Research 
Stock Analysis and Trading
Tally Software 
Taxation
VAT Rules Procedures 

சான்றிதழ் படிப்புகள் (Certificate courses)

Certification Courses in India 

Office Automation Operations Research with Applications in Engineering and Management
Applied Managerial 
Economics 
Banking
Central Excise 
Derivatives
e-Commerce 
Financial Accounting and Taxation
Financial Engineering and Risk Management 
Income Tax
Micro Finance 
Personal Management
Phonetics 
Stock Market
Tally 
VAT
Accounting 
Accounting Technicians
Certificate Programme on Capital Markets 
Certified Public Accountant 
Certified Management Accountant 
Chartered Financial Analyst 
Chartered Institute of Management Accountant

வேலைவாய்ப்பு

நிறுவனங்களில் CFO-விலிருந்து கீழுள்ள அக்கவுன்டன்ட் வரை அனைவரும் இத்துறையை எடுத்து பயின்றவர்கள்தான்.  மேலும் வங்கிகள், இன்சூரன்ஸ் எனும் காப்பீட்டு நிறுவனங்கள், பங்கு நிறுவனங்கள், முதலீடு நிறுவனங்கள் போன்றவை முழுக்க முழுக்க இத்துறையை சார்ந்தவர்களைக் கொண்டே இயங்குகின்றன. அதனால் சிறப்பான எதிர்காலம் நிச்சயம்.

மேற்படிப்பகள்:

M.com, MBA, MA, M.Phil, Ph.D, CA, CS, ICWA, Pg diploma என நிறைய படிப்புகள் உள்ளன. 

இன்னும் அடுத்தடுத்தப் படிப்புகள் அதன் வாய்ப்பு தொடர்ந்து அறிவோம் ....


நீங்கள் ஆடிட்டர் ஆக வேண்டுமா?

6 கல்வி முறைகள்

உலக அளவில் சிறந்து விளங்கும் 6 கல்வி முறைகள் இவைதான்!!! 
6 best Education System in the world

பண்டையக் காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் நம் தமிழ் அறிஞர்கள் பலரும் கல்வியைத் தான் தலைசிறந்த செல்வமாகக் கருதுகின்றனர். மனிதனின் அறிவியல் மற்றும் சமூகம் சார்ந்த ஆற்றலுக்கு அடிப்படையாக இருப்பது கல்வி தான் என்று வலியுறுத்தி சொல்லியும் இருக்கின்றனர். கல்வியின் முதன்மையான நோக்கம் நாம் கற்ற அறிவை மற்றவருக்கு எடுத்துரைப்பது தான். அறிவை போதிக்கும் போது நாம் ஆசானாக மாறுகிறோம். ஆசானாக இருப்பதற்கு முதலில் நாம் கல்வியைப் பயில வேண்டும். இதனால் தான் ஆங்கிலத்தில் “லேர்னிங் இஸ் கண்டினியூஸ் ப்ராசஸ்” என்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி முறையானது பணத்தைக் கொடுத்து அறிவை வாங்குவதாக இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கல்வி முறையானது எப்படி இருக்கிறது தெரியுமா? இந்த பதிவில் உலக அளவில் தலை சிறந்து விளங்கும் கல்வி முறை எது? எதனால் உலக மக்களால் அந்த கல்வி முறை அப்படி கருதப்படுகிறது? என்றும் பார்க்கலாம் வாங்க.

#1. நியூஜிலாந்து-New Zealand, இங்கே ஐந்து வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்களுக்கு செல்கின்றனர். உலக அளவில் தலை சிறந்த ஆன்லைன் எஜுகேஷன் சிஸ்டம் இங்கேதான் இருக்கிறது. சராசரியாக இருபத்தி ஐந்து குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்பதை கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு மாணவருக்கு நியூசிலாந்து அரசாங்கம் 12000 டாலரை செலவு செய்கிறது. இங்கே வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை வெறும் நான்கு சதவிகிதம்தானாம்.

#2. டென்மார்க்-DenMark, இங்கே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கண்டிப்பாக பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஒரு சட்டமே இருக்கிறதாம். சரியாக 2008 ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு தங்களது கல்வி முறையை முற்றிலுமாக மாற்றி கொண்டது டென்மார்க் அரசாங்கம். இங்கே ஒரு ஆசிரியரின் சம்பளமும் மருத்துவரின் சம்பளமும் ஒரே அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இங்கே கல்வி இலவசமாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

#3. சுவிட்ஜர்லாந்து-Switzerland, இந்த நாட்டில் ஒரு மாணவருக்கு 16000 டாலர்களை அந்த மாணவனின் கல்விக்காக அரசாங்கம் செலவிடுகிறது. இங்கே தொண்ணூறு சதவிகிதம் மக்கள் அவர்களது மேல் படிப்பை முடித்தவர்களாக இருக்கின்றனர். இங்கே படிக்கும் நூறு சதவிகித மாணவர்களுக்கு படித்தவுடன் வேலை கிடைக்கிறது. வெளிநாட்டிற்குச் சென்று படிக்க விரும்பும் ஒரு மாணவரின் படிப்பு செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறதாம்.

#4. நெதர்லாந்து-Netherland, மற்ற நாடுகளில் இருக்கும் கல்வி முறையை விட இங்கே இருக்கும் கல்வி முறையானது சற்றே மாறுபட்டு இருக்கிறது. இங்கே field education system பின்பற்றப்படுகிறது. இங்கே இருக்கும் எல்லா பள்ளிக் கூடங்களும் அரசாங்கப் பள்ளிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஒரு ஆசிரியருக்கு 7000 டாலர் சம்பளமாக இருக்கிறது. அரசாங்கத்தின் இலவசக் கல்வியைப் பயிலும் மாணவர் தனது 12 வது வயதில் மேலே என்ன படிக்கலாம்? எந்த துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சுயமாக முடிவு செய்ய முடியும்.

#5. சிங்கை-Singapore, இங்கே மொழியைத் தாண்டி கணிதத்திற்கும், அறிவியலிற்கும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நாட்டின் கல்வி முறையை பல நாடுகள் பின்பற்றுகின்றனர். அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 23 சதவிகிதம் மாணவர்களின் கல்விக்காக செலவிடப்படுகிறது. இங்கே ஒரு குழந்தை ஆறு வயதில்தான் பள்ளிக்குச் செல்கிறது. பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வியும், ஏதாவது ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

#6. ஃபின்லாந்து-Finland, இது ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ஆனால் இவர்களது கல்வி முறை உலக அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இங்கே ஒரு ஆசிரியரை அதிக அளவில் மதிக்கின்றனர். இங்கே மாணவர்களுக்கு ஆசிரியராக ஆவது தான் கனவாக இருக்கிறதாம். இந்த நாட்டில் ஏழு வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். 16 வயது வரை அவர்களுக்கு தேர்வுகளே கிடையாது.  

 – இந்த ஆறு கல்வி முறைகளும் தான் உலக அளவில் சிறந்த கல்வி முறைகளாக கருதப்படுகின்றது.

நன்றி: Maybemaynotbe